India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தோ-திபெத் படைப்பிரிவில் 345 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர்ஸ், ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர்ஸ், மெடிக்கல் ஆபீசர்ஸ் ஆகிய பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவ. 14ஆம் தேதி கடைசி நாளாகும். அதிகபட்ச வயது வரம்பு 50, 40, 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
5 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்டை நேற்றிரவு IMD வாபஸ் பெற்றது. இதையடுத்து வெளியிட்ட அறிவிப்பில், இன்று முதல் 6 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்றும், இன்று திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, வேலூரில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது. SHARE IT
ஆதார் வீணாகாமல் இருக்க சிலர் பிளாஸ்டிக்கில் அதை வாங்கி வைத்திருப்பர். இதை இன்டர்நெட் மையங்களிலோ, கடைகளிலோ வாங்கக் கூடாது. அப்படி வாங்கினால் அதில் போதிய பாதுகாப்பு அம்சம் இருக்காது என்பதால் அதை UIDAI அங்கீகரிக்கவில்லை. UIDAI மூலம் அளிக்கப்படும் பாதுகாப்பு அம்சம் கொண்ட பிளாஸ்டிக் ஆதாரே அனைத்து இடங்களிலும் செல்லும். அதை ஏற்க மாட்டோம் என அரசு அலுவலகங்களால் தெரிவிக்க முடியாது. SHARE IT
சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விடுக்கப்பட்ட அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் நேற்றிரவு விலக்கிக் காெண்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்றும், அரசு அலுவலகங்களும் வழக்கம் போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.
ஹரியானா CM ஆக 2ஆவது முறையாக பாஜக மூத்தத் தலைவர் நயாப் சைனி இன்று பதவியேற்கிறார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வென்றது. இதையடுத்து நேற்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக சைனி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஆளுநரை சந்தித்து அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது ஆளுநர் கேட்டு கொண்டதற்கிணங்க இன்று அவர் பதவியேற்கிறார்.
IPL 2025 தொடரில் ஆர்சிபி அணிக்காக ரோஹித் ஷர்மா விளையாடக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை அணியிலிருந்து அவர் விலகுவது ஏறத்தாழ உறுதியான நிலையில், அவரை ஆர்சிபி ஏலத்தில் எடுக்கலாமெனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அவர் IPL தொடரில், மும்பை அணியைத் தவிர்த்து டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். அப்போது 2009இல் அந்த அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
ரஜினியை வைத்து புதிய படத்தை மணிரத்னம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகின. இதுகுறித்து பிரபல நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதுபோன்ற திட்டம் இல்லை. அது வதந்தி என்று கூறியுள்ளார். இந்தத் தகவல், ரஜினி, மணிரத்னத்துக்கு கூட தெரியாது என்றும் கிண்டலடித்தார். ரஜினியை வைத்து மணிரத்னம் இயக்கிய தளபதி சூப்பர்ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
சிலரின் மொபைலில் டேட்டா வேகமாக தீரும். இதற்கு ஏற்கெனவே டெலிட் செய்த செயலிகளும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆதலால், செட்டிங்ஸ் சென்று, மேனேஜ் யுவர் கூகுள் அக்கவுண்ட் பகுதிக்குள் நுழைந்து, டேட்டா மற்றும் பிரைவசியை கிளிக் செய்ய வேண்டும். அப்போது டெலிட் செய்யப்பட்ட செயலிகள் வரும். இதையடுத்து கிளிக் ஆன் அசஸ், கனெக்ஷனை கிளிக் செய்து டெலிட் கொடுக்க வேண்டும். இதன்பிறகு, டேட்டா பகிர்வது நின்றுவிடும்.
பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவான் பகுதியில் 4 பேரும், சரண் பகுதியில் 2 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு பிகார் அரசு உத்தரவிட்டுள்ளது. பிகாரில் கடந்த 2016ம் ஆண்டு முதல் சாராயம் விற்கவும், குடிக்கவும் தடை உள்ளது.
டி20 பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் சஞ்சு சாம்சன் 65ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் அவர் அதிரடியாக 47 பந்துகளில் 111 ரன்கள் விளாசினார். இதன் எதிரொலியாக, ICC தரவரிசை பட்டியலில் முன்னேறியுள்ளார். நிதிஷ்குமார் ரெட்டி 72, ரிங்குசிங் 43, ஹர்திக் பாண்டியா 59ஆவது இடங்களுக்கு முன்னேறியுள்ளனர். ஜெய்ஸ்வால் ஓரிடம் பின்தள்ளப்பட்டு 6ஆவது இடத்தில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.