India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IND எதிரான போட்டியில் BAN அணி டாஸ் வென்ற நிலையில், முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், கில், கோலி, கே.எல் ராகுல், பண்ட், அஷ்வின், ஜடேஜா, ஆகாஷ் தீப், பும்ரா, சிராஜ் இடம்பெற்றுள்ளனர். BAN அணியில் ஷான்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன், ஜாகிர் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், நயீம் ஹசன் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக 2022இல் இருவரும் விலகி இருப்பதாக அறிவித்தனர். இது தமிழ் திரையுலகிலும், ரசிகர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா இன்ஸ்டாவில் பதிவிட்ட நிலையில், அதற்கு தனுஷ் லைக் செய்தார். இதன் மூலம் இருவருக்குமான மனக்கசப்பு நீங்கியுள்ளதாகத் தெரிகிறது.
மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்ததில் எந்த தவறும் இல்லை என திருமாவளவன் கூறியுள்ளார். மதுவை ஒழிக்க அனைவரும் சேர்ந்து செயல்படுவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுக மட்டும் தனியாக அழைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். அரசியலை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் 3 மாதங்கள் மட்டுமே கூட்டணி பணி, மற்ற 9 மாதங்கள் மக்கள் பணிதான் என்று அவர் விளக்கமளித்தார்.
சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து சாலையில் விட்டு சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார், உடலை கைப்பற்றி கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைநகரில் நடந்த பதைபதைக்க வைக்கும் இச்சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
IND-BAN இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் தொடங்கவுள்ளது. IND எதிராக இதுவரை 13 டெஸ்டில் விளையாடியுள்ள BAN அணி, ஒருமுறை கூட வென்றதில்லை. இந்திய அணி 11 போட்டியில் வென்றுள்ள நிலையில், 2 போட்டிகள் டிரா ஆனது. இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பெற BAN அணியும், டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியாவும் போராடும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
தனது குடும்பத்தினருடன் எர்ணாகுளத்திற்கு நவ்யா நாயர் நேற்று முன்தினம் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் சென்ற சிறுவன் ரமேசன் மீது லாரி மோதி நிற்காமல் சென்றது. இதை பார்த்த அவர், உடனடியாக ஆம்புலன்ஸுக்கு போன் செய்து வர சொல்லிவிட்டு, லாரியை துரத்தி சென்று மடக்கி, அதன் டிரைவரை போலீஸில் ஒப்படைத்தார். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் சிறுவனின் உயிரும் காப்பாற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 61.13% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதிகபட்சமாக கிஷ்த்வாரில் 80.14%, குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.65% வாக்குகள் பதிவாகியுள்ளன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின், தேர்தல் நடந்துள்ளது. வரும் 25, அக்.1 தேதிகளில் அடுத்த இரு கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது.
வீடு, கடை வாடகை உள்ளிட்ட சாதாரண ஒப்பந்த ஆவணங்களுக்கு ₹200 மதிப்புள்ள முத்திரை தாள்களை பயன்படுத்த பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. வீட்டு வாடகைக்கு பலரும், ₹20 பத்திரங்களையே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், குறைந்த மதிப்பிலான பத்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஒப்பந்தங்களை பதிவு செய்யாமல் வைத்துக் கொள்வதாக இருந்தாலும், ₹200 முத்திரைத் தாளையே பயன்படுத்துமாறு கூறியுள்ளது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டது. இந்த நாணயங்கள் மத்திய அரசின் இணையதளத்தில் விற்பனைக்கு வந்தன. நாணயம் ஒன்று ரூ.4,180 மற்றும் ரூ.4,470-க்கு விற்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் மொத்தமுள்ள 1,500 நாணயங்களும் விற்றுத் தீர்ந்தன. இதையடுத்து, அடுத்த வாரம் நாணயங்கள் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளன.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவில் பரவலாக மழை பெய்துள்ளது. தொடர்ந்து, காலையிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்திய நிலையில், தற்போது மழை பெய்வது மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா?
Sorry, no posts matched your criteria.