News October 17, 2024

IPL 2025: ஆர்சிபி அணியில் ரோஹித் ஷர்மா?

image

IPL 2025 தொடரில் ஆர்சிபி அணிக்காக ரோஹித் ஷர்மா விளையாடக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை அணியிலிருந்து அவர் விலகுவது ஏறத்தாழ உறுதியான நிலையில், அவரை ஆர்சிபி ஏலத்தில் எடுக்கலாமெனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அவர் IPL தொடரில், மும்பை அணியைத் தவிர்த்து டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். அப்போது 2009இல் அந்த அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News July 9, 2025

உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா? இதை கவனிங்க

image

30 வயது என்பது நடுத்தர வயதை நாம் நெருங்கப் போகிறோம் என்பதை உணர்த்தும் மைல்கல். இந்த வயதில் ஆரோக்கியம் பராமரிக்க: ➤கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். ➤வேலைபளு காரணமாக உணவை தவிர்க்க கூடாது. ➤தினமும் 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம் ➤தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி ➤மது, புகைப்பிடித்தல் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ➤குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேச வேண்டும். இது புத்துணர்ச்சியை கொடுக்கும்.

News July 9, 2025

வீட்டை காலி செய்ய வந்த அதிகாரி.. இறந்து கிடந்த நடிகை

image

பாக்., <<17004189>>நடிகை Humaira Asghar <<>>மரணம் குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. வாடகை வீட்டுக்கு ஓராண்டாக பணம் கொடுக்காததால் உரிமையாளர் வழக்குத் தொடுத்துள்ளார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி, நடிகையை வீட்டில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் வந்தபோது துர்நாற்றம் வீசவே, கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அவர் சடலமாக கிடந்தார். 15 நாளுக்கு முன்பு இறந்தது தெரிய வந்தது.

News July 9, 2025

புதுச்சேரியில் சுயேச்சை எம்எல்ஏ திடீர் ராஜினாமா

image

புதுச்சேரியில் சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நேரு. அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் மற்றும் அரசு கொறடாவிடம் வழங்கியுள்ளார்.

error: Content is protected !!