India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெளிநாட்டு பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். 4 முறை வெளிநாடு பயணம் செய்தும் தமிழகத்திற்கு குறைவான முதலீடு வந்துள்ளதாகவும், ஆனால் அரசு அதுபற்றிய முறையான தகவலை பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 17 நாள் அமெரிக்க பயணத்தில் ரூ.7,618 கோடி முதலீடு மட்டுமே முதல்வரால் திரட்ட முடிந்ததாகவும் விமர்சித்துள்ளார்.
தென்னிந்தியாவை தனது கண்களால் கட்டிப்போட்ட சில்க் ஸ்மிதாவின் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஒப்பனையாளராக திரைத்துறை பயணத்தை தொடங்கிய இவர், தனது அழகால் நடிகையாக உயர்ந்து, 17 ஆண்டுகள் திரைவானில் உச்ச நட்சத்திரமாக ஒளிர்ந்தார். கவர்ச்சியில் மட்டுமல்ல குணசித்திர வேடங்களிலும் முத்திரைப் பதித்துள்ளார். நக்சல்பாரி ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திய இந்த தேவதையின் புகழை இன்றும் யாராலும் தொடமுடியவில்லை.
ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம் விலை இன்று ₹20 உயர்ந்து ₹6,980ஆக விற்கப்படுகிறது. இதேபோல் 1 சவரன் தங்கம் ₹160 அதிகரித்து ₹55,840ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கம் விலையில் புதிய உச்சம் ஆகும். அதேநேரத்தில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி ₹98ஆகவும், 1 கிலோ வெள்ளி ₹98,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
போலீசால் நேற்று கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சி.டி. மணி சிறையில் அடைக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு, சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பிரபல ரவுடிகள் அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று கைதான சி.டி. மணியை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பாேலீசார் இன்று சிறையில் அடைத்தனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு தளபதி போல இருந்தவர் திருநாவுக்கரசர். பிறகு கருத்து வேறுபாடால் அதிமுகவில் இருந்து விலகி பாஜக, காங்கிரஸ் என மாறினார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வாய்ப்பு தராததால் அதிருப்தியில் அவர் ஒதுங்கி இருப்பதாகவும், விரைவில் அவர் அதிமுகவுக்கு திரும்பக்கூடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கறீங்க? உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
தோல்வி அடைந்தால் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் ட்ரம்ப் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த நேர்காணலில், 2024 தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார். 4ஆவது முறையாக (2028) தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப் (78) தேர்தலில் வெற்றிபெறுவது எளிதாக இருக்காது என ஊடகங்கள் கணித்துள்ளன.
விஜய்யிடம் தாம் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கும்படி கேட்டதாக வெளியான செய்திகள் வதந்தி என்று சிம்ரன் குற்றம்சாட்டியுள்ளார். விஜய்யை சந்தித்து தனது படத்தில் நடிக்கும்படி சிம்ரன் கேட்டதாகவும், ஆனால் விஜய் மறுத்து விட்டதாகவும் செய்தி பரவி வருகிறது. இதை மறுத்து சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவில், அது வதந்தி என்றும், எந்த பெரிய ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்ற நான் காத்து கிடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
விஜய் அனைவருக்கும் பொதுவானவர் இல்லை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். விநாயக் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்க முடியாத அவரால், பெரியார் திடலுக்கு சென்று அஞ்சலி செலுத்த முடிவதாகவும் விமர்சித்துள்ளார். இந்து பண்டிகையை தவிர்த்து மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதை ஏற்க முடியாது எனவும், விஜய்யின் இந்த அரசியலை மக்கள் முழுவதும் நிராகரிப்பார்கள் என்றும் கூறினார்.
மக்களுக்காக பணியாற்றும் மோடி இந்தியாவின் நவயுக நாயகனாக திகழ்வதாக பாஜக எம்பி கங்கனா கூறியுள்ளார். சிம்லாவில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அவர், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழல் பெருகி, மாநில அரசின் கஜானா காலியாகி விட்டதாகவும் விமர்சித்தார். பேரிடர்களுக்கு பொதுமக்கள் அளிக்கும் நிவாரண நிதி, முதல்வர் அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்து சோனியா காந்திக்கு செல்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரான் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 51 பேர் பலியாகினர். ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள தபாஸ் சுரங்கத்தில் வழக்கம் போல தொழிலாளர்கள் 70 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுரங்கத்திற்குள் திடீரென மித்தேன் கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுரங்கத்தின் 2 அலகுகளில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து ஈரான் அதிபர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.