India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிண்டி ரேஸ் மைதானத்தை பசுமை பூங்காவாக மாற்றும் தமிழக அரசின் முடிவை அன்புமணி வரவேற்றுள்ளார். கிண்டியில்118 ஏக்கரில் பூங்கா அமைக்கப்படுவது சென்னையின் ஒட்டுமொத்த பரப்பளவுக்கு போதுமானது இல்லை என்றும், பயன்பாட்டில் இல்லாத கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தையும் பூங்காவாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது. வேளச்சேரியில் துப்பாக்கியை காட்டி பணம் பறித்த வழக்கிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் மீது கொலை வழக்குகள் உள்பட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. 10 வழக்குகளில் வாரண்ட் இருந்தும் நேரில் ஆஜராகாமல் சீசிங் ராஜா தலைமறைவாக இருந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.
சீசிங் ராஜா போலீசாரை நோக்கி சுட்டதால், தற்காப்புக்காக அவரை போலீசார் சுட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் பேட்டியளித்த இணை ஆணையர் சி.பி சக்கரவர்த்தி, ஆந்திராவில் சீசிங் ராஜா கைது செய்யப்பட்டு போலீசார் கஸ்டடியில் இருந்ததாகவும், ஆனால் போலீசிடம் இருந்து தப்பித்துச் செல்லும் நோக்கில் கள்ளத்துப்பாக்கியை எடுத்து போலீசாரை சீசிங் ராஜா சுட்டதாகவும் குறிப்பிட்டார்.
விசிகவின் மதுஒழிப்பு மாநாடு நாடகம் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் பேட்டியளித்த அவர், மது ஒழிப்பு மாநாடு நாடகத்தை முதல்வர் ஸ்டாலினும், விசிக தலைவர் திருமாவளவனும் இணைந்து அரங்கேற்றியுள்ளதாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்றும், தொடர் கொலைகள் நிகழ்ந்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிறார் அடங்கிய ஆபாச படங்களைப் பார்ப்பது குற்றமல்ல என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. CJI சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மின்னணு சாதனங்களில் தனிப்பட்ட முறையில் சிறார் ஆபாசப் படங்களை சேமித்து வைப்பதும் பார்ப்பதும் சட்டப்படி குற்றம் எனவும், இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யவும் பரிந்துரைத்துள்ளது.
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே (75) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய அதிபர் தனது அமைச்சரவை உருவாக்குவதற்கு வசதியாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிபர் அனுர குமார திசநாயகேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022 ஜூலை முதல் தினேஷ் குணவர்த்தனே இலங்கை பிரதமராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
*செய்+கை = செய்கை. அந்த அசைவு மொழியே சைகை மொழியாக மாறியது. *சைகை மொழி என்பது வெறும் கைகளால் மட்டுமல்ல; முகம் & வடிவ பாவனை, உடல் அசைவு மூலமாகவும் சைகை மொழி பேசப்படுகிறது. *இம்மொழிக்கும் இலக்கணம் உண்டு. *சரியான செய்கையும், இமை & உடல் அசைவுமே கேள்விக்கும் பதிலுக்குமான வேற்றுமையை புரிய வைக்கும். *உலகில் 7 கோடி மாற்றுத்திறனாளிகள் (காது கேளா & வாய் பேசா) இம்மொழியை பேசுகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் தண்டவாளத்தில் டெட்டனேட்டர் மூலம் ராணுவ ரயிலை கவிழ்க்க சதி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடக்கிறது. ரத்லாம் என்ற இடத்தில் 18ம் தேதி ராணுவத்தினருக்கான சிறப்பு ரயில் செல்லும் தண்டவாளத்தில் 10 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தவறுதலாக நடந்ததாக ரயில்வே கூறிய நிலையில், கேங்மேன், சிக்னல்மேன், டிராக்மேனை சந்தேகத்தின்பேரில் பிடித்து ராணுவம் விசாரிக்கிறது.
இலங்கை அதிபராக அனுரகுமார திசநாயக பதவியேற்றார். நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலில் அவர் பெரும்பான்மை பெற்றதையடுத்து இலங்கையின் 9ஆவது அதிபராக இன்று பதவியேற்றார். அவருக்கு இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இலங்கையின் களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த இவர், கல்லூரி நாள்களிலேயே மாணவர் அரசியலில் ஈடுபட்டார்.
1) உலகில் திரையரங்குகளே இல்லாத ஒரே நாடு எது? 2) ஒரு ஒளியாண்டு என்பது எத்தனை கி.மீ ? 3) தொல்லியல் துறையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 4) HTTP என்பதன் விரிவாக்கம் என்ன? 5) புதைப்படிவப் பறவை என்று கருதப்படும் உயிரினம் எது? 6) அரிகேசரி என அழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் யார்? 7) பச்சையம் இல்லாத தாவரம் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
Sorry, no posts matched your criteria.