news

News September 23, 2024

மத்திய அரசுக்கு ஷாக் தொடுத்த சர்வே

image

UPI பண பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு சேவை கட்டணம் வசூலிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இது UPI பயனர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து Local Circles அமைப்பு சர்வே ஒன்றை இந்தியா முழுவதும் நடத்தியுள்ளது. அதில், பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணம் விதிக்கக்கூடாது என 75% UPI பயனர்கள் வலியுறுத்தியுள்ளனர். கட்டணம் விதித்தால் UPI-ஐ பயன்படுத்த மாட்டோம் எனவும் கூறியுள்ளனர்.

News September 23, 2024

10 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்

image

தெலங்கானாவை சேர்ந்த 10 எம்எல்ஏக்களுக்கு அந்த மாநில ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரஜாசாந்தி கட்சியைச் சேர்ந்த 10 பேரும் பதவிகளை ராஜினாமா செய்யாமல் காங்கிரசில் சேர்ந்து விட்டதால் தகுதிநீக்கம் செய்யக்கோரி, அக்கட்சித் தலைவர் கே.ஏ. பால் வழக்குத் தொடுத்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம், பதில் மனுத்தாக்கல் செய்யக்கோரி 10 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தது.

News September 23, 2024

சட்டம் அறிவோம்: BNS பிரிவு 139 என்ன சொல்கிறது?

image

இளஞ்சிறார்களைக் கடத்துவது (அ) அவர்களது சட்டப்பூர்வ பாதுகாவலர்களிடம் இருந்து பிரித்து, எடுத்து சென்று வணிக நோக்கில், சிறாரின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைப்பது (அ) துன்புறுத்தி பிச்சை எடுக்க வைப்பது போன்ற செயலில் ஈடுபடுவதும் BNS சட்டம் 139 இன் படி குற்றமாகும். இதற்கு ஆயுள் சிறை முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை (அ) அபராதம் (அ) இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

News September 23, 2024

‘கொட்டுக்காளி’ படத்திற்கு ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது

image

பி.எஸ்.வினோத் இயக்கி சூரி நடித்த ‘கொட்டுக்காளி’ படம் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வென்றுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்த இப்படத்தில் நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆக.23இல் வெளியான இந்த படம் பொதுமக்களின் பாராட்டை பெற்றது. மேலும் இந்த படமானது ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச விருதுகளை பெற்றது. ரஷ்யாவில் நேற்று நடந்த விழாவில் இந்த விருதை இயக்குநர் பி.எஸ்.வினோத் பெற்றுக்கொண்டார்.

News September 23, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு <<14171160>>GK <<>>வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) சவுதி அரேபியா 2) 9.7 டிரில்லியன் கி.மீ 3) ஃபிளிண்டர்ஸ் பெட்ரி 4) Hyper Text Transfer Protocol 5) ஆர்க்கியாப்டெரிக்ஸ் 6) நின்ற சீர் நெடுமாறன் 7) நியூரான். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News September 23, 2024

ஆப்பிள் போன் பயனர்களுக்கு மத்திய அரசு வார்னிங்

image

ஐபோன், ஐபேட் மற்றும் மேக் பயனர்களுக்கு இந்திய கணினி அவசரநிலை நடவடிக்கை அமைப்பு (Cert-In) எச்சரிக்கை விடுத்துள்ளது. iOS, iPadOS, macOS தளத்தில் செயல்படும் ஐபோன், ஐபேட் தாக்குதலுக்கு ஆளாகலாம், அவற்றில் உள்ள முக்கிய தகவல்கள் திருடு போகலாம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. உடனடியாக அவற்றை பயன்படுத்தும் ஐபோன், ஐபேட் மற்றும் மேக் பயனர்கள், சாப்ட்வேரை அப்டேட் செய்யும்படி அது கேட்டுள்ளது.

News September 23, 2024

அதிமுக EX MLA மீது 4 மாதத்தில் குற்றப்பத்திரிகை: DVAC

image

அதிமுக EX MLA சத்யா மீதான வழக்கில் 4 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கலாகும் என HC-இல் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். வழக்கு விசாரணையின் போது, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஏன் காலதாமதம் ஆகிறது என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். தி.நகர் MLA-ஆக இருந்தபோது பண முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், ரூ.2.64 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News September 23, 2024

MQ-9B பிரிடேட்டர் ட்ரோன்களை வாங்கும் இந்தியா?

image

அமெரிக்காவின் MQ-9B Predator ட்ரோன்களை வாங்க இந்தியா தயாராக இருப்பது தெரிந்ததே.
இரு நாடுகளும் இடையேயான உளவுத்துறை & தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்த பாதுகாப்பு துறை சார்ந்த $3.9 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் சீ கார்டியன்ஸ் (15) & ஸ்கை கார்டியன்ஸ் (16) ட்ரோன்களும் கொள்முதல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

News September 23, 2024

குட்கா வழக்கில் நேரில் ஆஜராக EX அமைச்சர்களுக்கு HC உத்தரவு

image

குட்கா முறைகேடு வழக்கில் சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அக்.14இல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் கூறியதையடுத்து, வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் டிஜிபி உள்ளிட்ட 21 பேரையும் நேரில் ஆஜராக அறிவுறுத்தியுள்ளது.

News September 23, 2024

மூலிகை: பெருங்குடலை காக்கும் சுண்டைக்காய்

image

பெருங்குடல் பகுதிகளில் இருக்கும் கிருமிகளை அழித்து, செரிமானப் பாதையைப் பாதுகாக்கும் ஆற்றலை சுண்டை கொண்டிருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. டார்வனால், டார்வோசைட், குவர்செடின், கேம்ஃபெரால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த அதன் வற்றலை அரைத்து பொடியாக்கி, ஐந்து சிட்டிகை அளவு எடுத்து மோரில் கலந்து அருந்தினால் கழிச்சலும், ஆசனவாய் எரிச்சலும் குறையும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!