India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காவிரி பாயும் பெருமை வாய்ந்த தஞ்சையின் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது தஞ்சை மாமணிக் கோயில். 108 திவ்ய தேசங்களில் மங்களாசாசனத் தலமென்ற பெருமை பெற்ற இந்த திருத்தலத்தில் பராசரருக்கு திருமால் காட்சி தந்து, மோட்ஷம் அளித்ததாக புராணம் கூறுகிறது. இங்கு சென்று செங்கமலவல்லி சமேத நீலமேகப் பெருமாளுக்கு ஏலக்காய் மாலை சாற்றி, 16 நெய் விளக்கேற்றி வழிபட்டால், குன்றா செல்வப் பேறுகளும் கிட்டும் என்பது ஐதீகம்.
மாணவர்கள் உள்ளத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பரப்பும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் ஒரு நாடு ஒரு தேர்தல், விக்ஷ்த் பாரத் போன்ற திட்டங்கள் பற்றி மாணவர்களிடையே போட்டி நடத்த மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்நிலையில், பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் பாஜக திட்டங்கள் குறித்த போட்டி நடத்துவதை அவர் கண்டித்துள்ளார்.
இஸ்ரேல் படைகள் மீது முதல் முறையாக லெபனான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருவதை போல், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டு வருகிறது. அவர்களை குறிவைத்து சில நாள்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை நேற்று நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 90 தொகுதிகளை கொண்ட அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 1 மாதமாக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். காங்கிரஸ், பாஜக இடையே பலத்த போட்டி நிலவும், அம்மாநிலத்தில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்.8இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
‘மெய்யழகன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரேம் குமார் இயக்கிய இப்படத்தில் கார்த்தி நாயகனாகவும், அரவிந்த் சாமி முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். கடந்த 27ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், படத்தின் நீளம் தொடர்பாக விமர்சனம் எழுந்தது. இதனால் படக்காட்சிகள் குறைக்கப்பட்ட நிலையில், நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது Xஇல் வெளியாகியுள்ளது.
மகளிர் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த PAK அணி 116 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடி இலங்கை அணியால் 85 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 30 ரன் மற்றும் 2 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சானா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்காது என்று ஜோ பைடன் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உள்ளது என்றும், ஆனால் அது வரையறுக்கப்பட்ட தாக்குதலாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீதான பதில் தாக்குதலில் பங்கேற்கப் போவதில்லை என பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இருநாடுகளும் அறிவித்துள்ளன.
மகளிர் T20 உலகக் கோப்பையில் இந்தியா இன்று தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இந்திய நேரப்படி இப்போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றதில்லை. கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றது. இம்முறை உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
▶1884 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த தினம்
▶1904 – இந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் பிறந்த தினம்
▶1941 – காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பிறந்த தினம்
▶1998 – தமிழறிஞர் சாலை இளந்திரையன் நினைவு தினம்
▶2003 – இஸ்ரேலில் உணவகத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபர் விஜய் டாடா புகாரில் பேரில் பெங்களூரு போலீசார் அவர் மீது FIR பதிவு செய்துள்ளனர். மக்களவைத் தேர்தல் நேரத்தில் நன்கொடை அளிக்க குமாரசாமி வலியுறுத்தியதாகவும், பணம் தர மறுத்தால் பெங்களூருவில் தொழில் செய்ய முடியாது என தன்னை மிரட்டியதாகவும் போலீசாரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.