India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கிகளுடன் வந்த நபரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு டிரம்புக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோசெல்லாவில் நடந்த கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்ற நிலையில், அங்கு போலி பாஸுடன் வந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் கைது செய்தனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு 4 நாள்களுக்கு மிக கனமழை (ஆரஞ்ச்) எச்சரிக்கையும், ஒரு நாள் அதி கனமழை (ரெட் அலர்ட்) எச்சரிக்கையும் RMC விடுத்துள்ளது. இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் மிக கனமழை பெய்யக்கூடும் என RMC கூறியுள்ளது. 16ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. ₹1,028 மற்றும் ₹1,029 விலையை அந்தத் திட்டங்களுக்கு ஜியோ நிர்ணயித்துள்ளது. இதில் ₹1,028 திட்டமானது, 84 நாள் வேலிடிட்டி கொண்டது. 4ஜி எனில் தினமும் 2 ஜிபி டேட்டாவும், 5ஜி எனில் அன்லிமிடெட் டேட்டாவும், 100 எஸ்எம்எஸ்-சும் வழங்குகிறது. ₹1,029 திட்டத்தில், ₹1,028 திட்ட பயன்களுடன் சேர்த்து, Amazon Prime Lite membership அளிக்கிறது.
SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் நிலையிலான பதவிகளில் காலியாக இருக்கும் 1,497 இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கான விண்ணப்பப்பதிவு SBI வங்கியின் இணையதளமான sbi.co.in.இல் நடைபெறுகிறது. EWS, OBC, பொது பிரிவினர் ரூ.750 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.
தெற்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. தமிழக உள் பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடலிலும் தலா 1 வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும் RMC குறிப்பிட்டுள்ளது. இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி 48 மணி நேரத்தில் நகரும் என்றும் கூறியுள்ளது.
பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட திமுகவினர் தயாராக இருக்க வேண்டுமென்று அக்கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மழைக்காலத்தில் திமுகவினர், அரசு, பொதுமக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகள், தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்து மேல் நடவடிக்கைக்கு வழிவகை செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
1956: சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறினார்.
1981: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிறந்தார்.
1998: அமர்த்தியா சென் நோபல் விருதை பெற்றார்.
1943: பிலிப்பைன்ஸ் சுதந்திரம் பெற்றது.
1957: நடிகர் பார்த்திபன் பிறந்தார்.
1985: நடிகை நவ்யா நாயர் பிறந்தார்.
2025 IPL வீரர்கள் ஏலத்தை சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், சவூதி அரேபியாவின் ரியாத், ஜெட்டாவில் நடத்துவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அத்தகவல் கூறுகிறது. முன்னதாக, 2024ம் ஆண்டு IPL வீரர்கள் ஏலத்தை துபாயில் பிசிசிஐ நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பாக்கெட் லைட்டர் பாகங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாக்கெட் லைட்டர், கியாஸ் லைட்டர் பாகங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும், சீனாவைச் சார்ந்திருப்பதை குறைக்கும் வகையிலும் இந்த முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
MI பயிற்சியாளராக ஜெயவர்த்தனே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2017-22 வரை ஏற்கெனவே பயிற்சியாளராக அவர் இருந்துள்ளார். அவரது காலத்தில் 5 முறை MI கோப்பையை வென்றது. இதையடுத்து, அதன் சர்வதேச தலைவராக 2 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். எனவே, தெ.ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் காலத்தில் 2023, 24 ஐபிஎல்லில் அந்த அணி சரியாக விளையாடவில்லை.
Sorry, no posts matched your criteria.