India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. நியூசி. அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் காெண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட், ஹைதராபாத்தில் நாளை முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 2 அணிகள் இடையேயான கடந்த 5 டெஸ்டுகளில் நியூசி. 3இல் வென்றுள்ளது. இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.
தமிழகத்தில் 1,000 இடங்களில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் சளி, சேற்றுப்புண் போன்றவற்றுக்கு சிகிச்சை பெறலாம் என சுகாதாரத்துறை கூறியுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதால் அனைத்துத் துறை அலுவலர்களும் தயார்நிலையில் இருக்கவும், எந்த கிராமத்தில் காய்ச்சல் என்றாலும் உடனே அங்கு முகாம் நடத்தவும் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
11 அத்தியாவசிய மருந்துகளின் விலையை 50% அதிகரிக்க தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்துகள், ஆஸ்துமா, மனநிலை பாதிப்பு, தலசமியா போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுபவை ஆகும். நிதியின்மை காரணமாக மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கவும், சந்தையில் பாேதிய அளவில் அவை கிடைப்பதை உறுதி செய்யவும் விலை உயர்வுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
இன்று (அக். 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
திமுக அரசை கண்டித்து 3 நகரங்களில் நடத்தப்படவிருந்த பொதுக் கூட்டங்கள்
ஒத்தி வைக்கப்படுவதாக பாமக அறிவித்துள்ளது. திமுக அரசைக் கண்டித்து வருகிற 17ஆம் தேதி வடலூர், 20ஆம் தேதி திண்டிவனம், 26ஆம் தேதி சேலத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என பாமக அறிவித்திருந்தது. இந்நிலையில், பருவமழை காரணமாக அக்கூட்டங்கள் டிசம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர், இந்தியின் டாப் ஹீரோவான அமீர் கானை வைத்து புதிய படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஹீரோ கதை குறித்து அமீர்கானிடம் லோகேஷ் கனகராஜ் தெரிவித்ததாகவும், அமீர்கான் ஓகே சொன்னதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக் கூடும் என்றும் அத்தகவல் தெரிவிக்கிறது.
இன்று (அக்.15) காலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை RMC வெளியிட்டுள்ளது. 1) இடி மின்னலுடன் மழை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், திருப்பத்தூர், திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி. 2) லேசான மழை: கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல்.
1542: முகலாயப் பேரரசர் அக்பர் பிறந்தார்.
1815: நெப்போலியன் போனாபார்ட் செயின்ட் ஹெலினா தீவில் சிறை வைக்கப்பட்டார்.
1918: சீரடி சாய்பாபா மறைந்தார்.
1931: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தார்.
1935: டாடா நிறுவனம் முதல் விமான சேவையை தொடங்கியது.
சர்வதேச மாணவர்கள் தினம்
சர்வதேச கை தூய்மை தினம்
ரஞ்சி கோப்பை போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203/10 ரன்களும், தமிழ்நாடு அணி 367/10 ரன்களும் எடுத்திருந்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. TN அணியில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 82, ஜெகதீசன் 100 ரன்கள் எடுத்தனர்.
மின் சேவைகள் மற்றும் தடை குறித்து, 24 மணி நேரமும் செயல்படும் 94987 94987 மொபைல் எண்ணில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை, அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போது மின்சேவைகள் தடைபட்டாலோ, மின்தடைகள் ஏற்பட்டாலோ இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.