India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை PVR திரையரங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘வேட்டையன்’ படம் பார்த்து ரசித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. த.செ.ஞானவேல் இயக்கத்தில், ரஜினி, அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. முன்னதாக, இப்படத்தை விஜய் திரையரங்கில் பார்த்த வீடியோ வைரலானது.
தண்ணீர், பூச்சிகளால் பரவும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை தடுக்க, சுகாதாரமற்ற நீரில் வாய் கொப்பளிப்பதை தவிர்க்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.*வீட்டு தண்ணீர் தொட்டியில் குளோரின் பயன்படுத்தவும் *குடிநீரை நன்கு கொதிக்க வைத்து அருந்தவும் *சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவவும் *நீரில் நனைந்த உணவு பொருள்களை உண்ணக்கூடாது எனவும் பரிந்துரைக்கின்றனர்.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது. இது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதி மேல் தற்போது நிலவி வருகிறது. இதனால், 2 நாள்களுக்கு பின் சென்னையில் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.
‘லப்பர் பந்து’ படத்தின் ஓடிடி தேதியை ஒத்திவைப்பதாக சிம்ப்ளி சவுத் அறிவித்துள்ளது. அதில், ”லப்பர் பந்து இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், அதன் ஸ்ட்ரீமிங் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். புதிய ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது. இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் சிம்ப்ளி சவுத்தில் வெளியாக இருந்தது. இதனால் இந்தியாவில் Hotstarலில் நாளை வெளியாகாது.
ரயில்வேயில் 3,445 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைய இன்னும் 3 நாள்களே உள்ளன. டிக்கெட் கிளார்க், அக்கவுண்ட் கிளார்க், ஜூனியர் கிளார்க், ட்ரெயின் கிளார்க் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பப்பதிவு செப்.21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சம்பளம்: ரூ.19,900 – ரூ.21,700. வயது வரம்பு: 18 – 33. SHARE IT.
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் அமைப்பின் அனைத்து பொறுப்புகளும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மகளிர் காங்கிரசின் தலைவி, அல்கா லம்பா உத்தரவின் பேரில், மகளிர் காங்கிரசின் அனைத்து மட்டத்திலுமான மாநில, மாவட்ட, வட்ட, வட்டார, பஞ்சாயத்து கமிட்டிகள் கலைக்கப்பட்டுள்ளன. அத்துடன், உறுப்பினர் சேர்க்கை குழுவின் புதிய உறுப்பினரை, புதிய கமிட்டி விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசூதிக்குள் “ஜெய் ஸ்ரீராம்” என கோஷம் எழுப்பியதாக இருவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை கர்நாடக ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறுவதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். மேலும், எல்லா செயல்களுக்கும் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி வழக்கு பதிவு செய்ய முடியாது என்ற உச்சநீதிமன்ற கருத்தையும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக – கேரள எல்லைப் பகுதியில் கொட்டப்படும் கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து ‘அலங்கு’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ’உறுமீன்’, ’பயணிகள் கவனிக்கவும்’ போன்ற படங்களை இயக்கிய S.P. சக்திவேல் இயக்கியுள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக குணாநிதி நடித்துள்ளார்.
இந்தோ-திபெத் படைப்பிரிவில் 345 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர்ஸ், ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர்ஸ், மெடிக்கல் ஆபீசர்ஸ் ஆகிய பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவ. 14ஆம் தேதி கடைசி நாளாகும். அதிகபட்ச வயது வரம்பு 50, 40, 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
5 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்டை நேற்றிரவு IMD வாபஸ் பெற்றது. இதையடுத்து வெளியிட்ட அறிவிப்பில், இன்று முதல் 6 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்றும், இன்று திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, வேலூரில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது. SHARE IT
Sorry, no posts matched your criteria.