India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மது குடிப்பது 7 வகை கேன்சர் வரும் ஆபத்தை அதிகரிப்பதாக அண்மை ஆய்வு முடிவு எச்சரிக்கிறது. அதன்படி, மதுகுடிப்பதற்கும் கேன்சர் ஏற்படுவதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. மது குடிப்பதால், வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் & மார்பகம் பகுதிகளில் கேன்சர் ஏற்படுகிறது. டெய்லி குடித்தாலும், கொஞ்சமா தான் குடிக்கிறேன் என்று சொல்பவர்களுக்கும் கூட இந்த எச்சரிக்கை பொருந்துமாம்.
ஆளுநர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் புறக்கணிக்கப்பட்டதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி என்றும், திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட்டின் தாயார் ராஜாமணி (83) காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் இயற்கை எய்தியதாக போஸ் வெங்கட் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராஜாமணியின் இறுதிச் சடங்கு நாளை மாலை அறந்தாங்கியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ் வெங்கட் இயக்கிய சார் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
ஜம்மு- காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று அந்த யூனியன் பிரதேசத்தின் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான கேபினட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, அவர்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு அதிகாரம் தேவை. இதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றார்.
‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் நடிகர் விஜய்யை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அறிமுகப்படுத்தினார். ஆனால், அதற்கு முன்னதாக மற்ற இயக்குநர்களின் படத்தில் விஜய்யை அறிமுகப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில், ‘சேதுபதி ஐபிஎஸ்’, ‘மன்னன்’, ‘சந்திரமுகி’ படங்களின் இயக்குநர் பி.வாசுவையும் சந்திரசேகர் அணுகியுள்ளார். ஆனால், சில காரணங்களால் விஜய்யின் முதல் படத்தை இயக்க அவர் மறுத்துவிட்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வருக்கு ஆளுநர் ரவி பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக முதல்வர் கூறும் குற்றச்சாட்டு பொய். ஒவ்வொரு விழாவிலும் தமிழ்த்தாய் பாடலை துல்லியமாக பாடுபவன் நான். இது முதல்வருக்கும் தெரியும். ஆனால், வேண்டுமென்றே என் மீது இனவாத குற்றச்சாட்டை முதல்வர் வைத்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவுக்கு 12,000 ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென்கொரிய உளவு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதால், அதற்கு எதிரான அரசியலை வடகொரியா கடைபிடித்து வருகிறது. இதன் காரணமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் அந்நாட்டுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. இதற்கு கைமாறாக, உக்ரைனுக்கு எதிரான போரில் உதவ, வீரர்களை அனுப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழ்தாய் வாழ்த்து பாடுவதில் நடந்த தவறுக்கு ஆளுநர் பொறுப்பாக மாட்டார் என தமிழிசை கூறியுள்ளார். DD தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி மாத விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டாரே தவிர, நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கும் அவருக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். தமிழ்தாய் வாழ்த்து பாடலை பாடியவர்களுக்கு போதிய பயிற்சியின்மையே நடந்த தவறுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் ரவீந்தர் வெளியேறியதையடுத்து, தற்போது வீட்டில் 17 பேர் இருக்கின்றனர். இந்த வாரம் நாமினேஷனில் VJ விஷால், சௌந்தர்யா, தர்ஷா குப்தா, ரஞ்சித், தீபக், ஜாக்குலின், ஜெஃப்ரி, சாச்சனா, அர்ணவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் அர்ணவ் மற்றும் தர்ஷா குறைவான வாக்குகளைப் பெற்று பின்தங்கியுள்ளனர். எனவே இவர்கள் இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறலாம் என தெரிகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது ஏற்பட்ட குளறுபடிக்கு DD தமிழ் நிர்வாகமான பிரசார் பாரதி மன்னிப்பு கேட்டுக் கொண்டது. கவனக்குறைவால் இந்த தவறு நடந்துவிட்டதாகவும், தமிழையோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், வேண்டுமென்று யாரும் இதனை செய்யவில்லை எனவும், இது தொடர்பாக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் வருத்தம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.