India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று, நாளை, 24ஆம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த மாவட்டங்கள் என பார்க்கலாம் *இன்று: தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் *நாளை: கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், பெரம்பலூர் *24ஆம் தேதி: சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை.
பாலிவுட் நடிகர் சல்மான் கான், ₹2 கோடிக்கு புல்லட் புரூப் கார் வாங்கியுள்ளார். நிழல் உலக தாதா பிஸ்னோய் கும்பலிடம் இருந்து தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்தபடி உள்ளது. இதையடுத்து, பாதுகாப்புக்காக குண்டு துளைக்காத புல்லட் புரூப் காரை ₹2 கோடிக்கு நிசான் நிறுவனத்திடம் இருந்து வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், 10 கமாண்டோ வீரர்கள் உள்ளிட்டாேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவா திமுகவின் புதிய சமூகநீதி? என டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 10 ஆண்டுகள் பணி செய்த தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிலைப்பு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்ததாக கூறியுள்ளார். ஆனால், நிரந்தரப்பணி கேட்பார்கள் என்பதற்காக கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு வேலை வழங்கக்கூடாது என்பது எத்தகைய மனநிலை? இதுகுறித்து ஸ்டாலின் விளக்கமளிக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்திய விமானங்களுக்கு 6 நாள்களில் 70 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மட்டும் 30 மிரட்டல்கள் வந்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணையில் லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளின் இணைய முகவரிகள் காட்டின. இதனால் உண்மையான இருப்பிடத்தை அறியக்கூடாது என கருதி மாறுபட்ட VPN முகவரிகளை மர்ம நபர்கள் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இன்று (அக். 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
அரண்மனை 5ஆவது பாக படப்பிடிப்பை விரைவில் சுந்தர் சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படத்தின் முதல் 4 பாகங்களுக்கும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, அரண்மனை-4 வசூலை குவித்தது. இதையடுத்து அரண்மனை 5ஆவது பாக படத்திற்கான பணியில் சுந்தர் சி ஈடுபட்டு இருப்பதாகவும், நவம்பர் இறுதி அல்லது டிசம்பரில் சூட்டிங்கை அவர் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது.
ONGCஇல் அப்ரண்டிஸ் நிலையிலான 2,236 பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அக்கவுண்ட் எக்ஸ்யூட்டிவ்ஸ், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் உள்ளிட்ட பதவிகள் காலியாக இருப்பதாகவும், இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10, 12, ஐடிஐ, பட்டப்படிப்பு, வயது வரம்பாக 24 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற 25ஆம் தேதி கடைசி நாளாகும்.
காலை 4 மணி வரை 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. * இடி-மின்னலுடன் மழை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி *லேசான மழை: ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், வேலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள். SHARE IT.
இன்று (அக். 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
கர்நாடக முன்னாள் CM, முன்னாள் வெளியுறவு அமைச்சர் SM கிருஷ்ணா ஹாஸ்பிட்டலில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு தனியார் ஹாஸ்பிட்டலில் நேற்று அவர் அனுமதிக்கப்பட்டார். உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், உடல்நிலை சீராக இருப்பதால் திங்கள்கிழமை வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பு கூறியுள்ளது. ஏற்கெனவே 2 முறை ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
Sorry, no posts matched your criteria.