India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜாஸ் கானின் மனைவி ஃபாலன் குலிவாலா மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அக்.8 ஆம் தேதி அஜாஸ் கானின் அலுவலக ஊழியர் சுராஜ், வெளிநாட்டிலிருந்து 100 கிராம் Mephedrone போதைப்பொருள் வாங்கிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த விவகாரத்தில் ஃபான் குலிவாலாவுக்கு தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐயப்ப பக்தர்களுக்கு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பக்தர்கள் ரயில் பயணத்தின் போது ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது ரயில்வே சட்டம், 1989, பிரிவு 67, 164, மற்றும் 165ன் கீழ் தண்டனைக்குரியது என்றும் மீறினால், ₹1,000 ரூபாய் வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக அடுத்த 12 முதல் 18 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பொதுவாக, பலத்த காற்றினை கொண்டுவரும் புயல்களால் கனமழை பெய்யாது. ஆனால், ஃபெஞ்சல் புயலால் மணிக்கு 50 முதல் 70 கிமீ வேகத்தில் மட்டுமே காற்று வீசுவதால் நீண்ட நேரத்திற்கு மழை நிலைத்து பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
UAE’யில் நேற்று தொடங்கிய, U-19 ஆசிய கோப்பையில் இன்று காலை 10:30 மணிக்கு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பரம போட்டியாளர்களான இவ்விரு அணிகளும் மோதும் போட்டியை Sony Liv OTT நேரலை செய்கிறது. IPL ஏலத்தில் கவனத்தை ஈர்த்த 13 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவதே இப்போட்டி கவனம் பெற முக்கிய காரணமாகும். ஏலத்தில் உண்டான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வாரா வைபவ்?
அதானி மீது USA-வில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அரசு முதன்முதலாக பதிலளித்துள்ளது. இது தொழில் நிறுவனம்- USA நீதித்துறை இடையேயான விவகாரம் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இதுபோன்ற வழக்குகளுக்கு சில சட்ட விதிகள் உள்ளதாகவும், சம்மன்/ கைது வாரன்ட் தொடர்பாக USA இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஃபெஞ்சல் புயல், இன்று காலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 140 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. நேற்றிரவு மணிக்கு 9 கிமீ வேகத்தில் நகர்ந்த புயல், தற்போது வேகமெடுத்து மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்கிறது. இதே வேகம் நீடித்தால், இன்று மாலை காரைக்காலுக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என்று IMD தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோர் அழைக்க வேண்டிய தொலைப்பேசி எண்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 1070 என்ற மாநில உதவி எண்ணையோ, 1077 என்ற மாவட்ட உதவி எண்ணையோ மக்கள் அழைக்கலாம். மேலும், வாட்ஸாப் மூலம் தொடர்புகொள்ள, 9445869848 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்கெனவே 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் 10ஆவது மாவட்டமாக திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
*விமானம், ஹோட்டல்கள் தொடர்பான ரிவார்ட் புள்ளிகளில் SBI வரம்பு அமைக்க உள்ளது. *காலாண்டுக்கு ₹1 லட்சம் வரை செலவு செய்பவர்களுக்கு மட்டுமே இலவச ஓய்வறை வசதியை HDFC வழங்கும். *ரிவார்ட் பாய்ண்ட், கிரெடிட் கார்டு கட்டணங்களை SBI, Axis திருத்தியுள்ளது. *மாலத்தீவு செல்வதற்கான விமானக்கட்டணம் உயர உள்ளது. *வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமும் ₹200 பெற்றுக் கொண்டு, கடற்படை சார்ந்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு பகிர்ந்த திபேஷ் கோஹிலை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். ஒகா (Okha) துறைமுகத்தில் வேலை செய்து வந்த திபேஷ், அங்கு வரும் கடற்படையின் கப்பல்களின் பெயர், எண்களை பாக்., ஏஜெண்டிற்கு வாட்ஸ்அப் மூலம் அளித்து வந்துள்ளார். இதுவரை ₹42,000-ஐ அவர் பாக். ஏஜெண்டிடம் இருந்து பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.