news

News April 15, 2025

வக்ஃப் சட்டத்திற்கு எதிரான விஜய்யின் மனு ஏற்பு

image

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. வக்ஃப் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு உள்பட வழக்கு தொடர்பான 10 மனுக்கள் நாளை விசாரணைக்காக பட்டியலிடப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

News April 15, 2025

பங்குச்சந்தைகள் கிடுகிடுவென உயர்வு

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஜெட் வேகத்தில் உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 500 புள்ளிகள் உயர்ந்து 23,328 புள்ளிகளை தொட்டது. சென்செக்ஸ் 1,577 புள்ளிகள் உயர்ந்து 76,734 புள்ளிகளை கடந்தது. சர்வதேச சந்தைகள் அனைத்தும் உயர்ந்திருப்பது இந்திய சந்தைகளுக்கும் சாதகமாக மாறியிருக்கிறது.

News April 15, 2025

இளையராஜா செய்வது சரியா? தவறா?

image

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் GBU படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பதாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவரது படைப்புக்கு அவர் உரிமை கோருகிறார், இதில் என்ன தவறிருக்கிறது என்று ஒரு தரப்பினரும், அவரது பாடல்கள் பொதுவானவைதானே, அதுக்கெல்லாமா பணம் கேட்பது என்று ஒரு தரப்பினரும் கமெண்ட் செய்து வருகின்றனர். உங்களது கருத்து என்னவென்று கமெண்ட்டில் சொல்லுங்க.

News April 15, 2025

தரமான சம்பவம்.. ஸ்ரேயஸை தேடி வந்த ஐசிசி விருது..!

image

மார்ச் மாதத்திற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் வென்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் (243 ரன்கள் ) சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் இந்த மாதத்திற்கான விருதை வென்று அசத்தியுள்ளார். பிப். மாதத்திற்கான விருதும் இந்தியரான சுப்மன் கில்லுக்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 15, 2025

பாமக பிரச்னை முடிவுக்கு வந்தது

image

பாமகவிற்குள் ஏற்பட்ட சலசலப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். தந்தை & மகன் இடையே ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக, கட்சிக்கு தானே தலைவர் என்று ராமதாஸ் அறிவித்துக் கொண்டார். ‘நான் தான் தலைவர்’ என்று அன்புமணியும் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், வரும் பொதுக்கூட்டத்தில் இருவரும் இணைந்து கலந்து கொள்வார்கள் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

News April 15, 2025

சிவகாசியில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி: CM ஸ்டாலின் இரங்கல்

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோயில் விழாவில் ரேடியோ அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். காரிசேரி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (27), அவரது மனைவி லலிதா (25), பாட்டி பாக்கியம் (75) நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். மூவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள CM, அவர்களது குடும்பங்களுக்கு தலா ₹3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

News April 15, 2025

மீண்டும் தியேட்டருக்கு வரும் விஜயகாந்த் படங்கள்..!

image

ரீ-ரிலீஸ் கலாசாரம் தமிழ் சினிமாவில் சமீபமாக தலை தூக்கத் தொடங்கியுள்ளது. விஜய்யின் சச்சின் படம் ஏப்.18-ல் மீண்டும் ரிலீசாகும் நிலையில், அஜித்தின் வீரம் படமும் மீண்டும் திரைக்கு வருகிறது. இந்நிலையில், விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன், வல்லரசு ஆகியவற்றை வெளியிட தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ரீ-ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகவுள்ளது. அவர் படங்களில் உங்களுக்கு பிடித்தது எது?

News April 15, 2025

வருங்கால கணவர் கண்முன்னே…நேர்ந்த கொடூரம்!

image

வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, உ.பி.யில் இளம்பெண்னை (17) ஒருவரை அவரது வருங்கால கணவரின் கண்முன்னே 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை POCSO-வில் 8 பேர் கைதாகி இருக்கின்றனர். அவர்களில் கைதான, அகிலேஷ் பிரதாப் சிங் லோக்கல் BJP காஸ்கஞ்ச் பகுதியின் MLA-வுடன் நெருக்கமாக இருப்பவர் எனக் கூறப்படுகிறது.

News April 15, 2025

அடிக்கடி செயலிழக்கும் UPI: தீர்வு என்ன?

image

கடந்த 18 நாள்களில் மட்டும் 4 முறை UPI பரிவர்த்தனைகள் ஸ்தம்பித்திருக்கின்றன. ஒரு நிமிடம் செயலிழந்தாலும், 4 லட்சம் பேர் பாதிப்பார்கள். நாடு முழுவதும் 40 கோடி பேர் UPI பரிவர்த்தனையை நம்பியிருக்கும் சூழலில், அடிக்கடி செயலிழந்தால் என்ன ஆகும் என கேள்வி எழுப்புகின்றனர் நிதி நிறுவன நிர்வாகிகள். இதற்கு தீர்வு காண மத்திய அரசின் NPCI நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

News April 15, 2025

அதிமுகவினருக்கு மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி!

image

அதிமுக குறித்து அதிமுக <<16095694>>Ex MLA குணசேகரன்<<>> பேசுவது நல்லதற்கு அல்ல என அக்கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாலர் கார்த்திக் மிரட்டல் தொனியில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்து அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முடிவு எடுத்த பிறகு அதிமுக நிர்வாகிகள் பேசக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது அதிமுகவினரை மிகவும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. உங்க கருத்து என்ன?

error: Content is protected !!