news

News November 11, 2024

பிஞ்சு மாணவர்கள் வாயில் பிளாஸ்திரி: அராஜகம்

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு பயிலும் மாணவ – மாணவிகள் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதிகம் பேசுவதாகக் கூறி, ஒரு மாணவி மற்றும் 4 மாணவர்களின் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News November 11, 2024

நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமின்

image

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு (75) இடைக்கால ஜாமின் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ள அவர், சிகிச்சைப் பெற இடைக்கால ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ரூ.538 கோடி கடன் மோசடி வழக்கில், 2023 செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.

News November 11, 2024

இந்தியாவில் ஒரே நேரம் வந்தது எப்படி தெரியுமா?

image

இந்தியாவின் மேற்கு முனையான கட்ச் முதல், கிழக்கு முனையான அருணாசலப் பிரதேசம் வரை, நாட்டின் அகலம் சுமார் 3000 கிமீ. அருணாசலில் சூரியன் உதித்த 2 hours-க்கு பின்னரே கட்ச்சில் சூரிய உதயம் தெரியும். இதனால், 1948 வரை நாட்டில் 3 நேர மண்டலங்கள் இருந்தன. பின்னர், ரயில்வே பயன்பாட்டுக்காக, மிர்ஸாபூரை மையமாக கொண்ட (82.3 தீ.ரேகை) ஒரே நேர மண்டலம் உருவானது. இதுவே தற்போது இந்தியாவில் திட்ட நேரமாக உள்ளது.

News November 11, 2024

ஆங்கிலம் அறிவோம்: Skyscraper Vs Tower

image

Skyscraper என்பதும், Tower என்பதும் அடிப்படையில் மிக உயரமான கட்டுமானத்தையே குறிக்கின்றன.
ஆனால், இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. Skyscraper என்பது மனிதர்கள் வாழ்வதற்காக எழுப்பப்படும் ஒரு கட்டடம். அது எக்கச்சக்கமான தளங்களைக் கொண்டிருக்கும். Tower என்பது மிக உயரமானதுதான் (அகலத்தோடு ஒப்பிடுகையில்), பொதுவாக இது மனிதர்கள் வசிப்பதற்காக எழுப்பப்படுவதில்லை. வேறு பல பயன்பாட்டிற்காக இது அமைக்கப்படும்.

News November 11, 2024

முடிவுக்கு வந்தது விஸ்தாரா விமான சேவை!

image

விஸ்தாரா விமானங்கள் கடைசி நாளாக இன்று வானில் பறந்து வருகின்றன. ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா குழுமம் வாங்கிய நிலையில், விஸ்தாரா நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. 2022 முதலே இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் விஸ்தாரா விமான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. நாளை முதல் விஸ்தாரா விமானங்கள் ஏர் இந்தியா பெயரில் இயக்கப்படவுள்ளன.

News November 11, 2024

இலங்கை மீது பொருளாதாரத் தடை: கொந்தளித்த சீமான்

image

இலங்கை விவகாரம் குறித்து சீமான் ஆவேசமாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், “தமிழக மீனவர்கள்தான் எல்லைத் தாண்டி போறாங்களா.. கேரள மீனவர்கள் போகவில்லையா? அப்போ கச்சத்தீவை எங்களுக்கு வாங்கிக் கொடு. ஒரு சின்ன நாடு இவ்ளோ செய்யுது. அதன் மீது ஒரு பொருளாதாரத் தடை என ஏதாவது நெருக்கடி கொடுக்கணுமா இல்லையா? அப்போ தானே அது நம் கட்டுக்குள் வரும். ஆனால் இந்தியாவோ, இலங்கையோட ஒட்டி உறவாடுது” என சாடினார்.

News November 11, 2024

வாட்ஸ் அப் பயன்படுத்துபவரா? இதை மட்டும் செய்யாதீங்க

image

வாட்ஸ் அப்பை கோடிக்கணக்கானோர் தகவல் அனுப்ப பயன்படுத்துகின்றனர். அவர்கள் அலுவலகம் (அ) வெளியிடங்களில் டெஸ்க்டாப்பில் வாட்ஸ் அப் கணக்கை லாக்கின் செய்வது உண்டு. அதுபோல லாக்கின் செய்தவர்கள் சில நேரம் லாக் அவுட் செய்யாமல் சென்றால் அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புண்டு. வாட்ஸ் அப் தகவலை படித்தறிந்து மிரட்டவும் வாய்ப்புண்டு. ஆதலால் மறந்தும் லாக் அவுட் செய்யாமல் சென்று விடாதீர்கள். SHARE IT.

News November 11, 2024

டெல்லி காற்று மாசு: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

image

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு விவகாரத்தில் டெல்லி அரசு மீது SC அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், மக்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், மாசற்ற சூழலை உருவாக்குவது அரசின் கடமை என்றும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

News November 11, 2024

Cooking Tips: என் சமையல் அறையில்…

image

➤தக்காளியை சிறிது உப்பு கலந்த நீரில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகாமல் இருக்கும். ➤கிரேவி வகைகளில் உப்பு அதிகம் ஆகிவிட்டால், முந்திரி பருப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டால் உப்பின் அளவு சீராகும். ➤வடை மாவு அரைக்கும் பொழுது தயிர் சேர்த்தால் வடை மொறு மொறுப்பாக இருக்கும். ➤வறுத்து இடித்த நிலக்கடலை, தனியா, மிளகு பொடியை புளியோதரையில் சேர்த்தால் அதன் சுவை கூடும்.

News November 11, 2024

‘எலே’ என்ற வார்த்தை வழக்கத்திற்கு எப்படி?

image

நெல்லையில் பலராலும் செல்லமாகவும், கோபமாகவும் பயன்படுத்தப்படும் வார்த்தை ‘எலே’. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு காலத்தில் நெல்லையை சார்ந்தே இருந்தது. இங்கு வாழ்ந்த ஆண்டாள் தனது திருப்பாவையில் ‘எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?’ என தோழியைப் பார்த்து கேட்கிறாள். எல்லே என்ற இந்த வார்த்தையே திரிந்து ‘எலே’ என ஆனதாகச் சொல்வர். ஆணாயினும், பெண்ணாயினும் குழந்தைகளையும், நண்பர்களையும் ‘எலே’ என செல்லமாக அழைப்பர்.

error: Content is protected !!