India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உலகம் முழுவதும் பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில், மார்பகப் புற்றுநோயே முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் மார்பக புற்றுநோய் பாதிப்பில், 25% உடன் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், ஆரம்ப நிலையிலேயே இதைக் கண்டறிந்தால், மார்பகத்தை அகற்றாமல் சிகிச்சையின் மூலமாகவே குணப்படுத்தலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதற்கான சில எளிய வழிமுறைகளை மேலே SWIPE பண்ணி பாருங்க.

*யோகி பாபுவின் 300-வது படத்திற்கு ‘அர்ஜுனன் பேர் பத்து’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. *விஷால் இயக்கி, நடிக்கும் ‘மகுடம்’ படம் 2026 கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது *விக்ராந்த் நடித்துள்ள ‘LBW:Love Beyond Wicket’ என்ற புதிய வெப் தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியானது. *அர்ஜுன் 6 வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்கியுள்ள ‘சீதா பயணம்’ படம் பிப்.14-ல் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

2027 ஒருநாள் உலகக் கோப்பையை முன்னிட்டு, இந்திய அணி 2026-ல் 21 ODI போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் ரோகித்-கோலி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். டெஸ்ட், டி20-யில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், இருவரும் இந்தாண்டின் அனைத்து ODI-களிலும் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2025-ல் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் கோலி(651), ரோகித்(650) முதல் இரண்டு இடங்களை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் போன் தண்ணீரில் விழுந்தால் ➤முதலில் அதனை SWITCH OFF பண்ணுங்க. ➤சார்ஜரில் கனெக்ட் செய்யவேண்டாம். இப்படி செய்தால் ஷார்ட் சர்க்யூட்டாகி போனின் பாகங்கள் சேதமாகிவிடும். ➤மொபைலில் இருந்து சிம் கார்டு, மெமரி கார்டு போன்றவற்றையும் அகற்றுங்கள் ➤காயும் வரை போனை ரீ-ஸ்டார்ட் செய்ய வேண்டாம். இவற்றை செய்தால் தண்ணீரில் விழுந்த உங்கள் போனில் எந்த பிரச்னையும் வராமல் பாதுகாக்கலாம். SHARE.

<<18711260>>நடிகை நந்தினி<<>> தற்கொலைக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், இறந்துபோன அவரது தந்தையின் அரசு வேலையை கருணை அடிப்படையில் நந்தினிக்கு வழங்க ஏற்பாடுகள் நடந்துள்ளன. ஆனால், நடிப்பில் விருப்பம் இருந்ததால் அதனை அவர் ஏற்க மறுத்துள்ளார். வேலையில் சேர்ந்தால் உடனடியாக திருமண ஏற்பாடுகள் நடைபெறும் என எண்ணிய நந்தினி இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. So sad!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். புத்தாண்டு என்பது புதிய தொடக்கத்தை குறிப்பதாக கூறிய அவர், 2026-ல் தேசிய வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் நமது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார். மேலும், 2026 அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பை கொண்டுவரட்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.

டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையின்போது, ED அதிகாரிகளே திகைத்துப் போகும் அளவுக்கு, ₹5.12 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். குற்றவாளி இந்தர்ஜித் சிங் யாதவ் தொடர்பான பணமோசடி வழக்கில், அவரது கூட்டாளி வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ₹8.80 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் மற்றும் ₹35 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புத்தாண்டின் முதல் நாளிலேயே வெள்ளி விலை கிலோவுக்கு ₹1,000 குறைந்துள்ளது. சில்லறை விலையில் 1 கிராம் ₹256-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹2,56,000-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டு நாளில் நகை வாங்குவதை வாடிக்கையாக கொண்ட சிலர், இன்று காலை வெள்ளி வாங்க சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பல கடைகளில் வெள்ளிக்கு தட்டுப்பாடு நிலவுவதால், புக்கிங் செய்தால் மட்டுமே வெள்ளி கிடைக்கும் நிலை உள்ளது.

நெல்லை தொகுதியில் சிட்டிங் MLA-வாக இருக்கும் நயினார் நாகேந்திரன், வரும் தேர்தலில் வேறு தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் பாஜக எடுத்த சர்வேயில், தொகுதியிலுள்ள பட்டியலினத்தவர், நாடார் & யாதவ சமூகத்தினரிடையே அதிருப்தி நிலவுவது தெரியவந்துள்ளதே இதற்கு காரணம் எனப் பேசப்படுகிறது. இதற்கு பதிலாக, விருதுநகரின் சாத்தூரில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் தயார் நிலையில் இருப்பதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு 2 கோடியே 22 லட்சத்து 72 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு, வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளன. இன்று (அ) நாளை ரொக்கம் குறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட உள்ளதாகவும், அதன் பிறகு டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.