India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை திருமங்கலத்தில் ‘இந்தியன்-2’ பட பாணியில் லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர் கைது செய்யப்பட்டார். நிலத்தை அளந்து பட்டா வழங்க விண்ணப்பித்திருந்த கீழ உரப்பனூரைச் சேர்ந்த அஜித்குமாரிடம் சர்வேயர் சித்ராதேவி ₹5,000 லஞ்சம் கேட்டதோடு அதை வேறு இடத்தில் உள்ள தனது கணவரிடம் கொடுக்க சொல்லியுள்ளார். அஜித்தின் புகாரின் பேரில் மறைந்திருந்த DVAC போலீசார், பணத்தை வாங்கிய சித்ராதேவியின் கணவரை கைது செய்தனர்.
தமிழ்நாடு பொதுப் பணித்துறையில் 760 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. என்ஜீனியரிங், டெக்னீசியன் ஆகிய பதவிகளுக்கு இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வேலையில் சேர விரும்புவோர் <
கனமழை காரணமாக இன்று மழை பெய்யும் மாவட்டங்களில் திரையரங்குகள் இயங்காது என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திரையரங்குகள் மூடப்படவுள்ளன. மேலும், சென்னையில் நகைக்கடைகள் இன்று இயங்காது என்றும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவையன்றி வேறு எதற்கும் வெளியே செல்ல வேண்டாம் என்று வே2நியூஸ் கேட்டுக் கொள்கிறது.
அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா அர்ச்சகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், அர்ச்சகர்கள் குடும்பத்தில் பிறப்பு, இறப்பு நிகழ்வுகள் ஏற்பட்டால், தீட்டுப்பட்ட அர்ச்சகர்கள் கோயில் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 6 மாத பயிற்சியை முடித்து கோயில் பணிகளில் ஈடுபடப்போகும் அர்ச்சகர்களுக்கு இந்த கண்டிப்பான கட்டுப்பாடுகளை அறக்கட்டளை விதித்துள்ளது.
போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜாஸ் கானின் மனைவி ஃபாலன் குலிவாலா மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அக்.8 ஆம் தேதி அஜாஸ் கானின் அலுவலக ஊழியர் சுராஜ், வெளிநாட்டிலிருந்து 100 கிராம் Mephedrone போதைப்பொருள் வாங்கிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த விவகாரத்தில் ஃபான் குலிவாலாவுக்கு தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐயப்ப பக்தர்களுக்கு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பக்தர்கள் ரயில் பயணத்தின் போது ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது ரயில்வே சட்டம், 1989, பிரிவு 67, 164, மற்றும் 165ன் கீழ் தண்டனைக்குரியது என்றும் மீறினால், ₹1,000 ரூபாய் வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக அடுத்த 12 முதல் 18 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பொதுவாக, பலத்த காற்றினை கொண்டுவரும் புயல்களால் கனமழை பெய்யாது. ஆனால், ஃபெஞ்சல் புயலால் மணிக்கு 50 முதல் 70 கிமீ வேகத்தில் மட்டுமே காற்று வீசுவதால் நீண்ட நேரத்திற்கு மழை நிலைத்து பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
UAE’யில் நேற்று தொடங்கிய, U-19 ஆசிய கோப்பையில் இன்று காலை 10:30 மணிக்கு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பரம போட்டியாளர்களான இவ்விரு அணிகளும் மோதும் போட்டியை Sony Liv OTT நேரலை செய்கிறது. IPL ஏலத்தில் கவனத்தை ஈர்த்த 13 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவதே இப்போட்டி கவனம் பெற முக்கிய காரணமாகும். ஏலத்தில் உண்டான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வாரா வைபவ்?
அதானி மீது USA-வில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அரசு முதன்முதலாக பதிலளித்துள்ளது. இது தொழில் நிறுவனம்- USA நீதித்துறை இடையேயான விவகாரம் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இதுபோன்ற வழக்குகளுக்கு சில சட்ட விதிகள் உள்ளதாகவும், சம்மன்/ கைது வாரன்ட் தொடர்பாக USA இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஃபெஞ்சல் புயல், இன்று காலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 140 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. நேற்றிரவு மணிக்கு 9 கிமீ வேகத்தில் நகர்ந்த புயல், தற்போது வேகமெடுத்து மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்கிறது. இதே வேகம் நீடித்தால், இன்று மாலை காரைக்காலுக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என்று IMD தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.