India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் திமுக அரசின் வெற்று போட்டோஷூட்டுகள் என்பதை இன்றைய மழை அம்பலப்படுத்தியுள்ளதாக இபிஎஸ் சாடியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஃபெஞ்சல் புயல் குறித்து வானிலை மையம் கொடுக்கும் தகவல்களை பெற்று மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு உதவ அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் இந்திய அளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக சீன மொழியில் நேற்று ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், முதல் நாள் மட்டும் ₹5 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீனர்களுக்கும் படம் பிடித்துள்ளதால் வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. உங்களுக்கு இந்த படம் பிடித்ததா? Cmt Here.
ஃபெஞ்சல் புயலால், தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு முன்னாள் CM கருணாநிதி வீடும் தப்பிக்கவில்லை. நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால், சென்னையில் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் கோபாலபுரத்தில் பெருக்கெடுத்த வெள்ளநீர், கருணாநிதி இல்லத்தை சூழ்ந்தது. முன்னதாக, சென்னையில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், இந்த போட்டோ வைரலாகிறது.
சென்னையில் இருந்து தென்கிழக்கே 100 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், புதுச்சேரியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் கூறியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் நகரும் வேகம் குறைந்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் இன்று மாலை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மணிக்கு 70 கி.மீ. -80 கி.மீ. வரையும், இடையே 90 கி.மீ. வரை காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் நகரும் வேகம் தற்போது 13 கி.மீ.யில் இருந்து 10 கி.மீ. ஆக குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்காக 9,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் 61 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார். ராஸ் டெய்லர் 7,683 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
திருமணமே ஆகாமல் குழந்தை பிறந்தது எப்படி என போலீசார் தன்னிடம் விசாரித்ததாக செய்தி பரவியதை நடிகை கஸ்தூரி வருத்தத்துடன் கண்டித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் குழந்தையை விட்டு சென்றது குறித்து சிலர் கேட்பதாகவும், அப்போது அத்தை, மாமா குழந்தையைப் பார்த்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சிறையில் செல்போன் இல்லாமல் இருந்ததுதான் பெரிய தண்டனையாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
AUSக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் IND அணி பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டாம் என புஜாரா அட்வைஸ் கொடுத்துள்ளார். போன முறை போலவே ராகுலும், ஜெய்ஸ்வாலும் ஓப்பனிங் இறங்க வேண்டும் எனவும், ரோஹித் 3ஆவதாக இறங்கலாம் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும், ரோஹித் ஓப்பனிங் ஆட விரும்பினால், ராகுலை 3ஆவது இடத்தில் களமிறக்க வேண்டும். அதற்கு மேல் இறக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.
2 மணி நேரத்துக்கு முன் எழிலகத்தில் உள்ள கண்ட்ரோல் ரூமுக்கு சென்று ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இதுவரை சென்னையில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை என்றார். மழைநீர் தேங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால், மழைநீர் எங்கும் தேங்கவில்லை என்று விளக்கம் அளித்தார். சென்னையில் எங்கேனும் தண்ணீர் தேங்கியுள்ளதா? கமெண்ட்டில் சொல்லுங்கள்.
UAEஇல் நடைபெற்று வரும் under19 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த PAK 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக அதிரடியாக ஆடிய ஷாஜாய்ப் கான் 159 ரன்கள் விளாசினார். இந்திய அணி சார்பில் அட்டகாசமாக பந்து வீசிய சமர்த் நாகராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி முதல் வெற்றி பெறுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.