News November 30, 2024
சென்னையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல்

சென்னையில் இருந்து தென்கிழக்கே 100 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், புதுச்சேரியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் கூறியுள்ளது.
Similar News
News November 12, 2025
டெல்லி கார் வெடிப்பு: நேரில் ஆறுதல் கூறிய PM மோடி

2 நாள் அரசுமுறை பயணமாக பூடான் சென்றிருந்த PM மோடி, டெல்லி திரும்பியதும் கார் வெடித்ததில் படுகாயமடைந்தவர்களை சந்திக்க LNJP ஹாஸ்பிடலுக்கு சென்றார். இச்சம்பவத்தில் 12 பேர் பலியான நிலையில், 20 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, உயர்தர சிகிச்சை அளிக்கவும் டாக்டர்களுக்கு PM மோடி அறிவுறுத்தினார். பொதுமக்களுடன் அவர் பேசிய போட்டோக்களை பார்க்க மேலே SWIPE பண்ணுங்க.
News November 12, 2025
வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்..

TN-ல் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நவ.14-ம் தேதி குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Ex PM ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் நவ.14-ஐ மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 12, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் இன்று, நவ.17, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், 17-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், 18-ம் தேதி ராமநாதபுரம், புதுகோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று அலர்ட் கொடுத்துள்ளது.


