India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிராம கோயில் பூசாரிகளுக்கு பைக் வாங்க அரசு ரூ.12,000 மானியம் வழங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கிராம கோயில் பூசாரிகள், ஆதிதிராவிட கோயில் அர்ச்சகர்கள் 10,000 பேருக்கு பைக் வாங்க தலா ரூ.10,000 மானியம் தரப்படும் என்றார். கோயில் ஓய்வூதியதாரர்களுக்கு தரப்படும் பொங்கல் கருணைத் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்படுதாகவும் அவர் கூறினார்.
தனிநபர் கடன்(Personal Loan) வாங்க நினைத்த பலர் இம்மாதத்தில் ஒப்புதல் கிடைக்காமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். காரணம், கடந்த ஜன.1 முதல் Cibil score 30 நாள்களுக்கு ஒரு முறைக்குப் பதிலாக 15 நாள்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்ற RBI-இன் ரூல்ஸ்தான். இதனால் 2 வாரங்களில் பரிவர்த்தனைகளில் செய்த சிறு தவறுகளால் ஒப்புதல் மறுக்கப்படுகிறது. உங்கள் EMI, மினிமம் பேலன்ஸ் விவகாரத்தில் கவனமாக இருங்க..
கே2-18பி கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்தவர் நிக்கு மதுசூதன் என்னும் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். இவர் கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டியில் ‘Astrophysics & Exoplanetary Science’ பிரிவில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் தலைமையிலான குழுதான் James Webb தொலைநோக்கி மூலம் இதனை கண்டுபிடித்துள்ளது. IIT-ல் பி.டெக் பட்டம் பெற்ற நிக்கு, Massachusetts யூனிவர்சிட்டியில் PhD முடித்துள்ளார்.
பகவத் கீதைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கியதற்கு PM மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டிருப்பது நமது பாரம்பரியத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என X-ல் அவர் பதிவிட்டுள்ளார். பகவத் கீதையும் நாட்டிய சாஸ்திரமும் பல நூற்றாண்டுகளாக நமது நாகரீகத்தையும், உணர்வுகளையும் வளர்த்துள்ளன எனவும் மோடி கூறியுள்ளார்.
5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலை 4 மணி வரை கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD குறிப்பிட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
மீன்பிடித் தடைக்காலம் காரணமாக தமிழகத்தில் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. ஏப்.15 அன்று மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியதை அடுத்து, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. நாட்டுப் படகு மீனவர்கள் மட்டும் வழக்கம் போல மீன்பிடித்து வருகின்றனர். ஆனால், பிடிக்கப்படும் மீன்கள் போதுமானதாக இல்லை. வரத்து குறைந்ததால் ஒவ்வொரு ரக மீனும் கிலோவுக்கு ₹100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
நஸ்ரியா, ஃபஹத் ஃபாசில் ஜோடி விவகாரத்து செய்யப் போவதாக தகவல் பரவுகிறது. நஸ்ரியாவின் அண்மைக் கால சோசியல் மீடியா பதிவுகளும் அதையே உணர்த்துவதாக நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக, “நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ‘Sookshmadarshini’ திரைப்பட வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை. இது கடினமான நேரம்” என நஸ்ரியா பதிவிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் பாஜக வெற்றி பெறாது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அமித் ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் TNல் பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியாது. TN என்றும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான். 2026-லும் திராவிட மாடல் ஆட்சியே மலரும் என்றார். TN MP தொகுதிகள் குறையாது, நீட் விலக்கு, இந்தி திணிப்பு இருக்காது என அமித் ஷா உறுதியளிப்பாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.
அரசின் விண்வெளி தொழில் கொள்கை CM ஸ்டாலின் குடும்பம் பயனடையவே உருவாக்கப்பட்டதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், CM ஸ்டாலினின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான Vaanam Space LLP-இன் பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனம் 20% மூலதன மானியத்தை பெறும் எனவும் அதற்கான ஆதாரம் தான் இது என்றும் கூறியுள்ளார்.
தெலங்கானாவில் நிகழ்ந்த இந்த சம்பவம் மனதை உலுக்குகிறது. தேஜஸ்வி என்பவரின் 2 குழந்தைகளுக்கும் சுவாச பிரச்னை இருந்துள்ளது. இதனால் அவர்களுக்கு, 4 மணிநேரத்திற்கு ஒரு முறை மருந்து கொடுக்க வேண்டும். ஆனால், கணவரோ டெய்லி சண்டை போட, அவர் டிப்ரஷனில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் நிதானம் இழந்து தேஜஸ்வி, குழந்தைகளின் தலை, கழுத்தில் கத்தியால் வெட்டி கொன்றுள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.