India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நாளை(அக்.31) தொடங்குகிறது. தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் 2 நாள்கள் அரசு சார்பில் இவ்விழா நடைபெறவுள்ளது. ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி நாளை மறுதினம்(நவ.1) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி ODI பேட்டிங் தரவரிசையில் 5 இந்திய வீரர்கள் மட்டுமே இதுவரை No.1 இடத்தை அலங்கரித்துள்ளனர். இப்பட்டியலில் லிட்டில் மாஸ்டரான சச்சின் டெண்டுல்கரை விட, இரண்டு வீரர்கள் அதிக புள்ளிகள் எடுத்து NO.1 இடத்தில் இருந்திருக்கின்றனர். யார் அவர்கள் என்பதை அறிய, புகைப்படங்களை SWIPE செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

RRB-யில் காலியாக உள்ள 2,570 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18- 33 வயதுக்குட்பட்ட Diploma, B.E, B.Tech படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். வரும் நவம்பர் 30-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் அப்ளை பண்ண <

இந்திரா காந்தி என்ற பெண், மோடி என்ற ஆணை காட்டிலும் தைரியமானவர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 1971 போரின் போது இந்தியாவை மிரட்ட USA கப்பல்படையை அனுப்பியதாகவும், ஆனால் அப்போதைய PM இந்திரா காந்தி, அதற்கு அச்சப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், PM மோடிக்கு உண்மையில் தைரியம் இருந்தால், போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் சொல்வது பொய் என கூறட்டும் என்றும் சவால் விட்டுள்ளார்.

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியா வீராங்கனை லிட்ச்ஃபீல்ட் அதிரடி சதம் விளாசியுள்ளார். இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்ட அவர் 77 பந்துகளில் சதம் அடித்தார். இப்போட்டியில் லிட்ச்ஃபீல்ட் இதுவரை 18 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்துள்ளார். உலகக் கோப்பையில் இது அவருக்கு முதல் சதமாகும். அவருடைய விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே ரன் வேகத்தை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியும்.

தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி வெலவெலத்து போகும் என தமிழிசை தெரிவித்துள்ளார். திமுகவை தோற்கடிக்க நினைப்பவர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து வாக்குகள் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அது விஜய், சீமான், OPS, TTV ஆகியோரின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார். வருங்காலங்களில் NDA கூட்டணி பலப்படும் என்று குறிப்பிட்ட அவர், திமுக கூட்டணி அப்படியே தொடராது என பேசியுள்ளார்.

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில், ஆஸ்திரேலியா அதிரடியாக ஆடி வருகிறது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீராங்கனை லிட்ச்ஃபீல்ட் 66 பந்துகளில் 83 ரன்கள் விளாசியுள்ளார். 62 ரன்களுக்கு ஆட்டமிழக்க வேண்டிய அவர், நூலிழையில் தப்பினார். முன்னதாக கிராந்தி கவுட் பந்துவீச்சில் கேப்டன் அலிசா ஹீலி 5 ரன்னுக்கு அவுட்டாகினார்.

யஷ்-ன் ‘டாக்ஸிக்’ ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் பல காட்சிகள் திருப்தியளிக்கவில்லை என இயக்குநர் கீது மோகன்தாஸிடம் யஷ் கூறியதாகவும், அதனால் ரீ-ஷூட்டிங் நடப்பதாகவும் தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் இன்னும் 140 நாள்களில், அதாவது திட்டமிட்டபடி 2026 மார்ச் 19-ம் தேதி ‘டாக்ஸிக்’ வெளியாகும் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்த ENG-க்கு எதிரான டெஸ்ட்டின் போது ரிஷப் பண்ட்டுக்கு காலில் அடிபட்டது. 3 மாத சிகிச்சைக்கு பிறகு, தென்னாப்பிரிக்க A அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், இன்று அவர் களமிறங்கினார். ஆனால், கோலியின் 18-ம் நம்பர் ஜெர்ஸியுடன் களமிறங்கியது பேசுபொருளாகியுள்ளது. ஜெர்ஸி என்பது வீரரின் அடையாளம் எனவும், சச்சின், தோனியை போன்று கோலியின் ஜெர்ஸிக்கும் ஓய்வளிக்க ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என EPS தனது முடிவை அறிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், நாமக்கல்லில் தனது பரப்புரையில், தவெகவினர் சிலர் தங்களது கட்சிக் கொடியை காட்டி ஆரவாரத்துடன் கூச்சலிட்டதால், அது கூட்டணிக்கான பிள்ளையார்சுழி என தான் கூறியதாகவும் விளக்கம் அளித்துள்ளார். அதேநேரம், தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என சூசகமாக பதில் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.