news

News December 1, 2024

ராசி பலன்கள் (01-12-2024)

image

➤மேஷம் – அமைதி ➤ ரிஷபம் – சிரமம் ➤மிதுனம் – பாசம் ➤கடகம் – நற்செயல் ➤சிம்மம் – பாராட்டு ➤கன்னி – வெற்றி ➤துலாம் – கவனம் ➤விருச்சிகம் – ஆர்வம் ➤தனுசு – சுகம் ➤மகரம் – நலம் ➤கும்பம் – பயணம் ➤மீனம் – கீர்த்தி.

News December 1, 2024

மொபைல் டேட்டா சீக்கிரம் காலியாகிறதா?

image

மொபைல் டேட்டா சீக்கிரம் தீர்ந்துவிடுகிறது என சிலர் புலம்பி கேட்டிருப்போம். இதற்கு தீர்வு இதோ.
*மொபைல் செட்டிங்ஸில் மேனேஜ் யுவர் கூகுள் அக்கவுண்ட் சென்று டேட்டா மற்றும் பிரைவசியை கிளிக் செய்யவும்.
*இப்போது டெலிட் செய்யப்பட்ட APPகள் வரும்.
*இதையடுத்து கிளிக் ஆன் அசஸ் ஆப்ஷனை கிளிக் செய்து டெலிட் செய்தால், தேவையில்லாத டேட்டா யூஸேஜ் தடைபடும்.
*இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News December 1, 2024

BREAKING: மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை

image

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்து வரும் நிலையில், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதிகனமழைக்கான Red Alert, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கான Orange Alert விடுக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

சுழன்றடித்து வீசும் சூறைக்காற்று

image

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வரும் சூழலில், சென்னை முழுவதும் பலத்த சூறைக்காற்று சுழன்றடித்து வீசி வருகிறது. இதனால் சில இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. மேலும், சில இடங்களில் கடைகளின் விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் காற்றில் பறந்தன. இதனிடையே மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியா எப்படி இருக்கு? கமெண்ட் பண்ணுங்க.

News November 30, 2024

குற்றச்சாட்டுகள் எங்களை வலிமைப்படுத்தும்: அதானி

image

குற்றச்சாட்டுகள் தங்களை வலிமைப்படுத்தவே செய்யும் என்று தொழிலதிபர் அதானி தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அண்மையில் அமெரிக்காவில் இருந்து தமது நிறுவனம் மீது எழுந்த குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டினார். இதுபோல் சவால்கள் எழுவது இது முதல்முறை அல்ல என்றும், ஒவ்வொரு குற்றச்சாட்டும் தங்களை வலிமைப்படுத்தும், தடைகள் அனைத்தும் படிக்கல் ஆகும் என்றும் அவர் கூறினார்.

News November 30, 2024

அண்ணாமலை நாளை RETURN

image

அண்ணாமலை நாளை தமிழகம் திரும்ப உள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு லண்டனுக்கு மேல் படிப்புக்காக அவர் ஆகஸ்ட் மாதம் சென்றிருந்தார். அவருக்கு பதிலாக பாஜக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டது. அக்குழுவே கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து இன்று அண்ணாமலை புறப்பட்டு நாளை வரவிருப்பதாகவும், கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

News November 30, 2024

மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்: R.N.ரவி

image

இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆளுநர் ரவி வலியுறுத்தியுள்ளார். ஃபெஞ்சல் புயலால் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த இக்கட்டான நேரத்தில் மக்கள் அவசியமின்றி வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்த அவசர நிலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் அயராது உழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 30, 2024

திமுக கூட்டணி கெத்து…திமுக வெத்து: விஜயபாஸ்கர்

image

2026இல் இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி உறுதியாக அமையும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அவர், திமுகவின் கூட்டணி வலுவாக உள்ளதே தவிர, திமுக தனிப்பட்ட முறையில் வலிமையாக இல்லை என்றார். 3 வருட திமுக அரசு மக்களை வாட்டி வதைப்பதாகவும், இதற்கான எதிர்வினையை வரும் தேர்தலில் மக்கள் அளிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

News November 30, 2024

சாம்பியன்ஸ் டிராபி: பாக்., விதித்த நிபந்தனைகள்

image

ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஆனால், அதற்கு சில நிபந்தனைகளை விதித்ததாக ஐசிசி வட்டாரங்கள் கூறுகின்றன. அதன்படி, இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படும். அரையிறுதிக்கு இந்தியா தகுதிபெறவில்லை எனில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் பாகிஸ்தானில்தான் நடைபெறும் என்ற நிபந்தனைகளை பாக்., விதித்ததாக தெரிகிறது.

News November 30, 2024

இதுதான் புயல் பாதிப்பை தடுக்கும் முறையா?

image

மழை-புயல்-வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ள அரசு பொதுவாக 4 வித நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஒன்று, மழைநீர் வடிகால்களை அமைப்பது. இரண்டாவது, தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்றுவது. மூன்றாவது, பெருமழையால் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுப்பது & மீட்புப்பணி. நான்காவது, தங்குமிடம், உணவு , பணம் உள்ளிட்ட உடனடி நிவாரணங்கள். ஆண்டுதோறும் இந்த காட்சி மாறுவதில்லை. இது நிரந்தர தீர்வாகுமா? அரசு என்ன செய்ய வேண்டும்?

error: Content is protected !!