News November 30, 2024
மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்: R.N.ரவி

இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆளுநர் ரவி வலியுறுத்தியுள்ளார். ஃபெஞ்சல் புயலால் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த இக்கட்டான நேரத்தில் மக்கள் அவசியமின்றி வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்த அவசர நிலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் அயராது உழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
USA-ல் போதுமான திறமைசாலிகள் இல்லை: டிரம்ப்

H-1B விசா கட்டண விவகாரத்தில் டிரம்ப் மனமிறங்கி உள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவில் சில துறைகளுக்கு திறமையான இந்தியர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் USA-வில் போதிய திறமையாளர்கள் இல்லை எனவும் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பல நாட்களாக வேலை இல்லாமல் இருக்கும் அமெரிக்கர்களை, சவாலான பணிகளில் உடனடியாக ஈடுபடுத்த முடியாது என கூறிய அவர், இதற்கு வெளிநாட்டினர்தான் தேவை எனவும் கூறியுள்ளார்.
News November 12, 2025
பிஹாரில் ஆட்சி மாற்றம் உறுதி: தேஜஸ்வி யாதவ்

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணி தான் நிச்சயம் வெல்லும் என்று RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். NDA கூட்டணி வெற்றிபெறும் என்ற கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜகவின் உத்தரவின் பேரில் நடந்துள்ளதாக தேஜஸ்வி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த முறை நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். யாருடைய கணிப்பு வெல்லும் என அறிய நவ.14 வரை காத்திருப்போம்.
News November 12, 2025
Airport Divorce- இதுதான் புது Relationship டிரெண்ட்!

‘Airport Divorce’ என்பது உண்மையான விவாகரத்து என்று அல்ல. ஏர்போர்ட்டில் செக்கிங் முடிந்து, Flight கிளம்பும் வரை தம்பதிகள் சிறிது நேரம் தனியாக செக்கிங் முடித்து, Flight கிளம்பும் வரை தனித்தனியாக இருப்பார்கள் அவ்வளவே. பயணத்துக்கு முன் ஏற்படும் சண்டை, கோபம் ஆகியவை தணிந்து, மன அமைதியுடன் பயணத்தைத் தொடங்க இது உதவும் என்கிறார், எழுத்தாளர் ஹூ ஆலிவர். தற்போது இதுதான், புது டிரெண்டாக மாறி வருகிறது.


