news

News November 30, 2024

மழை எச்சரிக்கையை மக்கள் ரசிக்கின்றனரா?

image

அடித்தட்டு, ஏழை மக்களை பொறுத்தவரையில், மழை, வெள்ளம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஆபத்தாகும். அதனால், அவர்கள் மழையை ரசிப்பதைவிட, அதைக் கண்டு அஞ்சுகின்றனர். ஆனால், பாதுகாப்பான வாழ்விடமும், வருமானமும் கொண்ட நடுத்தர- உயர் வர்க்கத்தினருக்கு புயல் எச்சரிக்கை என்பது ஒரு லீவுக்கான காரணம், ரிலாக்ஸ் செய்ய ஒரு வாய்ப்பு. இவர்களுக்கு புயலையும் மழையையும் ரசிக்க பிடிக்கிறது. ஏன் இந்த மனநிலை?

News November 30, 2024

ஃபெஞ்சல் புயல்: 3 பேர் பலி

image

சென்னை வேளச்சேரியில் மின்சாரம் தாக்கியதில் சக்திவேல் என்பவர் உயிரிழந்தார். விஜயநகர் 2ஆவது மெயின் ரோடு சந்திப்பில் பலத்த காற்றால் மின் கம்பி அறுந்து விழுந்தது. அதை கவனிக்காத சக்திவேல் மின் கம்பியை மிதித்த போது மின்சாரம் பாய்ந்து மரணமடைந்தார். அதைப்போல் மண்ணடியில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற வடமாநில இளைஞரும், வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் இசைவாணன் என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

News November 30, 2024

PINK பந்து டெஸ்ட் என்றால் என்ன?

image

இந்தியா, ஆஸி இடையேயான 2ஆவது டெஸ்ட், PINK பந்துப் போட்டி எனப்படுகிறது. வழக்கமாக பகல் நேரத்தில் நடத்தப்படாமல் இரவு-பகலில் நடத்தப்படும் போட்டிக்கு சிவப்பு நிற பந்துக்கு பதிலாக PINK நிற பந்து பயன்படுத்தப்படும். இரவு நேரத்தில் சிவப்பு நிற பந்தை காட்டிலும் PINK நிற பந்து மிகத் தெளிவாக தெரியும். ஆதலால் PINK நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. எனவே இது PINK பந்துப் போட்டி எனப்படுகிறது.

News November 30, 2024

நண்பருக்கு உதவி செய்து உயிரை இழந்த மாணவர்

image

அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரின் பெயர் சாய் தேஜா நுகருபு ஆகும். தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், அமெரிக்காவில் எம்பிஏ படித்து கொண்டே, சிகாகோ கேஸ் மையத்தில் பகுதிநேர வேலை பார்த்தார். நண்பருக்கு பதிலாக கூடுதலாக வேலை செய்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

News November 30, 2024

சென்னைக்கு இரவு 10 மணி வரை ஆரஞ்ச் அலர்ட்

image

இரவு 10 மணி வரையிலான மழை நிலவரம் குறித்த வானிலை நிலவரத்தை MET வெளியிட்டுள்ளது. அதில் சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல்லுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விடப்பட்ட எச்சரிக்கையில் சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது. ஆனால் அது விலக்கப்பட்டு, ஆரஞ்ச் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.

News November 30, 2024

வாக்குப்பதிவு எண்ணிக்கையில் வித்தியாசம்? சரத்பவார் பதில்

image

வாக்குப்பதிவு எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திரபவார்) தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். சிலர் மறுவாக்குப் பதிவை கோருவதாகவும், அதில் பெரிய அளவில் தனக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, வாக்குப்பதிவு தரவுகளின் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது.

News November 30, 2024

இருளில் மூழ்கியது சென்னை

image

ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதால், மக்கள் இருட்டில் அச்சத்துடன் இருக்கின்றனர். ஆவடி, காந்திநகர், பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மரக்காணம், கல்பாக்கம் மற்றும் 10 மீனவ கிராமங்களிலும் 12 மணி நேரத்திற்கும் மேலாக முற்றிலும் மின் விநியோகம் தடை ஏற்பட்டுள்ளது.

News November 30, 2024

இலங்கையை வீழ்த்தி SA அணி அபாரம்

image

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டர்பனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய SA 191 ரன்னில் ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய SL 42 ரன்னில் சுருண்டது. 149 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய SA 366/5 டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து 516 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய SL 282 ரன்னில் ஆட்டமிழந்தது.

News November 30, 2024

BIG ALERT: வீட்டை விட்டு வெளியே வராதீங்க

image

மரக்காணம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, சென்னை முதல் செங்கல்பட்டு வரை பலத்த காற்று வீசி வருகிறது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் Red Alert எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

News November 30, 2024

என்ன செய்கிறார் விஜய்?

image

ஃபெஞ்சல் புயலால் சென்னை உள்பட 13 மாவட்டங்களின் மக்கள் அதிகனமழையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் வார் ரூம்கள் அமைத்து, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு கட்சியின் தன்னார்வலர்களை களம் இறக்கியுள்ளன. ஆனால், ஒரு மாதமாக பரபரப்பாக இருந்த தவெகவினரும், விஜய்யும் silent mode-ல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!