News November 30, 2024

சென்னைக்கு இரவு 10 மணி வரை ஆரஞ்ச் அலர்ட்

image

இரவு 10 மணி வரையிலான மழை நிலவரம் குறித்த வானிலை நிலவரத்தை MET வெளியிட்டுள்ளது. அதில் சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல்லுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விடப்பட்ட எச்சரிக்கையில் சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது. ஆனால் அது விலக்கப்பட்டு, ஆரஞ்ச் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.

Similar News

News November 12, 2025

இந்தியர்களும்.. உலகின் டாப் கம்பெனிகளும்!

image

இந்தியாவோடு ஒப்பிடும் போது வெளிநாட்டு டெக் கம்பெனிகள் தான் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. ஆனா, அந்த கம்பெனிகளின் ஒட்டுமொத்த அதிகாரமும் இந்தியர்களிடம் தான் உள்ளது. அப்படி எந்தெந்த டாப் கம்பெனிகளின், தலைமை பொறுப்பில் இந்தியர்கள் இருக்கிறார்கள் என்ற ஒரு லிஸ்ட்டை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும்.

News November 12, 2025

BREAKING: 3 திமுக அமைச்சர்கள் வீட்டில் பரபரப்பு

image

அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், சேகர்பாபு மற்றும் பாடகி சின்மயி ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி கார் வெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி இருக்கிறது. இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பதறிப்போன போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் & மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

News November 12, 2025

PAK குண்டுவெடிப்புக்கு யார் காரணம்? உண்மை இதோ!

image

இஸ்லாமாபாதில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. ஆனால், தாக்குதலுக்கு பாகிஸ்தானி தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நீதிபதிகள், வழக்கறிஞர்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும், இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்படும் வரை பல தாக்குதல்கள் நடக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!