India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மழை-புயல்-வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ள அரசு பொதுவாக 4 வித நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஒன்று, மழைநீர் வடிகால்களை அமைப்பது. இரண்டாவது, தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்றுவது. மூன்றாவது, பெருமழையால் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுப்பது & மீட்புப்பணி. நான்காவது, தங்குமிடம், உணவு , பணம் உள்ளிட்ட உடனடி நிவாரணங்கள். ஆண்டுதோறும் இந்த காட்சி மாறுவதில்லை. இது நிரந்தர தீர்வாகுமா? அரசு என்ன செய்ய வேண்டும்?
EPFO பயனாளர்களுக்கு மத்திய அரசு முக்கிய செய்தி வெளியிட்டுள்ளது. கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்கும் தேதியிலிருந்து பணம் செட்டில்மென்ட் செய்யும் நாள் வரை வட்டி அளிக்க முடிவு செய்துள்ளது. தற்போது வட்டியானது செட்டில்மென்ட் மாதத்தின் 24ஆம் தேதி வரையே கணக்கிடப்படுகிறது. இதனால் இழப்பு ஏற்படுவதாக புகார்கள் வந்தநிலையில், இம்முடிவை எடுத்துள்ளது.
முன்பதிவு ரயில் டிக்கெட்டில் பயணி விரும்பினால், அவருக்கு பதில் குடும்ப உறுப்பினரில் யாரேனும் ஒருவரின் பெயருக்கு மாற்ற ரயில்வே வசதி செய்துள்ளது. இதற்கு பயண நேரத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையத்திற்கு சென்று, டிக்கெட், அவரது ஆவணம், பெயர் மாற்றும் நபரின் ஆவணம் அளித்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த வசதி OFFLINEஇல் உண்டு. ஆன்லைனில் கிடையாது.
அடித்தட்டு, ஏழை மக்களை பொறுத்தவரையில், மழை, வெள்ளம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஆபத்தாகும். அதனால், அவர்கள் மழையை ரசிப்பதைவிட, அதைக் கண்டு அஞ்சுகின்றனர். ஆனால், பாதுகாப்பான வாழ்விடமும், வருமானமும் கொண்ட நடுத்தர- உயர் வர்க்கத்தினருக்கு புயல் எச்சரிக்கை என்பது ஒரு லீவுக்கான காரணம், ரிலாக்ஸ் செய்ய ஒரு வாய்ப்பு. இவர்களுக்கு புயலையும் மழையையும் ரசிக்க பிடிக்கிறது. ஏன் இந்த மனநிலை?
சென்னை வேளச்சேரியில் மின்சாரம் தாக்கியதில் சக்திவேல் என்பவர் உயிரிழந்தார். விஜயநகர் 2ஆவது மெயின் ரோடு சந்திப்பில் பலத்த காற்றால் மின் கம்பி அறுந்து விழுந்தது. அதை கவனிக்காத சக்திவேல் மின் கம்பியை மிதித்த போது மின்சாரம் பாய்ந்து மரணமடைந்தார். அதைப்போல் மண்ணடியில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற வடமாநில இளைஞரும், வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் இசைவாணன் என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இந்தியா, ஆஸி இடையேயான 2ஆவது டெஸ்ட், PINK பந்துப் போட்டி எனப்படுகிறது. வழக்கமாக பகல் நேரத்தில் நடத்தப்படாமல் இரவு-பகலில் நடத்தப்படும் போட்டிக்கு சிவப்பு நிற பந்துக்கு பதிலாக PINK நிற பந்து பயன்படுத்தப்படும். இரவு நேரத்தில் சிவப்பு நிற பந்தை காட்டிலும் PINK நிற பந்து மிகத் தெளிவாக தெரியும். ஆதலால் PINK நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. எனவே இது PINK பந்துப் போட்டி எனப்படுகிறது.
அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரின் பெயர் சாய் தேஜா நுகருபு ஆகும். தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், அமெரிக்காவில் எம்பிஏ படித்து கொண்டே, சிகாகோ கேஸ் மையத்தில் பகுதிநேர வேலை பார்த்தார். நண்பருக்கு பதிலாக கூடுதலாக வேலை செய்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
இரவு 10 மணி வரையிலான மழை நிலவரம் குறித்த வானிலை நிலவரத்தை MET வெளியிட்டுள்ளது. அதில் சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல்லுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விடப்பட்ட எச்சரிக்கையில் சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது. ஆனால் அது விலக்கப்பட்டு, ஆரஞ்ச் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திரபவார்) தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். சிலர் மறுவாக்குப் பதிவை கோருவதாகவும், அதில் பெரிய அளவில் தனக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, வாக்குப்பதிவு தரவுகளின் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதால், மக்கள் இருட்டில் அச்சத்துடன் இருக்கின்றனர். ஆவடி, காந்திநகர், பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மரக்காணம், கல்பாக்கம் மற்றும் 10 மீனவ கிராமங்களிலும் 12 மணி நேரத்திற்கும் மேலாக முற்றிலும் மின் விநியோகம் தடை ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.