India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை தாம்பரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளக்கம் அளித்துள்ளார். கழிவுநீர் கலந்திருந்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பர் எனவும், உணவுப் பொருளில் கலப்படம் நிகழ்ந்ததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், மெத்தனப் போக்குடன் அரசு செயல்பட்டதாகவும் EPS குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஏக்நாத் ஷிண்டே இனி CM ஆக முடியாது என்று உத்தவ் தாக்கரே கட்சி விமர்சித்துள்ளது. மகாராஷ்டிர முதல்வராக பாஜகவின் ஃபட்னவிஸும், துணை முதல்வர்களாக ஷிண்டே, அஜித் பவார் இன்று பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய உத்தவ் கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத், ஏக்நாத் ஷிண்டே சகாப்தம் முடிந்து விட்டதாகத் தெரிவித்தார். ஷிண்டேவை பயன்படுத்தி விட்டு பாஜக தூக்கி எறிந்து விட்டதாகவும் அவர் சாடினார்.
பான் இந்தியா அளவில், தியேட்டர்களில் மிக கிராண்டாக புஷ்பா 2 படம் இன்று வெளியாகியுள்ளது. படம் ரிலீசாகி ஒருநாள் கூட ஆகாத நிலையில், ஆன்லைன் பைரசி தளங்களில் புஷ்பா 2 சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சுமார் ரூ.500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரான புஷ்பா 2 படத்தின் ஆரம்பகட்ட விமர்சனங்கள் மிகவும் பாசிடிவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆஸி.க்கு எதிரான 2ஆவது டெஸ்ட் அடிலெய்டில் நாளை நடைபெற உள்ள நிலையில், கேப்டன் ரோஹித் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் ‘2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஓப்பனர்களாக கே.எஸ்.ராகுல், ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்குவார்கள். இந்த இணை தான் எங்களுக்கு முதல் டெஸ்ட் போட்டியை வென்று தந்தனர். அதனால் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை’ என்றார். இதன்மூலம் ரோஹித் மிடில் ஆர்டரில் களமிறங்குவார் எனத் தெரிகிறது.
அரசமைப்பை ஒரு கையிலும், பகவத் கீதையை இன்னொரு கையிலும் விஜய் வைத்திருப்பதாக விசிக கடுமையாக விமர்சித்துள்ளது. விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு பேசியபோது, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர முடியாது என திருமாவளவன் கூறவில்லை. அம்பேத்கர் குறித்த புரிதல் இல்லாத விஜய்யுடன் மேடையை பகிர முடியாது என்றே தெரிவித்தார் என்றார். சமரச பாயாசம் கிண்டுபவர் விஜய் என்றும் அவர் விமர்சித்தார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முரசொலி அறக்கட்டளை பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதாக 2019ஆம் ஆண்டு அவர் பேசியிருந்தார். இதுதொடர்பாக திமுக தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு (பிங்க் பால்) வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். முதல் டெஸ்டில் காயம் அடைந்த ஹேசில்வுட்க்கு பதிலாக ஸ்காட் போலண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். AUS அணி: கவாஜா, மெக்ஸ்வீனி, லாபுஷேன், ஸ்மித், ஹெட், மார்ஷ், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ்(C), ஸ்டார்க், லியான், போலண்ட்.
என்னது தவளையை பாலில் போட்டு குடித்தார்களா? ஆம், விநோதமாக இருந்தாலும் அது உண்மை தான். Fridge கண்டுபிடிக்காத காலத்தில் பால் கெட்டுப்போகாமல் இருக்க, ரஷ்யாவில் இதை செய்துள்ளனர். Russian brown என்ற தவளையின் தோலில் சுரக்கும் திரவத்தில் பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு தன்மை இருந்ததால், அது பாலை கெட்டுப்போகாமல் வைத்ததாம். இந்த அறிவியல் உண்மை பின்னாளில் தெரிய வந்தது. நல்லவேளை இப்போ Fridge இருக்கு.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினால், அண்டை மாநிலங்களில் இருந்து கள்ளச்சந்தையில் மது உள்ளே வரும் என்கிறார் அமைச்சர் ரகுபதி. இதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், மது விற்பனை வருமானத்தை நம்பி தமிழக அரசு இல்லை என்றார். மேலும், மதுவிலக்கை கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுத்ததாலேயே 2016-ல் ஆட்சியை இழந்ததாகவும் கூறினார். உங்க கருத்து?
ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழையால் வட மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில் CM ஸ்டாலின் தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரணத்திற்கு வழங்கியுள்ளார். தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் இதற்கான காசோலையை அவர் வழங்கினார். தமிழ்நாட்டில் MLAக்களுக்கு மாதம் ₹1,05,000மும், முதல்வருக்கு ₹2,05,000மும் ஊதியமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.