India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 வழங்கும் PM INTERNSHIP திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மோடியால் 2ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட இருந்த இத்திட்டம், பிறகு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வேதாந்தா, ஓஎன்ஜிசி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் இருந்து INTERNSHIP கடிதம் அனுப்பப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டு, ரூ.6,000 டெபாசிட் செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு இது ஒரு வரலாற்று தருணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், வீரர்களின் ஒப்பற்ற திறமை, நம்பமுடியாத குழுப்பணிக்கு கிடைத்த வெற்றி எனவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மஸ்கட்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
உடலை சுத்தம் செய்யும் மருந்து என நினைத்து தவளை விஷத்தை குடித்து மெக்சிகோ நடிகை மார்செலா அல்காசர் துடிதுடித்து உயிரிழந்தார். இறை நம்பிக்கையில் அதிக நம்பிக்கை கொண்ட இவர், மத விழா ஒன்றில் நடந்த ஹீலிங் எனப்படும் வினோத சடங்கில் இந்த விபரீத முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் குடித்தது ராட்சத இலை தவளை எனப்படும் அமேசானிய தவளை விஷம் என்பது தெரியவந்துள்ளது. ஹெல்த் விஷயத்துல விளையாடாதீங்க..
நடித்த முதல் தமிழ் படமே ₹500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அதுவும் எம்.ஜி.ஆர், ரஜினியின் கனவு படம். 2013ல் Miss Beautiful Face பட்டத்தை வென்றவர், பாலிவுட்டிலும் பிரபலம் தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்துள்ள இவர் தான் இன்று இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் டாபிக். ₹3,500 கோடி சொத்து வாரிசை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இன்னுமா தெரியல…கமெண்ட்ஸ்ல பாருங்க
சென்னை மாதவரத்தில் திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு சென்ற 11 பேர் லிப்ட்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னிகா மஹாலில் 25 நிமிடங்களாக சிக்கியிருந்தவர்களை TNFRS வீரர்கள் மீட்டனர். அதில், 2 பேர் மயக்கமடைந்ததால் அவர்களை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்துள்ளனர். விசாரணையில் 11 பேர் ஒரே நேரத்தில் சென்றதால் வெயிட் தாங்காமல் லிப்ட் நின்றுவிட்டது. ஓவர் வெயிட் உடம்புக்கு மட்டுமல்ல லிப்ட்டுக்கும் ஆகாது..
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 11ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
குடிநீரில் <<14794742>>கழிவு நீர் கலக்கவில்லை<<>> என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்த தண்ணீரை குடிப்பார்களா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். குடிநீரால் பாதிப்பில்லை எனவும் மக்கள் மீது தான் தவறு என்றும் திமிராக <<14796486>>அமைச்சர் அன்பரசன்<<>> பதிலளித்துள்ளதாக அவர் சாடியுள்ளார். மேலும், CM ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகிறதா என்ற கேள்வி வலுப்பதாகவும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மேகாலயா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா 28 பந்தில் சதமடித்து அசத்தினார். 144 ரன் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஓப்பனர் அபிஷேக் எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதன்மூலம் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் பண்ட், ரோஹித் ஆகியோர் 3, 4வது இடத்தில் உள்ளனர்.
1) தமிழ்நாட்டில் மொத்தம் 532 ரயில் நிலையங்கள் உள்ளன 2) புத்தர் பாலி மொழியில் போதித்தார் 3) ESI Employees State Insurance 4) இந்தியாவில் மன்னர் மானியம் 1971ஆம் ஆண்டில் ஒழிக்கப்பட்டது 5) இந்தியாவின் முதல் பெண் உயிர்வேதியியலாளர் – கமலா சோஹோனி 6) “திருவிளையாடல் புராணம்” நூலின் ஆசிரியர் – பரஞ்சோதி முனிவர் 7) சூரியனின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை – 15,000,000 °C
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ₹2000 நிவாரணம் வழங்கும் பணியை TN அரசு தொடங்கியுள்ளது. ₹5000 அறிவித்த புதுச்சேரியில் நிவாரணத் தொகையை உயர்த்தி தருமாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் எதிர்கட்சிகள் நிவாரணத் தொகையை உயர்த்தி அளிக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. இதனால், எதிர்ப்பு எழுவதற்கு முன்பே மக்கள் கையில் ₹2,000ஐ சேர்க்க அரசு புயல் வேகம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.