news

News November 29, 2024

டெல்லி தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி

image

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் மீண்டும் ஒரு சக்தியாக மாற வேண்டிய தேவை உள்ளதாகவும், அதை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் நிறைவேற்றும் எனவும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். 70 தொகுதிகளை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது.

News November 29, 2024

கர்மா சும்மாவே விடாது: வெச்சு செய்த நயன்தாரா

image

தனது திருமண ஆல்பத்தில், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இடம்பெற்ற 24 நொடி சீனை, தனுஷின் அனுமதியில்லாமல் நயன்தாரா பயன்படுத்தினார். இதையடுத்து, அவரிடம் ₹ 10 கோடி கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில், பொய்களால் ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் அழித்தால், அதை கடனாக எடுத்துக் கொண்டு, கர்மா உங்களுக்கு வட்டியுடன் திருப்பித் தரும்” எனப் பதிவிட்டுள்ளார்.

News November 29, 2024

அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழை

image

மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் “ஃபெஞ்சல்” புயல் நாளை பிற்பகலில் மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும் என IMD தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது சென்னை, மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களில் 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்யக்கூடும் எச்சரித்துள்ளது.

News November 29, 2024

20 ஓவர் போட்டியில் 11 பேரும் பந்துவீசி புதிய சாதனை

image

சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில், டெல்லி அணி புதிய சாதனையை படைத்துள்ளது. மணிப்பூர் அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் டெல்லி அணி வீரர்கள் 11 பேரும் பந்துவீசியுள்ளனர். குறிப்பாக கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஆயுஸ் பதோனி உள்பட 11 பேரும் கட்டுக்கோப்பாக பந்துவீசி அசத்தினர். இந்தப் போட்டியில் மணிப்பூர் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.

News November 29, 2024

ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க உத்தரவு

image

காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை DGPக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு விசாரணையில், ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க DGPக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பு கூறியுள்ளது. அத்துடன், காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற DGP உத்தரவையும் சுட்டிக்காட்டியுள்ளது.

News November 29, 2024

BREAKING: நாளை இங்கு விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு Red Alert விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் மாவட்டமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து லீவ் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 29, 2024

ஆஸி. வீரர்கள் கோலியிடம் கற்க வேண்டும்: பாண்டிங்

image

பெர்த் டெஸ்டில் சதமடித்த கோலியை ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டினார். அவர், ‘ ஆஸி. பேட்ஸ்மேன்கள் கோலியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எதிர் அணிகளுடன் அவர் சண்டையிட விரும்புவதில்லை. அவர் தனது பலத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். ஆஸி. வீரர்கள் லாபுஷேன், ஸ்மித் இதைப் பின்பற்ற வேண்டும். கிரீஸில் நிலைத்து நின்றால் மட்டும் போதாது சூழ்நிலைக்கு ஏற்ப ரன்கள் எடுக்க வேண்டும்’ என்றார்.

News November 29, 2024

இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழை!

image

வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் மிகத் தீவிரமாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்த புயல் சின்னம் கரையை நோக்கி நகர்வதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News November 29, 2024

‘ரெட் அலர்ட்’ நிவாரண முகாம்கள் தயார்: அமைச்சர்

image

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் கூறியுள்ளார். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த மாவட்டங்களில் 2,229 நிவாரண மையங்கள் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News November 29, 2024

சமந்தாவின் தந்தை காலமானார்..

image

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு காலமானார். ‘Until we meet again Dad’ என்று புரோக்கன் ஹார்ட் எமோஜியுடன், தந்தை மரணத்தை சமந்தா உருக்கமாக தன் இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். ஜோசப் பிரபுவின் மரணத்துக்கு காரணம் பற்றி தகவல் தெரியவில்லை. தனது தந்தையுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதாக அண்மையில் ஒரு பேட்டியில் சமந்தா தெரிவித்து இருந்தார். ஜோசப் மறைவிற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

error: Content is protected !!