India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கைலாஷ் – மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பின் தொடங்க உள்ளது. வரும் ஜூன் – ஆகஸ்ட் வரை 750 பேரை, 15 பிரிவுகளாக அழைத்து செல்ல வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. கடைசியாக கடந்த 2019-ல் இந்த யாத்திரை நடந்தது. கொரோனா மற்றும் 2020-ல் லடாக் எல்லையில் சீன மோதலால் யாத்திரை நிறுத்தப்பட்டது. மானசரோவர் ஏரி சீனாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட திபெத்தில் உள்ளது.
காலையில் எழுந்தவுடன் இவற்றை செய்வதால், நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர முடியும் ✦காலை கடனை முடித்து விடுங்கள், உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் ✦ஒரு கிளாஸ் தண்ணீரை பருகுவது, செரிமான பிரச்னையை சீராக்கும் ✦எழுந்ததும் சோம்பேறி தனமாக அமராமல், உடனே சில வேலைகளை செய்ய தொடங்குங்கள். உடல் உத்வேகம் பெறும் ✦காலை டிபனாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.
தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரியக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 22-ம் தேதி உச்சம் தொட்ட தங்கம் விலை பிறகு 2 நாள்களாக சரிந்தது. அதன்படி, இன்று 1 கிராம் ரூ.9,005ஆகவும், 1 சவரன் ரூ.72,040ஆகவும் விற்பனையாகிறது. இந்நிலையில் அடுத்த 12 மாதங்களுக்கு தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரியக்கூடும் என்று பொருளாதார நிபுணர்களும், தங்க சுரங்க நிர்வாகிகளும் கூறியுள்ளனர்.
பாக். உடனான வர்த்தகம் முற்றிலும் முடிவுக்கு வந்தால், அங்கிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களின் விலை அதிகரிக்கலாம். உலர் பழங்கள், கல் உப்பு, ஆப்டிகல் லென்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம். அதேபோல், சுண்ணாம்பு, காட்டன், ஸ்டீல், ரசாயனங்கள், லெதர் விலையிலும் மாற்றம் இருக்கும். இருப்பினும், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் PAK-க்குத்தான் இது அதிக இழப்பை ஏற்படுத்தும்.
பிறந்தது முதல் சுறுசுறுப்பாக கைகால்களை உதைத்து, தவழ்ந்து கொண்டு இருக்கும் குழந்தைகள் வளரும்போது இயல்பான எடையுடன் இருக்கின்றன; ஆனால் கொஞ்சம் சோம்பலான குழந்தைகள் வளரும் போது உடல்பருமன் அதிகரிக்கிறது என்கிறார்கள் அமெரிக்க ஆய்வாளர்கள். பெற்றோர்களே கவனம், குழந்தைக்கும் உடற்பயிற்சி தேவை!
2026 தேர்தலில் பெண்கள் வாக்குகளை கவரும் வகையில், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, திமுக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டால், அது ஏழை பெண்களுக்கு பெருத்த உதவியாக இருக்கும். அதனால் வாக்கு வங்கி கணிசமாக உயரும் என அரசு யோசித்து வருகிறது.
இன்று வைசாக அமாவசை எனப்படும் சித்திரை அமாவாசை. பித்ரு தோஷம் நீங்க சில பரிகாரங்களை செய்யலாம். அரச மரத்திற்கு பூக்கள் சமர்பித்து, உங்கள் முன்னோர்களை நினைத்து ‘ஓம் பித்ருப்ய: நமஹ’ என்று சொல்லுங்கள். சூரிய பகவானுக்கு நீர் சமர்பித்து வழிபடலாம். தெற்கு திசை நோக்கி உங்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்யுங்கள். முன்னோர்களின் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி அவர்களின் ஆசியை வேண்டுங்கள்.
2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் இபிஎஸ் தெளிவாக உள்ளார். எனவே, 170-க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும் என அவர் நினைக்கிறார். அதனால் தான், ADMK 150, BJP 40, பிற கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகள் என்ற பாஜகவின் கணக்கிற்கு அவர் உடன்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த முறை ஆட்சியை பிடிப்பதில் அவர் உறுதியாக உள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
பாக். ஆதரவில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் எனும் தீவிரவாத அமைப்பு இந்தியாவுக்கு எதிராக போரை அறிவித்துள்ளது. ஜம்மு & காஷ்மீரில் ஆயுதப்போராட்டத்தை தொடங்க தயாராக இருப்பதாகவும், தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், அல்லாவின் ஆதரவில் இது நிகழ்த்தி காட்டப்படும் எனவும், காஷ்மீர் ஜிகாத் போராட்டம் நடக்கும் என்றும் கூறியுள்ளது.
கோடை வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இயல்பை விட இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். எனவே, பிற்பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும். அதிகளவில் நீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்
Sorry, no posts matched your criteria.