India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்னும் எவ்வளவு விழிப்புணர்வு வழங்குவது என தெரியவில்லை. உத்தரகாண்ட் ருத்ராபூரில் 12வது படிக்கும் பையன், ஆன்லைன் விளையாட்டில் கடன் பெருகியதால், தற்கொலை செய்து கொண்டுள்ளார். டீக்கடை நடத்தும் இவரது குடும்பம் விஷயமறிந்து கண்டித்தபோதிலும், குடும்பத்தினருக்கு தெரியாமல் விளையாடி உள்ளார். ஆன்லைன் விளையாட்டிற்கு அவன் அடிமையாகி விட்டான் என்கிறார் சிறுவனின் மாமா. இன்னும் எத்தனை உயிர்களை இழக்க நேரிடுமோ?
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா, ஜடேஜா ஆகியோர் இன்று தங்களின் பிறந்தநாளை கொண்டாட உள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்திய அணிக்காக இவர்கள் மூவரும் செய்த சாதனைகள் அளப்பரியது. மேலும் இன்று முன்னாள் வீரர்களான ஆர்.பி சிங், கருண் நாயரும் பிறந்தநாள் கொண்டாட உள்ளனர். Happy birthday indian cricket stars.
விகடன் சார்பாக நடத்தப்படும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் கலந்து கொள்ளவிருக்கிறார். இதனையடுத்து, அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் கம்பி வேலிக்குப் பின்புறம் அமர வேண்டும் போன்றவை விவாதத்தை கிளப்பியிருக்கின்றன. அரசியல் களத்திற்கு வந்த பின்னரும் எதற்காக மக்களிடம் இருந்து இவ்வளவு தூரம் விஜய்?
தமிழில் மாற்று சினிமாவை இயக்குவதில் உறுதியாக இருந்த இயக்குநர் ஜெயபாரதி (77) சற்றுமுன் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. 1979ஆம் ஆண்டு ‘கிரவுட் ஃபண்டிங்’ முறையில் ‘குடிசை’ படத்தை இயக்கினார் ஜெயபாரதி. பின்னர், 2010ஆம் ஆண்டு புத்திரன் படத்தை இயக்கி தமிழக அரசின் விருதுகளை வென்றார்.
மிந்த்ரா M-Now என்ற புதிய quick commerce சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. M-Nowவில் ஆர்டர் செய்தால் 30 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறது. நேற்று பெங்களூருவில் குறிப்பிட்ட இடங்களில் சேவையை தொடங்கிய மிந்த்ரா விரைவில் மற்ற மெட்ரோ நகரங்களான மும்பை, சென்னை போன்ற இடங்களிலும் சேவையை வழங்க உள்ளது. இதன்மூலம் zepto, blinkit போன்ற நிறுவனங்களுக்கு Myntra கடும் போட்டியாக இருக்கும்.
வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்ட இலக்கை அடைய மத்திய அரசிடம் ₹1,700 கோடி நிதியை எதிர்பார்த்து TN குடிநீர் வாரியம் காத்திருக்கிறது. மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ₹4,900 கோடி நிதி அளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், ₹1,700 கோடி நிலுவையில் இருப்பதால் மாநில அரசுக்கு கடும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை யுஏஇ மற்றும் பாகிஸ்தானில் நடத்த PCB சம்மதம் தெரிவித்துள்ளதாக ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இந்தியாவின் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளது. மேலும் இந்த ஹைபிரிட் முறை 2027ஆம் ஆண்டு வரை நடைபெறும் அனைத்து ஐசிசி தொடரிலும் இது கடைபிடிக்கப்பட உள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா 2 படம் இந்திய அளவில் முதல் நாளில் ₹175கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, டப் செய்து ஹிந்தியில் வெளியான இந்த படம் பாலிவுட்டில் மட்டும், ₹65-₹67 கோடிகளை குவித்து விட்டதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக படம் முதல் நாளில் ₹200 கோடியை கடந்து விட்ட நிலையில், இது சினிமா வரலாற்றிலேயே முதல் நாளில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் புஷ்பா 2 படம் பெற்றுள்ளது. Wildfire தான்..
விழுப்புரத்தில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வுக்கு சென்ற மினிஸ்டர் பொன்முடி மீது சேற்றை அள்ளி வீசிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி விஜயராணி, ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் பொதுமக்களை பழிவாங்கக் கூடாது என ஜெயக்குமாரும், சேறு வீசியது தவறு என ராமதாஸும் கருத்து தெரிவித்திருந்தனர்.
1992 டிசம்பரில் நடந்த சம்பவம், 32 ஆண்டுகளாகியும் இன்றும் பதற்றம் நீடிக்கிறது. 1980ல் விஷ்வ ஹிந்து பரிஷத் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என எழுப்பிய முழக்கம் 12 ஆண்டுகளில் நாட்டையே உலுக்கியது. இந்நிகழ்வை தொடர்ந்து நடைபெற்ற பல கலவரங்களும், நிகழ்வுகளும் இந்திய தேசிய அரசியலின் போக்கையுமே மாற்றியமைத்தது. சர்ச்சைகள் நிறைந்த இந்திய அரசியலின் ஒரு முக்கிய மையப்புள்ளி என்றே கூறலாம்.
Sorry, no posts matched your criteria.