India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என்று, மத்திய அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வரி செலுத்த தேவையில்லை என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என மத்திய அரசின் PIBFactCheck நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
தெலங்கானாவில் 10 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்செரியல் மாவட்டத்தைச் சேர்ந்த 4ம் வகுப்பு சிறுமி நேற்று காலை திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பெற்றோர் அவரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். எனினும், சிறுமி ஏற்கெனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். முன்னதாக, <<14629107>>2 வாரம் முன்பு<<>> இதே பகுதியில் 12 வயது சிறுமி மாரடைப்பால் மரணமடைந்தார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் (34) அறிவித்துள்ளார். 2018இல் அயர்லாந்துக்கு எதிரான T20இல் அறிமுகமான இவர் இதுவரை தலா 3 டி20 & ODI போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பின் இந்திய அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கோலி தலைமையிலான (2008) U19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் கவுல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்களின் பெயரில் மோசடி செய்பவர்களுக்கு உண்மையில் அப்பிரபலங்களை பெரிதாக தெரிந்திருக்காது. எழும்பூரை சேர்ந்த வீரராகவன் அளித்த புகாரில், அடையாளம் தெரியாத ஒருவர் ராகவா லாரன்ஸ் உதவியாளர் என அணுகியுள்ளார். லாரன்ஸ் தொண்டு நிறுவனத்தில் பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்க ₹61,550 ரூபாய் கேட்க, இவரும் அளித்து ஏமாந்துள்ளார். புகாரின் பேரில், தினேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
நயன்தாரா எவ்வித காப்புரிமை மீறலிலும் ஈடுபடவில்லை என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். ஆவணப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் Behind the Scenes அல்ல எனவும், அது நயன் -விக்கி இருவரின் தனிப்பட்ட நினைவுகளின் வீடியோக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனுஷ் தொடர்ந்த வழக்கில், இருவரும் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், நயன் வக்கீல் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
பல்லடம் அருகே பண்ணை வீட்டில் தங்கியிருந்த செந்தில்குமார், அவரது பெற்றோர் அமலாத்தாள், தெய்வசிகாமணி ஆகியோர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவில், வீடு புகுந்த கொள்ளையர்கள் தூங்கிக்கொண்டிருந்த மூவரையும் கொன்றுவிட்டு நகை, பணத்துடன் தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனி வீட்டை குறிவைத்து ‘தீரன்’ பட பாணியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகாது என்று முடிவு செய்யப்பட்ட ஃபெங்கல் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று மாலை வலுவிழக்கத் தொடங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், அது இன்று காலை மீண்டும் வலுவடையத் தொடங்கியிருக்கிறது. இதனால், இப்புயல் நாளை மகாபலிபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்கவுள்ளது.
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் திருச்சி சிவா நோட்டீஸ் கொடுத்துள்ளார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் பிரச்னையை தடுக்க ஆளும் பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.
1) தங்கப் போர்வை நிலம் என அழைக்கப்படும் நாடு எது? 2) கண்ணீர் சுரப்பியின் பெயர் என்ன? 3) இந்தியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் யார்? 4) தமிழ்நாட்டின் மோஸ் எனப் போற்றப்படும் எழுத்தாளர் யார்? 5) IATA என்பதன் விரிவாக்கம் என்ன? 6) நீருக்கடியில் பேசும் குரலைக் கேட்ட உதவும் கருவி எது? 7) வியட்நாமின் தேசிய மலர் எது?விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
ரஜினி- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து தான் இப்போது ஹாட் டாபிக். எதனால் இந்த தம்பதி விவாகரத்து செய்தனர் என்ற விவரத்தை தான் பலரும் எதிர்பார்க்கிறார்கள். பல காரணங்கள் கூறப்பட்டாலும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை. இதற்கிடையில் தனுஷ், “நாங்கள் காதலித்தெல்லாம் திருமணம் செய்யவில்லை” எனக் கூறிய விஷயம் வைரலாகி வருகிறது. இதனை திருமணம் முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து போது தனுஷ் கூறியவையாகும்.
Sorry, no posts matched your criteria.