India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுவிஸ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. UBS வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில் 1,757ஆக இருந்த பில்லினியர்களின் எண்ணிக்கை 2,682ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் 268 பேர் ₹100 கோடி சொத்து மதிப்புடன் பில்லினியர்களாக உருவெடுத்துள்ளனர். இந்தியாவில் 185 பில்லினியர்கள் உள்ளனர்.
வாடிக்கையாளர்கள் எடுக்க தவறும் பணம் ஏடிஎம்மில் உள்ளே செல்லும் வசதியை மீண்டும் கொண்டு வர ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. 2012ஆம் ஆண்டில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், பணத்திற்கு பதிலாக தபால் உறை போன்றவற்றை வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டதால் அந்த வசதி நீக்கப்பட்டது. தற்போது, வேறு மாதிரியான மோசடிகள் நடப்பதால், அதை தடுக்கும் வகையில் மீண்டும் அந்த வசதி கொண்டுவரப்படவுள்ளது.
கடந்த வாரம் ருத்ர தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் புயலால் 2.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 3,685 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும், 96,000 கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷனில் இன்று காலை பெண் போலீஸ் ஒருவர் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி காந்திகுப்பம் போலீஸ் ஸ்டேஷனில் SSIஆக இருந்த ஸ்டெல்லா மேரி (50) என்பது தெரியவந்துள்ளது. ஏலகிரி எக்ஸ்பிரஸை பிடிக்க அவசரமாகச் சென்றபோது அவர் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. போலீசா இருந்தாலும் பொறுமை அவசியம்..
லட்சுமி கூரையை பிச்சிட்டு கொட்டுதுன்னு கேள்வி பட்டிருப்போம்ல அது கொல்லம் பால் வியாபாரி லைப்ல நிஜமாகியிருக்கு. கேரள அரசின் பூஜா பம்பரில் ₹12 கோடி விழுந்த JC 325526 நம்பருக்கு சொந்தக்காரர் கொல்லம் தினேஷ்குமார்(41) என்பது தெரியவந்துள்ளது. Tax போக ₹7.6 கோடி தினேஷுக்கு கிடைக்கும். ஓவர் நைட்டில் கோடீஸ்வரரான அவருக்கு வாழ்த்து கூற உறவினர்கள் படையெடுத்து வருகின்றனர்.
‘சூர்யா 45’ படத்தில் த்ரிஷா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘கங்குவா’ படத்தைத் தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு டிச. 23ஆம் தேதி நிறைவடைகிறதாம்.
வங்கிகளுக்கு RBI அளிக்கும் கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளாா். ரெப்போ வட்டி விகிதம் தற்போது 6.5%ஆக உள்ளது. கொரோனாவுக்குப் பின் ரெப்போ வட்டி விகிதம் கடுமையாக உயர்த்தப்பட்டதால், லோன் வாங்கியோர் அதிக வட்டி செலுத்தி வருகின்றனர். அவர்களுக்காக வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சியே மிஞ்சியிருக்கிறது.
1) மாங்கனீஸ் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? 2) இந்தியாவின் நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் யார்? 3) NSE என்பதன் விரிவாக்கம் என்ன? 4) ISRO அமைப்பு எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 5) இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் யார்? 6) திருக்குறளில் இருமுறை வரும் அதிகாரம் எது? 7) புவிக்கும், பிராக்ஸிமா செண்டாரிக்கும் உள்ள தூரம் எவ்வளவு? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர்கள் கையில் கருப்பு பேண்ட் அணிந்துள்ளனர். உள்ளூர் தொடரில் விளையாடிய போது தலையில் பந்து தாக்கி உயிரிழந்த முன்னாள் ஆஸி. வீரர் பிலிப் ஹியூக்ஸின் 10-ம் ஆண்டு நினைவாக கையில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடவுள்ளனர். அவர் நினைவாக ஆவணப்படம் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது. போட்டி தொடங்கும் முன், அவருக்கு மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 குறைந்துள்ளது. நேற்று ₹57,120க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ₹56,920க்கு விற்கப்படுகிறது. நேற்று ₹7,140ஆக இருந்த ஒரு கிராம் தங்கம், ₹25 குறைந்து. ₹7,115ஆக விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ₹101க்கு விற்பனையாகிறது.
Sorry, no posts matched your criteria.