India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பலரும் கூல் டிரிங்ஸ், பழச்சாறு, எலுமிச்சை சாறு அருந்துகின்றனர். இதனால் எலுமிச்சை தேவை அதிகரித்துள்ளது. ஆனால் போதிய வரத்து இல்லை. இதனால் சென்னையில் எலுமிச்சை விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் 1 கிலோ எலுமிச்சை ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இதனால் எலுமிச்சை வாங்க வந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உங்கள் ஊரில் எலுமிச்சை விலை என்ன?
நமது வயிற்றுக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருப்பது நார்ச்சத்து (Fiber). அது வாழைப்பழத்தில் அதிகமாக இருக்கிறது (3 கிராம்). ஆகையால், தினமும் ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்வது வயிற்றுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு ஆரம்ப காலங்களில் தினம் ஒரு வாழைப்பழத்தை கொடுத்து வளர்த்தால், அவர்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்குமாம்.
பிரிட்டன் கால்பந்து வீரர் ஜோ தாம்சன் (36) புற்றுநோய் பாதித்து உயிரிழந்துள்ளார். புற்றுநோய் தீவிரமானதால் அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் வீட்டில் தனது உறவினர்கள் மத்தியில் உயிரிழக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், ஜோ தாம்சன் உயிர் பிரிந்தது. இந்தத் தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் மனைவி பகிர்ந்துள்ளார்.
அஜித்தின் ஃபேன் பாயான ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லியில் தரமான சம்பவத்தை செய்துள்ளார். அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாட, உலக அளவில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலேயே படம் ₹100 கோடி வசூலை தாண்டிய நிலையில் உலகளவில் ₹200 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. இதேபோல், பெரம்பலூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
PBKS அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், முதல் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது RCB அணி. டாஸ் வென்ற PBKS அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய RCB அணியின் வீரர்கள் சால்ட் (4), கோலி (1), லிவிங்ஸ்டன் (4) என்று அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தற்போது, RCB 4 ஓவர்களுக்கு 26-3 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா செல்ல உள்ளார். நாசா, ஆக்சியோம் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு இந்த ஆண்டு அனுப்புகிறது. அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாட்டவருடன் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுபான்ஷு மே மாதம் செல்ல உள்ளார்.
கிரிக்கெட் போட்டியின் இடையே நடுவர் சுருண்டு விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பாமா கோப்பை போட்டியில் KRP XI CC மற்றும் Crescent CC அணிகள் மோதின. 11ஆவது ஓவரின்போது நடுவர் பிரசாத் மல்காஓங்கர் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹாஸ்பிடல் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் நாளை முதல் குளிர்சாதன மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் காலை 7 மணிக்கு குளிர்சாதன மின்சார ரயில் சேவை தொடங்குகிறது. கடற்கரை – செங்கல்பட்டு இடையே 2 சேவைகளும், தாம்பரம் – கடற்கரை இடையே ஒரு சேவையும் இயக்கப்படவுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் மக்களுக்கு இனிப்பான செய்தியை தெற்கு ரயில்வே கொடுத்துள்ளது.
நடிகர் ஸ்ரீ, ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் உடல்நிலை குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடிகர் ஸ்ரீ-யின் தனி மனித உரிமையை அனைவரும் மதிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். நடிகர் ஸ்ரீ குறித்த நிலை தெரியாததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.