India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

*கண்கள், உங்கள் ஆன்மாவுக்கு ஜன்னல்.
*அனைவரையும் நேசியுங்கள், ஒரு சிலரை நம்புங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.
*எதுவுமே செய்யாமல் எதுவும் வருவதில்லை.
*புத்திசாலித்தனமாகவும் மெதுவாகவும் செல்லுங்கள். வேகமாகச் செல்பவர்கள் தடுமாறி விழுந்துவிடுவார்கள்.
*உங்கள் அன்பை அதை மதிக்காதவருக்காக வீணாக்காதீர்கள்.
*பலரிடம் கேளுங்கள், சிலரிடம் பேசுங்கள்.

உலக அளவில் 2024-ம் ஆண்டில் மட்டும் காற்று மாசுபாட்டால் 81 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். குறிப்பாக, இந்தியாவிலும் பல உயிர்களை காற்று மாசு கொன்று வருவதாக AIIMS முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். கடந்த சில நாள்களாக டெல்லியில் காற்று தரக் குறியீடு மிகவும் மோசமானதாக செல்வதால், மக்கள் அவதியுற்றுள்ளனர்.

பிஹாரில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மோடி – ராகுல் காந்தி இடையே கடுமையான வார்த்தை போராகவும் மாறியுள்ளது. ஷேக்புராவில் பரப்புரை மேற்கொண்ட ராகுல், பிஹாரில் தொழில்களை தொடங்க பாஜக விரும்பவில்லை என்று குற்றஞ்சாட்டினார். ஏனென்றால், அதானி & அம்பானி போன்றோர் சீன பொருள்களை பிஹார் உள்பட இந்தியாவில் விற்பனை செய்ய பாஜகவினர் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 505 ▶குறள்: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். ▶பொருள்: ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நடப்பு சாம்பியனான ஆஸி.,வை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்துள்ளது இந்திய மகளிர் அணி. முதல் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணிக்கு, கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது வாழ்த்து மழைகளை பொழிந்துள்ளனர். சச்சின், யுவராஜ் சிங், கம்பீர், ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அதேபோல், ஆந்திர CM சந்திரபாபு நாயுடுவும் மகளிர் அணிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

பாக்., – ஆப்கன் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே ஆப்கனுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கனின் இறையாண்மை, சுதந்திரம் & ஒருமைப்பாட்டுக்கு முழுமையாக ஆதரவளிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாக்., தூண்டி விடுவதை இந்தியா உள்பட எந்த அண்டை நாடுகளும் ஏற்காது என்றும் கூறியுள்ளது.

▶அக்டோபர் 31, ஐப்பசி 14 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: தசமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், இயக்குநர் மாரி செல்வராஜ், கார்த்திகாவை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். அப்போது, கார்த்திகாவுக்கு ₹5 லட்சத்தையும், கண்ணகி நகர் கபடி குழுவுக்கு ₹5 லட்சம் என மொத்தம் ₹10 லட்சத்தை ‘பைசன்’ படக்குழு சார்பாக மாரி அளித்தார்.

இன்று (அக்.31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

தமிழகத்தில் பிஹார் மக்களை திமுக துன்புறுத்துவதாக PM மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹார் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், கர்நாடகா, தெலுங்கான ஆகிய காங்., ஆளும் மாநிலங்களிலும் பிஹார் மக்கள் அச்சுறுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக, ஒடிசா சட்டமன்ற தேர்தலின் போது, புரி ஜெகநாதர் கோயிலின் சாவி தமிழகத்திற்கு சென்றுவிட்டதாக மோடி குற்றஞ்சாட்டியிருந்தார்.
Sorry, no posts matched your criteria.