news

News April 19, 2025

புலி, சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

image

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளை தத்தெடுக்கும் வசதியை பூங்கா நிர்வாகம் வழங்கி வருகிறது. அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயன் ஷேர்யார் என்ற சிங்கத்தையும் யுகா என்ற புலியையும் மூன்று மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். ஒரு புலியை தத்தெடுக்க மாதம் ₹75,000, சிங்கத்துக்கு மாதம் ₹60,000 என மொத்தம் ₹4,05,000-ஐ பூங்காவிற்கு சிவகார்த்திகேயன் செலுத்தியுள்ளார்.

News April 19, 2025

PF ஏடிஎம் திட்டம் மே அல்லது ஜூனில் தொடக்கம்

image

PF பணத்தை எடுப்பதற்கு சில நேரங்களில் மிகுந்த சிரமத்தை மாத சம்பளதாரர்கள் அனுபவிக்கின்றனர். அவர்களின் துயரத்தை போக்கும் வகையில், புதிய திட்டத்தை EPF தயாரித்துள்ளது. இதன்கீழ், PF கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம்மில் பயனாளர்கள் அவசரத் தேவைக்கு எடுக்க முடியும். இந்தத் திட்டத்தை வரும் மே மாத கடைசி (அ) ஜூனில் தொடங்க EPF திட்டமிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

News April 19, 2025

ஏப்.25ல் வானில் தெரியும் ஸ்மைலி!

image

மொபைலில் இருக்கும் சிரிக்கும் எமோஜியை வானில் பார்க்க வேண்டுமா? ஏப்.25 வரை காத்திருங்கள். அன்று இரவு வெள்ளி, சனி கோள்கள் அருகருகே சங்கமிக்கவுள்ளன. அதன் கீழே தேய்பிறை நிலவும் வரும். இது பார்ப்பதற்கு சிரிக்கும் எமோஜி போல தெரியும். விண்ணில் பளிச்சென காட்சி தரும் என்பதால் வெறும் கண்களாலேயே கண்டு ரசிக்கலாம். GET READY KUDOS!

News April 19, 2025

நீக்கப்பட்ட 2-வது நாளே புதிய பணி

image

இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட இரண்டாவது நாளே KKR அணியின் துணை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2018 முதல் 2024 வரை KKR அணியின் துணை பயிற்சியாளராக இருந்துள்ளார். கடந்த ஆண்டு, கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது, அபிஷேக் நாயர் துணை பயிற்சியாளரானார். ஆனால், அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

News April 19, 2025

ஓய்வூதியம் பெறுவோருக்கும் மகளிர் உரிமைத் தொகை

image

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் பெண்களும் சேர்ந்து ரூ.1,000 பெற முடியுமா என பலருக்கு சந்தேகம் உண்டு. அமைப்பு சாரா நல வாரியம் உள்ளிட்ட பிற துறைகளின் வழியாக முதியோர்கள் ஓய்வூதியம் பெற்றாலும், ரேஷன் கார்டில் பெயர் இருப்போருக்கு மாதம் ரூ.1,000 உண்டு. அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படாது.

News April 19, 2025

எப்பவுமே லிப்ட்டில் தான் போறீங்களா.. ஒரு நிமிஷம்?

image

ஆபீஸ், மால், அபார்ட்மெண்ட் என எங்கு சென்றாலும் லிப்டில் போற பழக்கம் இருப்பவரா? எப்போதாவது என்றால் லிப்ட் ஓகேதான். ஆனால், படியில் ஏறுவதும், இறங்குவதும கால்களில் உள்ள தசைகளை வலுப்படுத்துகிறது. ஒரு கார்டியோ பயிற்சி ஆகும், இது இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எலும்புகளை வலுப்படுத்தும். உடற்பயிற்சி ஆகும். உடற்பயிற்சிக்கு நேரமில்லை என்றால், படிக்கட்டில் ஏறி இறங்குங்க போதும்!

News April 19, 2025

RR அணிக்கு 181 ரன்கள் இலக்கு

image

RRக்கு எதிரான நடப்பு IPL போட்டியில் 180 ரன்களை குவித்திருக்கிறது LSG அணி. டாஸ் வென்ற LSG கேப்டன் ரிஷப் பண்ட், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, களமிறங்கிய தொடக்க வீரர் மார்க்ரம் 66 ரன்கள் அடித்து அசத்தினார். ஆயுஷ் பதோனியும் 50 ரன்கள் குவிக்க, LSG அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது.

News April 19, 2025

வீடு, வாகன கடன்கள் மீதான வட்டியை குறைத்த 5 வங்கிகள்

image

ரெப்போ வட்டியுடன் தொடர்புடைய வீடு, வாகனக் கடன்கள் மீதான வட்டியை 5 வங்கிகள் 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளன. SBI வட்டியை 8.50%ல் இருந்து 8.25%ஆக குறைத்துள்ளது. PNB வட்டி 9.10%ல் இருந்து 8.85%ஆகவும், இந்தியன் வங்கி வட்டி 6.25%-ல் இருந்து 6.00%ஆகவும், பேங்க் ஆப் இந்தியா வட்டி 9.1%ல் இருந்து 8.85%ஆகவும், பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா வட்டி 9.05%ல் இருந்து 8.80%ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.

News April 19, 2025

நீட் தேர்வு பலி: TN முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்

image

நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் முன்பு அதிமுக மாணவர் அணி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் பொய் சொல்லி திமுக ஆட்சிக்கு வந்ததாகவும் கண்டன முழக்கம் எழுப்பினர். இதேபோல் TN முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

News April 19, 2025

அது போன்ற படங்கள் எடுத்தால் தியேட்டர்கள் எரிக்கப்படும்: RM

image

‘பம்பாய்’ போன்ற படத்தை இன்று எடுக்க முடியாத சூழல் நிலவுவதாக ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார். அது போன்ற படங்களை வெளியிட்டால், தியேட்டர்கள் கொளுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைந்துவிட்டதாகவும் அவர் கவலை எச்சரித்துள்ளார். மேலும், இந்தியாவின் சூழல் நிலையற்றதாகி விட்டதாகவும், மதம் மிகப்பெரிய பிரச்னையாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!