news

News December 15, 2024

ராகு கேது பெயர்ச்சி 2025: 3 ராசிகளுக்கு பணமழை!

image

புத்தாண்டில் ராகு – கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இதனால் 3 ராசிகளுக்கு பணமழை கொட்ட போகிறது. 1) மிதுனம்: தடைப்பட்ட காரியங்கள் நடக்கும். தொழிலில் லாபம் உண்டு. வருமானம் பெருகும். இல்லறத்தில் மகிழ்ச்சி உருவாகும். 2) தனுசு: புதிய பதவிகள் தேடி வரும். தொட்ட காரியங்கள் வெற்றி அடையும். முதலீட்டில் லாபம் உண்டு. 3) மகரம்: அதிர்ஷ்டத்தால் பணவரவு உண்டு. ஆரோக்கியம் மேம்படும். குடும்ப சிக்கல் விலகும்.

News December 15, 2024

2026-க்குள் நக்சல்களை ஒழிப்போம்: அமித்ஷா

image

சத்தீஸ்கரில் 2026 ஆம் ஆண்டுக்குள் நக்சல்களை முழுவதுமாக ஒழிக்கப்படுவார்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் காவல்துறையின் வெள்ளி விழா நிகழ்வில் பேசிய அவர், “நாட்டிலுள்ள அனைத்து காவல் படைகளிலும் சத்தீஸ்கர் காவல் படை துணிச்சலானது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 287 நக்சல்கள் கொல்லப்பட்டு, சுமார் 1000 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 837 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்” என்றார்.

News December 15, 2024

நாளை பூமியை நெருங்கும் 2 விண்கற்கள்

image

2 பெரிய விண்கற்கள் நாளை பூமியை நெருங்கி வர உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. சிறிய விமானம் போன்ற அளவுடைய 2024 XY5 விண்கல், நாளை அதிகாலை 5.56 மணிக்கும், ஒரு வீட்டைப் போல் அளவுடைய 2024 XB6 விண்கல், நாளை காலை 7.25 மணிக்கும் பூமியை நெருங்கும் என தெரிவித்துள்ளது. இவற்றின் அளவு, வேகம் அச்சுறுத்தலை ஏற்படுத்தினாலும், எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என நாசா கூறியுள்ளது.

News December 15, 2024

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய பிரபலங்கள்

image

2024ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து வாங்குவதில் அதிக முதலீடு செய்த பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ₹76.5 கோடி முதலீட்டுடன் அமிதாப் பச்சன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக ஷாகித் கபூர் ₹58.6 கோடி முதலீடு செய்துள்ளார். மலையாள நடிகர் ப்ரித்விராஜ் சுகுமாறன் ₹30.6 கோடி, அபிஷேக் பச்சன் ₹30.2 கோடி, கே.எல்.ராகு ₹20 கோடி என ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர்.

News December 15, 2024

நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தமிழக வீராங்கனை

image

தமிழ்நாட்டைச் சேர்ந்த நட்சத்திர இளம் வீராங்கனையான <<14888277>>கமலினி<<>> (16) ஆல்-ரவுண்டராக அறியப்படுகிறார். உள்நாட்டுப் போட்டிகளில் தனது விக்கெட் கீப்பிங் & பகுதி நேர சுழற்பந்து வீச்சால் எதிரணியை நிலைகுலைய வைத்துள்ளார். U19 மகளிர் T20 டிராபியில் 311 ரன்களுடன் 2ஆவது டாப் ஸ்கோரராக விளங்கியதை அவரது செயல்திறனுக்கு எடுத்துக்காட்டாக கூறலாம். தற்போது அவர் SK அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.

News December 15, 2024

திருக்குறள்படி வாழ்ந்தவர் கருணாநிதி: எ.வ. வேலு

image

இன்றைய அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு மட்டும் தான் ஆதரவளிப்பதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். மேலும், திருக்குறளின் புகழை பாடும் ஒரே கட்சி திமுகதான் எனக் கூறிய அவர், திருக்குறள் உரையின்படி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் கருணாநிதி எனவும் புகழாரம் சூட்டினார்.

News December 15, 2024

தவெகவில் இணைகிறார் ஆதவ் அர்ஜுனா?

image

விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகியுள்ள நிலையில், அவர் தவெகவில் இணைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, தவெகவின் உயர்மட்ட குழுவுடன் ஆதவ் அர்ஜுனா தரப்பு பேசி வருவதாக தகவல்கள் பரவி வந்தன. மேலும், தவெகவின் IT WING ஆதவ் கைக்கு மாறப் போவதாகவும் பேச்சு அடிபட்டு வந்தது. இந்த சூழலில், ஆதவ் அர்ஜுனாவின் இந்த முடிவு, இதனை உறுதிப்படுத்துவது போல உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

News December 15, 2024

காங்கிரசின் செயல்பாடு குறித்து உமர் கவலை

image

ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்குள்ளது என உமர் அப்துல்லா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், லோக்சபா தேர்தலிலுக்குப் பிந்தைய காங்கிரசின் செயல்பாடு குறித்து I NDIA கூட்டணி கட்சிகள் கவலைப்படுகின்றன. இதை சரிசெய்வது குறித்து அக்கட்சி பரிசீலிக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் தனது தொகுதி பங்கீடு உத்திகளை மேம்படுத்த வேண்டும்” என்றார்.

News December 15, 2024

பால் விலை உயர்வு நூதன மோசடி: டிடிவி கண்டனம்

image

ஆவின் புதிதாக அறிமுகப்படுத்திய மேஜிக் பிளஸ் பால் பாக்கெட் நூதன மோசடி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 500 மி.லி பால் பாக்கெட் அளவை 450 மி.லி ஆக குறைத்து சில்லறை தட்டுப்பாட்டை காரணம் காட்டி விலையை ரூ.44-லிருந்து ரூ.55 ஆக உயர்த்தியதாகவும் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் பால், பால் பொருட்களின் விலையை ஆண்டுக்கு 2 முறை உயர்த்துவது உற்பத்தியாளர்களுக்கு செய்யும் துரோகம் எனவும் கூறியுள்ளார்.

News December 15, 2024

மகாராஷ்டிரா அமைச்சரவை பதவியேற்றது

image

மகாராஷ்டிராவின் ஆளும் மகாயுதி கூட்டணியின் 39 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். பாஜக தரப்பில் 19, சிவசேனா (ஷிண்டே) 11, NCPயில் 9 பேரும் பொறுப்பேற்றனர். இவர்களுக்கான துறைகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. வருவாய், கல்வி, மின்சாரம், பாசனம் ஆகிய துறைகளை பாஜகவிற்கும், நிதி, கூட்டுறவு, விவசாயம், விளையாட்டு துறைகள் NCPக்கும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனா உள்துறையை குறிவைத்துள்ளது.

error: Content is protected !!