India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேசிய ஒற்றுமை தின விழா, குஜராத்தில் நடைபெற்றது. இதில், <<18156617>>அணிவகுப்புக்கு<<>> பின் பேசிய PM மோடி, காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற படேலின் கனவை காங்., மறந்து செயல்பட்டதே, காஷ்மீரின் துயரத்திற்கு காரணம் என குற்றஞ்சாட்டினார். பிரிவு 370-ஐ நீக்கியதால், காஷ்மீர் இன்று ஒன்றுபட்டுள்ளதாக கூறிய அவர், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் 30 கோடிக்கும் மேற்பட்ட LPG இணைப்புகள் உள்ளன. இதில், 10 கோடி பேர் PMUY திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிலிண்டர் வாங்குகின்றனர். இந்நிலையில், அனைத்து விதமான பயனாளிகளும் அக்.31-க்குள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் E-KYC-ஐ முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் நவம்பர் மாதத்தில் இருந்து மானிய தொகை டெபாசிட் செய்யப்படாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Hit படங்களும், ஸ்டார் படங்களும் பல மொழிகளில் வெளியாவது வழக்கம். ஆனால், மராத்தி சினிமாவில் இந்த வழக்கம் கிடையாது. இங்கு ப்ளாக்பஸ்டர்கள் அபூர்வம். ஆனால் சமீபத்தில் வெளியான ‘தசாவதார்’ படம், பிளாக்பஸ்டராக மாறியது. தற்போது இந்த படம் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு, நவ.21-ல் கேரள தியேட்டர்களில் வெளியாக உள்ளது. மராத்தி சினிமா வரலாற்றில் ஒரு படம் வேறு மொழிக்கு டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல் முறை.

பிஹாரிகளுக்கும் தமிழர்களுக்கும் PM மோடி பகையை உண்டாக்குவதாக CM ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள பிஹாரிகளை திமுகவினர் துன்புறுத்துவதாக PM கூறியது உண்மை என்ற அவர், அமைச்சர்கள் கூட பிஹாரிகளை ஏளனமாக பேசியதை தமிழக மக்கள் அறிவார்கள் என பதிவிட்டுள்ளார். மேலும், அரசு துறையில் ஊழல் நடந்திருப்பதை மடைமாற்றவே CM, PM-ஐ விமர்சிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் (கோல்கீப்பர்) மானுவல் ஃபிரடெரிக் (78) காலமானார். உள்ளூர் போட்டிகளில் ஜொலித்த ஃபிரடெரிக், 1972-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். இவர்தான் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் கேரள மாநிலத்தவர். 2019-ம் ஆண்டு, விளையாட்டுக்கான அவரது பங்களிப்புக்காக தியான் சந்த் ( Dhyan Chand) Award வழங்கப்பட்டது.

மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி புகார் அளித்த ஜாய் கிரிசில்டாவிற்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மாதம் ₹6.50 லட்சம் பராமரிப்பு தொகை கேட்டு ஜாய் நேற்று மனுதாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. ரங்கராஜுக்கு ஏற்கெனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADMM-Plus மாநாட்டில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர், USA-வின் போர் செயலர் பீட் ஹெக்செத்தை சந்தித்து பேசினார். அப்போது, INDIA -USA இடையே 10 ஆண்டுகளுக்கான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து கூறிய ஹெக்செத், இந்தியாவுடனான உறவு மிகவும் வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 2 நாடுகள் இடையே தகவல் & தொழில்நுட்ப பரிமாற்றம் அதிகமாகும்.

CM ஸ்டாலின் ஆகஸ்ட் 12-ல் தொடங்கி வைத்த ‘தாயுமானவர்’ திட்டம் நவம்பர் முதல் வாரத்தில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர். இனி, ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படும்.

நாட்டின் சாபகேடாக மது மாறிவிட்டாலும், விற்பனை எப்போதும் அமோகம்தான். 2024 – 2025-ல் அதிகமாக மது அருந்திய மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவை Case-களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. (ஒரு Case = 12 மது பாட்டில்கள்) அவை என்னென்ன என தெரிந்து கொள்ள மேலே உள்ள போட்டோஸை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். லிஸ்ட்டில் டாப்பில் நீங்க எதிர்பார்த்த மாநிலம் எது?

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது T20 போட்டி இன்று மெல்போர்னில் மதியம் 1:45 மணிக்கு தொடங்குகிறது. ஆனால், போட்டி தொடங்கும் நேரத்தில், மழை பொழிவதற்கு 66% வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. முதல் T20 மழையால் ரத்தாகியது போலவே, இந்த போட்டியையும் மழை கெடுத்துவிடுமோ என்ற வருத்தத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.