news

News January 9, 2025

குடும்பத்தில் ஒருவருக்கு தேவஸ்தானத்தில் வேலை: CBN

image

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு தேவஸ்தானத்தில் வேலை வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார். மேலும், கூட்ட நெரிசலுக்கு காரணமான தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி கௌதமி, முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர் மற்றும் SP சுப்பராயுடு ஆகியோரை டிரான்ஸ்பர் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

UAEஇல் வேலைவாய்ப்பு.. நீங்க ரெடியா?

image

Mech டிப்ளமோ, ITI படித்து அனுபவம் உள்ளவர்களுக்கு UAEஇல் தங்குமிடம், உணவுடன் வேலை உள்ளதாக தமிழ்நாடு அரசின் Overseas Manpower Corporation அறிவித்துள்ளது. வேலைகள், தகுதி, வயது வரம்பு ஆகிய விவரங்களை அறிவதற்கான இணையதளம்: www.omcmanpower.tn.gov.in தொலைபேசி எண் 044-22502267. WhatsApp எண் 9566239685. பயோ டேட்டாவை ovemclnm@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பலாம். வேலை தேடும் நண்பருக்கு இதை ஷேர் பண்ணுங்க.

News January 9, 2025

2 ஆண்டில் 355 கொலைகள்.. ஷாக் ரிப்போர்ட்

image

தென்மாவட்டங்களில் சாதி ரீதியாகவும், கோஷ்டி பூசல் போன்ற பல காரணங்களால் அடிக்கடி கொலை நடந்து வருவதால் மக்கள் அச்சத்துடனே வாழ வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில், நெல்லை சரகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 355 கொலைகள் நடந்துள்ளதாக சரக டிஐஜி மூர்த்தி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் 2023இல்179 கொலைகள், 2024இல் 176 கொலைகள் நடந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு?

News January 9, 2025

நடிகைக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு சிறை

image

மலையாள நடிகை ஹனி ரோஸ்க்கு <<15077872>>பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபர்<<>> பாபி செம்மனூரை 14 நாள்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்படவுள்ளார். முன்னதாக, நீதிமன்றத்திலேயே அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News January 9, 2025

TNPSC வரலாற்றில் முதல்முறை

image

குரூப் 4 தேர்வின் வினாக்களுக்கான இறுதி விடை குறிப்பை முதல்முறை TNPSC வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியான பின்னரே விடை குறிப்பு வெளியாகும். ஆனால், இந்த முறை குரூப் 4 விடை குறிப்பு முன்னேரே வெளியிடப்பட்டதால், மதிப்பெண்களை தேர்வர்கள் எளிதாக கணக்கிட முடியும். இனிவரும் காலங்களில் மற்ற தேர்வுகளுக்கும் இதேபோல் வெளியிட வேண்டும் என்று தேர்வர்களின் விருப்பமாக உள்ளது.

News January 9, 2025

தினசரி இதை செய்யலாம்ல…

image

➤ தினசரி 10 நிமிடம் தியானம் செய்யுங்கள்.
90% பேரை விட உங்களின் கவனக்குவிப்பு சிறப்பாக இருக்கும்.
➤ தினசரி 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள்.
90% பேரை விட நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
➤ தினசரி 20 நிமிடமாவது படியுங்கள்.
90% பேரை விட அதிகம் விஷயங்கள் அறிந்தவராக இருப்பீர்கள்.

News January 9, 2025

ஐயா.. நாங்க இன்னும் எவ்ளோதான் உழைக்கணும்?

image

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியோ வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்யுங்கள் என்கிறார். L&T சுப்பிரமணியனோ 90 மணிநேரம் என்கிறார். நீங்கள் சொல்வது போல அரைநாள் நாங்கள் அலுவலகத்திலேயே இருந்தால், எப்படி எங்களால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியும்? எனக் கேட்டு ஐடி ஊழியர்கள் சோஷியல் மீடியாவை தெறிக்க விடுகின்றனர். அப்படியே உழைத்தாலும் எங்கள் சம்பளம் உயராது எனவும் அவர்கள் கூறுகின்றனர். உங்க கருத்து என்ன?

News January 9, 2025

2024ல் ‘மெய்யழகன்’ தான் டாப்!

image

Letterboxd நிறுவனம், 2024-ல் தங்களது தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற படங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், Action/ Adventure பிரிவில் ‘மகாராஜா’ 7-ம் இடம் பிடித்துள்ளது. ‘லப்பர் பந்து’ romance பிரிவில் 6, sports பிரிவில் 3-வது இடம் பிடித்தது. Highest Rated Overall பட்டியலில் 13-வது இடம் பிடித்த ‘மெய்யழகன்’, drama பிரிவில் 6, Asian film பிரிவில் 4-வது இடத்திலும் உள்ளது. உங்களுக்கு பிடித்த படம் எது?

News January 9, 2025

இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா?

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாது என்று தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்பதால், ஈரோடு கிழக்கு தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு கொடுக்கலாம் என பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கருத்து கூறியுள்ளனர். இதை தேசிய தலைமையிடம் அண்ணாமலை கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News January 9, 2025

சஞ்சய் சம்பத் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றம்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், மறைந்த EVKS இளங்கோவனின் மகன், சஞ்சய் சம்பத் போட்டியிட வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காங்கிரஸ், தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தீர்மானத்தை தமிழக காங்கிரஸ் கட்சி தலைமைக்கு அனுப்பவும் மாவட்ட நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். இடைத்தேர்தலில் போட்டியிட சஞ்சய் சம்பத் விரும்பவில்லை எனத் தகவல் வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகிகளின் தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது.

error: Content is protected !!