News January 9, 2025
சஞ்சய் சம்பத் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், மறைந்த EVKS இளங்கோவனின் மகன், சஞ்சய் சம்பத் போட்டியிட வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காங்கிரஸ், தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தீர்மானத்தை தமிழக காங்கிரஸ் கட்சி தலைமைக்கு அனுப்பவும் மாவட்ட நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். இடைத்தேர்தலில் போட்டியிட சஞ்சய் சம்பத் விரும்பவில்லை எனத் தகவல் வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகிகளின் தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது.
Similar News
News November 10, 2025
டெல்லி செங்கோட்டையில் தீவிரவாத சதிச்செயலா?

டெல்லி செங்கோட்டை அருகே காரில் ஏற்பட்ட வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாள்களில் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இன்று 2 இடங்களில் 2900 கிலோ வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் செங்கோட்டையில் நடத்த கார் வெடி விபத்து தீவிரவாத சதிச்செயலா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News November 10, 2025
விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி… முடிவை அறிவித்தார்

அதிமுக, பாஜக கூட்டணியில் விஜய்யை சேர்க்க EPS திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், திமுக – தவெக இடையே தான் போட்டி என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். அதில், கட்சியினரை உற்சாகப்படுத்த எல்லா தலைவர்களும் இப்படித்தான் பேசுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால், அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சு நடப்பதை அவர் மறைமுகமாக உறுதி செய்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
News November 10, 2025
வட பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு பசுபிக் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக NCS தெரிவித்துள்ளது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து வெறும் 10 கி.மீ., ஆழத்தில் தான் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் ஏற்படும் ஆழமான நிலநடுக்கத்தை விட, மேற்பரப்பில் ஏற்படும் ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆபத்தானது. ஏனெனில், அவை பூமியின் மேற்பரப்பில் வலுவான அதிர்வை ஏற்படுத்தி, அதிக சேதத்தை உண்டாக்கும் என NCS தெரிவித்துள்ளது.


