India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிற நாடுகள் மீது டிரம்ப் விதிக்கும் வரிகளுக்கு எதிராக 3வது முறையாக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் டிரம்ப்பின் சொந்த கட்சியினர்(குடியரசு கட்சி) 4 பேர் அவருக்கு எதிராக வாக்களித்திருப்பதுதான் ஹைலைட். ஆனால் எந்த தீர்மானத்தையும் நிராகரிக்கும் Veto அதிகாரம் அதிபரிடம் இருக்கிறது. இதனால் டிரம்ப் இதனை நிராகரிப்பார், இது வரி விதிப்பு நடவடிக்கைகளை நிறுத்தாது என கூறப்படுகிறது.

மெல்பர்னில் நடக்கும் 2-வது T20-யில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, பும்ரா. வெல்லுமா இந்த படை?

கடந்த 2022-ல், ஏற்றுமதி சரிந்ததால் Ford நிறுவனம், TN-ல் செயல்பட்டு வந்த தனது ஆலையை மூடியது. இந்நிலையில், சமீபத்தில் CM ஸ்டாலின் அமெரிக்கா சென்றபோது, TN-ல் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க Ford நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று TN-ல் மீண்டும் தனது கார் உற்பத்தியை தொடங்குகிறது Ford. ₹3,250 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், தலைமைச் செயலகத்தில் CM முன்னிலையில் கையெழுத்தானது.

நெல்லை BJP ஆபீஸில் நயினாருடன் அதிமுக ex அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். பசும்பொன்னில் OPS, TTV, செங்கோட்டையன் ஆகிய மூவரும் இணைந்து பேட்டியளித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், அந்த மூவர் சந்திப்பால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை; ஒருநாள் பரபரப்புக்காக 3 பேரும் சந்தித்துள்ளனர் என்று விமர்சித்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச laptop வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மார்ச்சுக்குள் இலவச லேப்டாப்கள் விநியோகம் செய்யப்படும் என TN அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்களை வழங்க HP, Dell, Acer ஆகிய நிறுவனங்களுக்கு தமிழக அரசு கொள்முதல் ஆணை வழங்கியுள்ளது. laptop விநியோக திட்டத்தை தொடங்குவது குறித்து DCM உதயநிதி தலைமையிலான குழு முடிவெடுக்கும்.

டிவி ஷோவில், தான் கொல்ல திட்டமிட்டுள்ளவர்களின் லிஸ்ட்டை கொடுக்கும் சைக்கோ வில்லனிடம் இருந்து, அவர்களை விஷ்ணு விஷால் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ‘ஆர்யன்’ ✱பிளஸ்: முதல் 20 mins அட்டகாசம். விஷ்ணு விஷால், செல்வராகவன் தேர்ந்த நடிப்பால் மிரட்டுகின்றனர். ஜிப்ரானின் BGM அசத்தல் ✱பல்ப்ஸ்: 2-ம் பாதி ஸ்லோ. ஹீரோ பிளாஷ்பேக் ஒட்டவில்லை. இன்னொரு ராட்சசன் இல்லை என்றாலும், ஆர்யன் ஓரளவு ரசிக்க வைக்கிறான்.

தேசிய ஒற்றுமை தின விழா, குஜராத்தில் நடைபெற்றது. இதில், <<18156617>>அணிவகுப்புக்கு<<>> பின் பேசிய PM மோடி, காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற படேலின் கனவை காங்., மறந்து செயல்பட்டதே, காஷ்மீரின் துயரத்திற்கு காரணம் என குற்றஞ்சாட்டினார். பிரிவு 370-ஐ நீக்கியதால், காஷ்மீர் இன்று ஒன்றுபட்டுள்ளதாக கூறிய அவர், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் 30 கோடிக்கும் மேற்பட்ட LPG இணைப்புகள் உள்ளன. இதில், 10 கோடி பேர் PMUY திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிலிண்டர் வாங்குகின்றனர். இந்நிலையில், அனைத்து விதமான பயனாளிகளும் அக்.31-க்குள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் E-KYC-ஐ முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் நவம்பர் மாதத்தில் இருந்து மானிய தொகை டெபாசிட் செய்யப்படாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Hit படங்களும், ஸ்டார் படங்களும் பல மொழிகளில் வெளியாவது வழக்கம். ஆனால், மராத்தி சினிமாவில் இந்த வழக்கம் கிடையாது. இங்கு ப்ளாக்பஸ்டர்கள் அபூர்வம். ஆனால் சமீபத்தில் வெளியான ‘தசாவதார்’ படம், பிளாக்பஸ்டராக மாறியது. தற்போது இந்த படம் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு, நவ.21-ல் கேரள தியேட்டர்களில் வெளியாக உள்ளது. மராத்தி சினிமா வரலாற்றில் ஒரு படம் வேறு மொழிக்கு டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல் முறை.

பிஹாரிகளுக்கும் தமிழர்களுக்கும் PM மோடி பகையை உண்டாக்குவதாக CM ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள பிஹாரிகளை திமுகவினர் துன்புறுத்துவதாக PM கூறியது உண்மை என்ற அவர், அமைச்சர்கள் கூட பிஹாரிகளை ஏளனமாக பேசியதை தமிழக மக்கள் அறிவார்கள் என பதிவிட்டுள்ளார். மேலும், அரசு துறையில் ஊழல் நடந்திருப்பதை மடைமாற்றவே CM, PM-ஐ விமர்சிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.