India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கவர்னர் RN.ரவியை நீக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜெய்சுகின் என்பவர் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார். கவர்னரின் செயல்பாடுகள் அரசியலமைப்புக்கு எதிராக உள்ளதால் அவரை நீக்க வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கவர்னர் – TN அரசு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில், சட்டப்பேரவையில் அரசின் உரையை வாசிக்காமல் கவர்னர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்கள் வாரம் 40 மணி நேரம் வேலை செய்தே, L&T நிறுவனத் தலைவர் சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் ₹51 கோடியாக உள்ளது என MP சு.வெங்கடேசன் சாடினார். அவர் மேலும் லாபமடைய தொழிலாளர்களை 90 மணி நேரம் உழைக்கச் சொல்வதாகவும் குற்றஞ்சாட்டினார். தொழிலாளர்களின் இணையர்களை கொச்சைப்படுத்தும் துணிவை தங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த வெறியை முறிக்கவே உழைப்பாளரின் உரிமையை உலகம் போற்றிப் பாதுகாப்பதாக கூறினார்.
அரசு அலுவலகம், பள்ளிகளுக்கு அடுத்தடுத்து 8 நாள்கள் விடுமுறை வருகிறது. அதாவது, நாளை (டிச.11), நாளை மறுநாள் (டிச.12) விடுமுறை. டிசம்பர் 13ஆம் தேதி திங்கள்கிழமை வேலை நாள். பின்னர் பொங்கலையொட்டி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதையடுத்து டிசம்பர் 18 சனி, 19 ஞாயிறு ஆகிய நாள்கள் விடுமுறை ஆகும். இதனால் மாநிலத்தில் அடுத்தடுத்து 8 நாள்கள் விடுமுறை வருகிறது.
ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் இன்று வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ‘படத்த முடிச்சு விட்டீங்க’ என்கிற அர்த்தத்தில் #GameOver ஹேஷ்டேக் டிரெண்டாகிறது. தமிழ்நாட்டிலும் பெரியளவு வரவேற்பு இல்லை என்பதை Ticket Booking Screen காட்டுகிறது. இதனால் ராம் சரண் Fans வருத்தத்தில் உள்ளனர். நீங்க படம் பார்த்துவிட்டீர்களா?
பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகள் 10 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. தாம்பரம் – நாகர்கோவில், எழும்பூர் – மதுரை, எழும்பூர் – நெல்லை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கிய நிலையில், 8.10க்கே வெயிட்டிங் லிஸ்ட் வந்துவிட்டது. இதனால், முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேக்கு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இமாச்சலை சேர்ந்த வியாபாரிக்கு ரூ.210 கோடி மின்கட்டணம் கட்டக்கோரி பில் வந்துள்ளது. லலித் திமனுக்கு டிசம்பருக்கான பில் வந்தது. அதில் ரூ.210,42,08,405 செலுத்தும்படி காேரப்பட்டிருந்தது. கடந்த மாதம் ரூ.2,500 மட்டுமே செலுத்தியிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்து மின்வாரியத்திற்கு சென்று அவர் புகார் அளிக்க, தொழில்நுட்ப கோளாறு காரணம் எனத் தெரிந்தது. அது சரி செய்யப்பட்டு ரூ.4,047 செலுத்தியுள்ளார்.
பொங்கல் தொகுப்போடு ரூ.2,000 வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் பாஜக மனுத்தாக்கல் செய்துள்ளது. பாஜக மூத்த வழக்கறிஞர் ஒருவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக மனுவை விசாரிக்க வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையை ஏற்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. விரைவில் மனு மீது பரிசீலனை நடத்தப்பட்டு, விசாரணைக்கு ஏற்கப்படும் எனத் தெரிகிறது.
பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பான சட்டத்திருத்த முன்வடிவை பேரவையில் இன்று தாக்கல் செய்தார் CM ஸ்டாலின். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரமும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரமும் பேரவையில் எதிரொலிக்கும் நிலையில், குற்றங்களுக்கு மிக, மிக கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில், மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச், தனது உணவில் விஷம் கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி போடாததால் 2022 ஆஸி. ஓபனில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. ஆஸியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், ஆஸி.யில் இருந்து வெளியேற்றப்படும் முன்பு மெல்பேர்னில் தங்க வைக்கப்பட்டபோது, தனது உணவில் விஷம் கலக்கப்பட்டதாகவும், இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
பனையூரில் நடக்கும் TVK மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் நியமனம், கட்சி உட்கட்டமைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. அமைப்பு ரீதியாக 105 முதல் 110 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியான ஆடியோ குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
Sorry, no posts matched your criteria.