India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒரே இரவில் 1,000 வேலைக்கு விண்ணப்பித்து 50 வேலைக்கான Final Round வரை AI கொண்டு வந்துள்ளது. ஊழியர் உருவாக்கிய AI Bot, ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ப Resume உருவாக்கி விண்ணப்பித்துள்ளது. வேலைக்கு எடுக்கிற நிறுவனங்களும் AI பயன்படுத்துவதால் ப்ராசஸ் எளிதாக நடந்துள்ளது. அவர் தூங்கி எழுவதற்குள் 50 Interview-க்கான அழைப்பு வந்துள்ளதை பார்த்து ஆடிப் போய்விட்டார். வேலை கொடுத்தா யாருக்கு கொடுப்பாங்கன்னு தெரியல.
இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 போட்டி ஜனவரி 25ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. காலை 11 மணி முதல் நடைபெறவிருக்கும் டிக்கெட் விற்பனையில் ₹1500 முதல் ₹15,000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போட்டியை பார்க்க நீங்க போறீங்களா?
நிகில் காமத் என்பவர் நடத்தும் ‘PODCAST’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, “நான் கடவுள் அல்ல; மனிதன்தான். நானும் சில தவறுகளை செய்வேன். ஆனால், அந்த தவறுகளை தீய எண்ணத்தில் செய்வதில்லை” என மோடி கூறினார். முன்னதாக, கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் மனிதர்களை போல பிறக்கவில்லை; பரமாத்மாவால் அனுப்பப்பட்டவன் எனக் கருதுவதாக பேசியது குறிப்பிடத்தக்கது.
டிப்ரஷனை உடனே சரிசெய்ய முடியாது. ஆனால், இதையெல்லாம் follow செய்தால் உங்கள் மகிழ்ச்சியை மீட்கலாம்: *STRESS-ஐ குறையுங்கள் *தேவையான அளவு தூங்கவும் *சத்தான, உற்சாகமூட்டும் உணவுகள் சாப்பிடுங்கள் *நெகடிவ் எண்ணங்களை தவிருங்கள் *எதையும் தள்ளிப் போடாதீர் *தினசரி வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தவும் *உங்கள் உணர்வுகளை புரிந்து ஆதரவு காட்டுபவர்களுடன் தொடர்பில் இருங்கள் *மனநல கவுன்சலரிடம் ஆலோசனை பெறலாம்.
பிப்ரவரி மாதத்திற்குள் பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவர் தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தேசியத் தலைவராக உள்ள ஜேபி நட்டா, பதவிக்காலம் முடிந்து விட்டது. எனினும் தலைவராக பதவியில் தொடர்கிறார். இதையடுத்து புதிய தேசியத் தலைவரை தேர்வு செய்ய பாஜக ஆர்வம் காட்டி வருகிறது. இதேபோல், பிஹார் தேர்தலுக்கு முன்பு மத்திய அமைச்சரவை மாற்றப்படலாம் எனவும் தகவல் கூறுகிறது.
செல்போன் வெடித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பெர்ஃப்யூம் பாட்டில் வெடிக்குமா? ஆம், மும்பையில் பெர்ஃப்யூம் பாட்டில் வெடித்து கணவன், மனைவி, 2 குழந்தைகள் என 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். பெர்ஃப்யூம் பாட்டிலின் EXPIRY DATE-ஐ தீப்பற்றும் பொருட்களை கொண்டு மாற்றிய போது இச்சம்பவம் நேரிட்டதாக தெரிகிறது. பொதுவாகவே, பெர்ஃப்யூம்கள் எளிதில் தீப்பற்றக்கூடியது என்பதால் அதை பயன்படுத்தும் போது கவனம் தேவை.
டங்ஸ்டன் திட்டம் எந்த காரணத்தை கொண்டும் வராது என அண்ணாமலை உறுதியளித்துள்ளார். வரும் 17ஆம் தேதி TNக்கு வரும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனவும், மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்காததால் தான் ஏலம் விடப்பட்டதாகவும், இந்த திட்டத்தால் மத்திய அரசுக்கு ₹1 கூட வருமானம் வராது எனவும் கூறியுள்ளார்.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான சரிவை சந்தித்தன. நிஃப்டி வெறும் 86 புள்ளிகளை மட்டுமே இழந்திருந்தாலும் Indexஇல் இல்லாத பங்குகள் கடும் சரிவை சந்தித்ததாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால், இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ₹5.5 லட்சம் கோடி நஷ்டம் அடைந்துள்ளனர். டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப், கோல் இந்தியா நிறுவனங்கள் கடும் சரிவை கண்டன.
இன்றைய IREக்கு எதிரான போட்டியில் ஸ்மிருதி மந்தனா 41 ரன்களை எடுத்து, பல சாதனைகளை படைத்துள்ளார். *ODIகளில் வேகமாக 4000 ரன்கள் எடுத்த 15ஆவது வீராங்கனை. IND அளவில் 2ஆவது (முதலில் மிதாலி ராஜ்). *100க்கும் குறைவான இன்னிங்ஸ்களில் விளையாடி, இந்த சாதனையை செய்த 4ஆவது வீராங்கனை. IND அளவில் முதலிடம் (95 இன்னிங்ஸ்). *ஆடவர் கிரிக்கெட்டையும் சேர்த்தால், கோலிக்கு (93 இன்னிங்ஸ்) அடுத்த 2ம் இடத்தை பிடித்துள்ளார்.
காலனித்துவ ஆதிக்க கல்வி முறையை மாற்றவே புதிய கல்விக் கொள்கை (NEP) கொண்டு வரப்படுகிறது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். தென்மண்டல பல்கலை., VC கருத்தரங்கில் பேசிய அவர், துரதிருஷ்டவசமாக நாம் நமது பாரம்பரியத்தை இழந்துவிட்டோம். மீண்டும் முந்தைய இந்திய கல்வி முறைக்கு மாற முயற்சி செய்கிறோம் என்றார். மேலும், மனப்பாடம் செய்தல், கற்றல், தேர்வு முறை போன்றவற்றில் இருந்து NEP மாறுபடுவதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.