India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூக்கத்தை தடுக்கும் விஷயங்களை தவிர்த்தாலே இரவில் நல்ல தூக்கம் பெறலாம். அதற்கு படுக்கைக்கு செல்லும்முன்: *விளக்குகளை அணையுங்கள் *mobile, laptop பயன்படுத்துவதை நிறுத்தவும் *புத்தகம் படிக்கலாம் *இசை கேட்கலாம் *வெந்நீர் குளியல் போடலாம் *ரூம் வெப்பநிலையை குறைக்கவும் *மாலையில் உடற்பயிற்சி செய்யலாம் *பெட்டில் வசதியாக படுக்கவும் *பகல்நேர தூக்கத்தை தவிர்க்கவும்.
வாரத்திற்கு 70, 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என பேசி சர்ச்சையில் சிக்கிய Infosys நாராயண மூர்த்தி, இதை யாரும் ஊழியர்கள் மீது திணிக்க முடியாது என தெரிவித்துள்ளார். தான் முன்பு கூறியது தனிப்பட்ட கருத்து, பொது விவாதத்திற்கானது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். 40 ஆண்டுகளாக காலை 6.20க்கு அலுவலகம் சென்று இரவு 8.30 மணி வரை பணி செய்ததாகவும், அதனால் தான் பேசியதில் தவறில்லை என தெரிவித்துள்ளார்.
‘லப்பர் பந்து’ படத்தில் ஹீரோவின் முன்னால் காதலியாக நடித்த மௌனிகா, டிவி சீரியல்களில் ஹீரோவாக நடித்து வரும் சந்தோஷை கரம் பிடித்தார். இருவரின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. திருமண போட்டோக்களை மௌனிகா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். திரைபிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
போலியான அழைப்புகளால் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க, ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. வங்கி/ நிதி நிறுவனங்கள் அழைப்புக்கும் (‘1600’ தொடங்கும்), மார்க்கெட்டிங் நிறுவனங்களின் அழைப்புக்கும் ( ‘140’ தொடங்கும்) தனித்தனியே எண்களை ஒதுக்கியுள்ளது. உ-ம்: வரும் அழைப்பு 1600-ல் தொடங்கினால், அது வங்கி அழைப்பாக இருக்கும். மெசேஜ்களுக்கும் இதே எண்கள் பொருந்தும். போலி கால்களை கண்டறிய இது உதவும்.
குறுவை பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக 29,383 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசாகும் என தெரிவித்துள்ளார். இதனால், சமீபத்தில் மழையால் பாதிப்புக்குள்ளான பயிர்களுக்கும் விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறாதது குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். ODIகளில் தான் நன்றாக விளையாடியிருந்தால் அணியில் சேர்த்திருப்பார்கள் எனவும், சரியாக விளையாடாவிட்டால் தேர்வுக்குழுவின் முடிவை ஏற்றுக் கொண்டாக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதுவரை 37 ODI போட்டிகளில் விளையாடியுள்ள அவர், வெறும் 25.76 Avgல் 773 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
தயாரிப்பாளர் மனோ அக்கினேனி உடல்நலக்குறைவால் காலமானார். இவர் சுதா கொங்கராவின் முதல் படமான துரோகி, அஜித்தின் கிரீடம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். அவரது மறைவிற்கு சுதா, இந்த பூமியில் ஜொலித்தபோது நீங்கள் செய்ததைப் போல மேலே உள்ள நட்சத்திரங்களில் பிரகாசமாக பிரகாசிக்கட்டும். நீங்கள் என்னுடைய முதல் பார்வையாளர். எனது புதிய படத்தை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் மனோ! என உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘கோழி மிதிச்சு குஞ்சு சாகாது’ என்பது பழமொழி. ஆனால், ஒரு தாயின் அலட்சியத்தால், 10 வயது மகன் இறக்கக் கூடும். ஆம், அமெரிக்காவில் 48 வயது ஜெனிபர் வில்சன், தனது தத்து மகன் சொல்பேச்சு கேட்காததால் அவன் மீது ஏறி அமர்ந்துள்ளார். 154 கிகி எடையுள்ள ஜெனிபர், 5 mins அமர்ந்ததால், சிறுவன் பேச்சுமூச்சின்றி இறந்துள்ளான். குற்றவாளி ஜெனிபருக்கு, 6 ஆண்டு சிறை விதித்துள்ளது நீதிமன்றம். ஆனால், போன உயிர் திரும்புமா?
முதலிரவில், தனது கன்னித்தன்மையை கணவன் குடும்பத்தினர் சோதனை செய்ததாக ம.பி.,யில் பெண் ஒருவர் நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார். முதலிரவு அறைக்குள் நுழைந்த அவர்கள், மோசமான முறையில் சோதனை செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட மனப் பாதிப்பால், 3 மாதத்தில் கருச்சிதைவும், அடுத்ததாக 9 மாத சிசு இறந்து பிறந்ததாகவும் அப்பெண் கூறுகிறார். கன்னித்தன்மை சோதனை அறிவியலுக்கு புறம்பானது, சட்டப்படி தடை செய்யப்பட்டது.
மாநிலத்தில் ஒவ்வொரு கிராமங்களிலும் பெரிய நூலகங்களை திறக்க முடியாதவர்கள் சிறிய படிப்பகங்களையாவது தொடங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனக்கு பரிசாக வந்த 2 லட்சம் புத்தகங்களை பல்வேறு நூலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் முதற்கட்டமாக 1000 நூல்களை அழகப்பா பல்கலைக் கழகத்தில் ‘வளர் தமிழ்’ நூலகத்திற்கு கொடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.