India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சூர்யாவின் ‘ரெட்ரோ’ படம் மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் மகாராஷ்டிராவின்
கோலாப்பூரில் உள்ள மகாலக்ஷ்மி கோயிலில் சூர்யா – ஜோதிகா தம்பதியினர் பிரார்த்தனை செய்தனர். அங்கு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
வெயிலை சமாளிக்க, சம்மர் சீசன் முடியும் வரை.. தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்க ‣நொறுக்கு தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை உட்பட பழங்களை சாப்பிடுங்க ‣வாரம் இருமுறை ஆயில் பாத் எடுங்க ‣வெளியே செல்லும்போது குடையும், தண்ணீரும் வெச்சிக்கோங்க ‣காட்டன் ஆடைகளை அணியுங்க ‣காரமான உணவுகளை தவிர்க்கவும்
உ.பி.யில் பெண் ஆட்டோ டிரைவரை துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவில் 36 வயது பெண் டிரைவர், ஓட்டி வரும் ஆட்டோவில் இருவர் ஏறினர். ராணுவ வீரர்கள் என அறிமுகம் செய்து கொண்டவர்கள், டிரைவரின் மகளுக்கு ராணுவப் பள்ளியில் அட்மிஷன் வாங்கித் தருவதாக நம்ப வைத்தனர். பின் ஹோட்டலுக்கு வரவழைத்து, துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துவிட்டு தப்பினர்.
இத்தாலியில் கைதிகள், துணையுடன் உடலுறவில் ஈடுபட பாலியல் அறை திறக்கப்பட்டுள்ளது. மத்திய உம்பிரியாவை சேர்ந்த கைதி, காதலியை தனிமையில் சந்திக்க அனுமதி கோரி கோர்ட்டை நாடினார். விசாரித்த கோர்ட் சிறைக் கைதிகள் தங்களது வாழ்க்கை துணை (அ) நீண்டகால காதலர்களை 2 மணி நேரம் தனிமையில் சந்திக்க அனுமதித்துள்ளது. ஏற்கனவே பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், ஸ்பெயினில் இது நடைமுறையில் உள்ளது.
மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து துரை வைகோ நேற்று விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து இன்று நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் அவரது பதவி விலகல் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் துரை வைகோவின் பதவி விலகலை மதிமுக நிர்வாகக்குழு நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிர்வாகிகள் வலியுறுத்தலை அடுத்து, பதவி விலகலை வாபஸ் பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
SC-ஐ அவமதித்து பேசியதாக பாஜக MP-க்கள் <<16157597>>நிஷிகாந்த் துபே<<>>, தினேஷ் ஷர்மாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. கோர்ட்டை மிரட்டிவரும் தங்கள் கட்சி MP-க்களை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என அசாதுதீன் ஓவைசி கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் SC-ஐ பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக காங். குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், இது பாஜக MP-க்களின் சொந்த கருத்து என நட்டா கூறியிருந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI ) திபாகர் நாயக் (72) காலமானார். அக்கட்சியின் ஓடிசா மாநில செயலாளராக பல ஆண்டுகள் அவர் பதவி வகித்துள்ளார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு குழுப்பினராகவும் இருந்துள்ளார். CPI கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘நுவா துனி’யாவின் ஆசிரியராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு மரணமடைந்தார்.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் & ஈரோடு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் கனவுக் கன்னியாக திகழ்ந்த சில்க் ஸ்மிதா, ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். ஹிரோயினுக்கான தகுதிகள் இருந்தும், கடைசி வரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை. இந்நிலையில் திடீரென கடந்த 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் தற்காெலை செய்து கொண்டார். இதற்கு பல காரணம் கூறப்பட்டாலும், இன்னும் உண்மை வெளிவரவில்லை. மர்மம் நீடிக்கிறது.
பெங்களூரு அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியம் லிவிங்ஸ்டன் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் இன்றைய போட்டியில் அவருக்கு பதில் ரொமாரியோ ஷெப்பர்ட் களமிறக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியை பொறுத்தவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் தோல்வியை தழுவிய பெங்களூரு அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா? நீங்கள் என்ன நினைக்கிறீங்க?
Sorry, no posts matched your criteria.