India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு பனையூரில் நடைபெறவுள்ளது. தவெகவில் நகரச் செயலாளர் பதவிக்கு ₹15 லட்சம் கேட்பதாக புகார் எழுந்த நிலையில், பணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புஸ்ஸி ஆனந்த் எச்சரித்தார். நாளை நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பணம் வசூல் விவகாரம், மாவட்ட, நகர, பகுதி, ஒன்றிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, பெர்சனலாக இருந்தாலும் சரி. ஏதாவது சந்தேகம் வந்தால் நாம் முதலில் தேடுவது கூகுளைதான். ஆனால், அந்த கூகுளில் நாம் தேடவே கூடாத 4 விஷயங்கள் இருக்கின்றன. 1) வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? 2) சிறார் ஆபாசப் படங்கள் 3) சாஃப்ட்வேரை ஹேக் செய்வது எப்படி? 4) புதிய படங்களை சட்டவிரோதமாக பார்க்க கூகுளில் தேடுவது. இவற்றை தேடினாலே நாம் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.
நடிகர் மணிகண்டன் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது முதல் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும், இதற்கான கதையை கூறி ஓகே வாங்கி விட்டு, தயாரிப்பாளரை தேடி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். அதேபோல், ‘விக்ரம் வேதா’ படத்தில் மணிகண்டன் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலை.,யில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பல்கலை., வளாகத்தில் நுழைவதற்கு QR கோடுடன் கூடிய விசிட்டர் மேனேஜ்மென்ட் சிஸ்டம் அமைக்கப்படுகிறது. தேவையற்றவர்கள் உள்ளே நுழைவதை முற்றிலும் தடுக்கும் வகையில் QR Code முறை மிக விரைவில் அமலுக்கு வரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மனைவியை கொன்ற கணவன், உடல் பாகங்களை குக்கரில் வேக வைத்த <<15236731>>கொடூர சம்பவத்தில்<<>>, புதிய தகவல் வெளியாகியுள்ளது. தன் வீட்டிற்கு செல்ல வேண்டுமென மனைவி கூறியது தான், கொலைக்கு காரணம் என முதலில் கூறப்பட்டது. ஆனால், கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் உறவு இருந்ததை கண்டுபிடித்த மனைவி, அதை தட்டிக் கேட்டதால், இந்த கொடூரத்தை கணவன் செய்ததாக தற்போது கூறப்படுகிறது. ஆனால், போலீஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்த மாதம் சுக்கிரன், கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். அதே நேரத்தில், செவ்வாய் வக்ர நிலைக்கு செல்கிறார். இதனால் 5 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, ரிஷபம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். வார்த்தைகளை கவனமாக விடுங்கள். தொழிலில் கவனம் தேவை.
2025 ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட கங்குவா, Girls Will Be Girls, All We Imagine As Light, ஆடுஜீவிதம், வீர் சாவர்க்கர் படங்களில் எதுவும் தேர்வாகவில்லை. குனீத் மோங்கா கபூர், பிரியங்கா சோப்ரா தயாரித்த ‘அனுஜா’ குறும்படம், Live Action Short Film பிரிவில் இடம் பெற்றுள்ளது. 2024ல் இந்தியாவின் The Elephant Whisperers விருது வாங்கியது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டோஷூட்டுக்காக ரோஹித் PAK செல்வது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என BCCI செயலாளர் தேவஜித் தெரிவித்துள்ளார். ஆனால், ரோஹித் தங்களது நாட்டிற்கு வராமல், IND ஜெர்ஸியில் பாக்.லோகோ இடம்பெறாமல் போனால் அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என PAK முன்னாள் வீரர் பசித் அலி எச்சரித்துள்ளார். இந்தியாவில் நடக்கும் 2026 T20WCல் PAKம் இதையே செய்யும் என அவர் கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் ஜனவரி 17ஆம் தேதி ஒருநாள் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், மொத்தம் 6 நாட்கள் விடுமுறை கிடைத்தது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய, நாளை மறுநாள் சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால், அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளும் அன்றைய தினம் வழக்கம்போல் இயங்கும் என தெரிகிறது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான, ₹1.26 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டின் கீழ், சென்னை, தூத்துக்குடி, மதுரையில் உள்ள அவரது அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக சென்னை மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.