India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நடிகை விசித்ரா மூச்சுத்திணறல் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கையில் Trips ஏற்றப்பட்டிருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ள அவர், வலிகள் வாழ்க்கையை கடினமாக்கினாலும், நம் மன வலிமையை அது காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். சென்னையிலுள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நீங்க விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கூட்டணி ஆட்சி ஒத்துவராது என <<19108663>>CM ஸ்டாலின்<<>> கூறியதற்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்திருக்கிறார். இதுபற்றி மக்கள் முடிவெடுப்பார்கள் என்ற அவர், கூட்டணி ஆட்சியா, ஒரு கட்சி ஆட்சியா என்பதை 2006-லேயே முடிவெடுக்காதது காங்கிரஸின் தவறு எனவும் பதிவிட்டுள்ளார். 2006-ல் பெரும்பான்மை பெறாமல் கூட்டணி உதவியால் திமுக ஆட்சி அமைத்தபோதே ’கூட்டணி ஆட்சி’ பற்றி பேசியிருக்கவேண்டும் என மாணிக்கம் கூறுகிறார்.

தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு திருத்தியதை கண்டித்து நாளை(பிப்.12) பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதற்கு திமுகவின் தொமுச உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், நாளை பணியைப் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தமிழக அரசு சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Practical ஆக மாறிவிட்ட இன்றைய ஜெனரேஷனை ஏஞ்சலின் பிரான்சிஸின் கதை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மலேசியாவில் கிட்டத்தட்ட ₹2,500 கோடிக்கு இளவரசியாக பிறந்தவர், எளிய பின்புலத்தை சேர்ந்த ஜெடியாவை காதலித்துள்ளார். சொத்தா? காதலா? என்ற கேள்வியை தந்தை ஏஞ்சலின் முன் வைக்க, காதலரை ஏஞ்சலின் கரம் பிடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஜெடியாவை திருமணம் செய்த ஏஞ்சலின், இன்றும் காதலில் திளைத்து வாழ்ந்து வருகிறார்.

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, உ.பி.,யில் பள்ளி மாணவர்களுக்கு Albendazole மாத்திரை கொடுக்கப்பட்டது. இதனால் சுமார் 120 மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட, சிகிச்சைக்கு பிறகு அவர்கள் குணமடைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. நாடு முழுவதும் மாணவர்களுக்கு இம்மாத்திரை அளிக்கப்படும் சூழலில், மாத்திரையால் பிரச்னை இல்லை எனவும் வேறு காரணத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் விளக்கமளித்துள்ளனர்.

LIC பாலிசிதாரர்கள் தங்களின் பிரீமியத்தை எளிதில் WhatsApp மூலமே செலுத்தலாம் தெரியுமா? உங்களின் பாலிசியோடு இணைக்கப்பட்டுள்ள WhatsApp எண்ணில் இருந்து ‘89768 62090’ என்ற நம்பருக்கு ‘Hi’ என மெசேஜ் செய்யுங்க. என்ன சேவை வேண்டும் என ஆப்ஷன்கள் அடங்கிய மெசேஜ் வரும். அதில், ‘Premium due’ என்பதை தேர்வு செய்து, UPI மூலம் எளிதில் பணம் செலுத்தலாம். இந்த பயனுள்ள பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

EPS வாயில் பொய்யைத்தவிர எதுவும் வராது என அமைச்சர் சேகர் பாபு சாடியுள்ளார். பொய்யிலே பிறந்து வளர்ந்து வந்தவர் EPS என்ற அவர், செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணனிடம் கேட்டால் எடப்பாடி பழனிசாமியின் வண்டவாளம் தெரியவரும் என கூறியுள்ளார். மேலும், எதிர்க்கட்சியினர் அரண்டு போகிற அளவுக்கு இடைக்கால பட்ஜெட் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களின் பிறப்புறுப்பை முக்கியமாகத் தாக்கும் வைரஸ்களில் பாப்பிலோமா வைரஸ் (HPV) உள்ளது. HPV பிறப்புறுப்பு மருக்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை உண்டாக்குகிறது. அதேசமயம் HSV(Herpes Simplex Virus) பிறப்புறுப்பு பகுதியில் வலிமிகுந்த கொப்புளங்கள் மற்றும் புண்களை ஏற்படுத்துகிறது. எனவே பிறப்புறுப்பில் கொப்புளங்கள், புண்கள் (அ) மருக்கள் இருந்தால் தாமதிக்காமல் டாக்டரை அணுகுவது நல்லது. SHARE IT.

பாமகவும், மாம்பழமும் அன்புமணி கட்டுப்பாட்டில் இருக்கிறது, கூட்டணியும் கைகூடவில்லை என்பதால் ராமதாஸ் தரப்பு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், ராமதாஸ் தரப்பில் உள்ள அன்பழகனின் மகன் முகிலன் தலைமையில் “அய்யா பாட்டாளி மக்கள் கட்சி” என்ற புதிய கட்சி உருவாகியுள்ளதாம். தேர்தலில் அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை இறக்குவதே கட்சியின் இலக்கு என்கின்றனர்.

வந்தே மாதரம் & ஜன கண மன குறித்து மத்திய அரசு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி, அரசு விழாக்கள், ஜனாதிபதி/கவர்னர் உரைகளின் போது வந்தே மாதரத்தை முழுமையாக (3.10 நிமிடங்கள்) பாட வேண்டும். ஒரே நிகழ்ச்சியில் வந்தே மாதரம் & தேசிய கீதம் இசைக்கப்பட்டால், முதலில் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும். அது ஒலிக்கும்போது நிற்க வேண்டும். திரைப்படத்தின் நடுவில் வந்தே மாதரம் வந்தால், நிற்க வேண்டிய அவசியமில்லை.
Sorry, no posts matched your criteria.