India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TNPSC தேர்வு எழுதுவோர், இனி அதற்கான கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை, ஆன்லைன் வங்கி சேவை அல்லது கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் மட்டுமே தேர்வுக்கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை இருந்து வந்தது. அதன் மேம்பட்ட வடிவமாக, தற்போது UPI வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இனி, GPay, PhonePe மூலம் TNPSC கட்டணம் செலுத்தலாம்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் <<15968727>>4 என்கவுண்ட்டர் சம்பவங்கள் <<>>நடைபெற்றுள்ளன. தற்காப்புக்காக அல்லாமல், வேண்டுமென்றே என்கவுண்ட்டர் செய்வது மனிதாபிமானமற்ற செயல் என்ற கருத்து ஒருபுறமும், சட்டத்தை மீறுவோரை இப்படிதான் செய்ய வேண்டும் எனும் வரவேற்பு கருத்து ஒருபுறமும் நிலவுகிறது. என்கவுண்ட்டர் என்பது போலீசார் சட்டத்தை கையிலெடுக்கும் உரிமை மீறல் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உங்கள் கருத்து என்ன?
முஸ்லிம்கள் தானமாக கொடுத்த வக்ஃபு சொத்துகளை கண்காணிப்பதே வக்ஃபு வாரியம். இந்த வாரியத்தின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் திருத்தங்கள் வேண்டும் எனக் கூறி, இன்று ‘வக்ஃபு (திருத்தம்) மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆனால், இம்மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவிக்கின்றன. இந்த மசோதா பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார் ஜெய்ஸ்வால். தனது தனிப்பட்ட விஷயம் காரணமாக மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. U-19 வீரராக இருந்த காலத்தில் இருந்து ஜெய்ஸ்வால், மும்பை அணியில் விளையாடி வருகிறார்.
<<15967569>>இன்று<<>> கனமழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்: நீலகிரி, கோவை உள்ளிட்டவை. நாளை: நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, நெல்லை, குமரி. 4ஆம் தேதி: நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி. 5ஆம் தேதி: கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல்.
இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையின் கீழ் கான்ஸ்டபிள் பதவிக்கு ஒரு 133 காலிப்பணியிடங்கள் உள்ளன ✦10வது தேர்ச்சி போதும் ✦விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ✦18 முதல் 23 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் ✦விளையாட்டு துறையில் சிறந்த விளங்குபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு ✦சம்பளம் தகுதிகேற்ப ₹21,700 முதல் ₹69,100 வரை வழங்கப்படும் ✦முழு தகவலுக்கு <
கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 4 என்கவுண்ட்டர்களை போலீசார் செய்துள்ளனர். இன்று புதுச்சேரி வழிப்பறி கொள்ளையன் விஜய், கடலூரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். நேற்று மதுரையிலும் மூன்று தினங்களுக்கு முன் கம்பம் பகுதியிலும் என்கவுண்ட்டர் நடத்தப்பட்டது. அதேபோல, மார்ச் 28ஆம் தேதி செங்கல்பட்டில் ஒரு ரவுடி சுட்டுப் பிடிக்கப்பட்டார்.
சம்மரில் உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்சூட்டை அதிகரிக்கும் என்பதால் இறைச்சி வகைகள் குறிப்பாக சிக்கன், காடை வகைகளை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு வேளை உணவிலும் காய்கறிகள் இருப்பதை உறுதி செய்யுங்கள். தர்பூசணி போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்களை உண்ணுங்கள். மோர், இளநீர், லெமன் ஜூஸ் உள்ளிட்ட பானங்களை அருந்துங்கள். கூல்ட்ரிங்ஸ், காஃபி, டீயில் இருந்து தள்ளியே இருங்கள்.
கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.
வக்ஃபு திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய அரசமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களை பின்பற்ற உரிமை வழங்குகிறதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 1995ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யும் ஒன்றிய அரசின் முடிவை திரும்பபெற வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.