News April 2, 2025

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்ட்டர்

image

கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.

Similar News

News February 10, 2026

டிவி சேனலை தொடங்கும் சீமான்

image

தமிழகத்திலுள்ள திமுக (கலைஞர்), அதிமுக (நியூஸ் J), விசிக (வெளிச்சம்) என ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் தனித்தனியாக செய்தி சேனல்கள் வைத்திருக்கின்றன. இதன்மூலம் தேர்தல் பரப்புரை மற்றும் தங்களின் கொள்கைகளை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்ல முடியும். அதுபோலதான் தற்போது, ‘எங்கள் தேசம்’ என்ற பெயரில் வலை தொலைக்காட்சியை பிப்.14-ம் தேதி சீமான் தொடங்கி வைக்கிறார். இது TV சேனலாக உருவெடுக்கிறது.

News February 10, 2026

EPS கோரிக்கையால் மோடி ராஜதந்திரம்

image

இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் மூலம் திருப்பூர் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் EPS தொடர் கோரிக்கை வைத்தார். தற்போது மோடி, டிரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்துள்ளார். இதனால், திருப்பூர் தொழிலாளர்கள் இனி சுகமாக இருப்பார்கள்; மக்களின் வாழ்வாதாரமும் சிறப்பாக இருக்கும் என்றார்.

News February 10, 2026

பியூஷ் கோயல் மீது திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்

image

மாநிலங்களவையில் பியூஷ் கோயல் மீது திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார். பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு. ஆனால், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்களிடம் பியூஷ் கோயல் பேசியது நாடாளுமன்ற மரபுகளையும், அவையின் உரிமையும் மீறும் செயல் என அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!