India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆண்களில் இனப்பெருக்கத்திற்கு பங்களிக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் ‘YCT-529’ கருத்தடை மாத்திரையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இம்மாத்திரையை எலிகள் மீது சோதித்தபோது, ஒரே மாதத்தில் விந்து எண்ணிக்கை 99% குறைந்துள்ளது. அதே நேரத்தில், மாத்திரையின் பயன்பாட்டை நிறுத்திய 6 வாரங்களுக்குப் பிறகு விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு நடத்திய ஆய்வின் படி, டாப் 9 அணு ஆயுதம் கொண்ட நாடுகள் கூட்டாக 12,331 அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன. இந்த பட்டியலில் 180 அணு ஆயுதங்களுடன் இந்தியா 6ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. 5,499 அணு ஆயுதங்களுடன் ரஷ்யா முதலிடத்தையும், 5,277 அணு ஆயுதங்களுடன் அமெரிக்கா 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. சீனா (600) 3ஆம் இடத்தையும், பாகிஸ்தான் (170) 7ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.
சவுதியின் ‘அல் நாசர்’ அணியில் இருக்கும் ரொனால்டோ, கிளப் உலககோப்பை தொடரில் வேறோரு அணிக்காக விளையாட இருக்கிறார். ‘பிபா’ அணிகளின் ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்கள் மற்ற கிளப் அணிகள் சேர்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கவுள்ளது. இதன் காரணமாகவே, ரொனால்டோ தனது ‘அல் நாசர்’ அணி, ஒப்பந்ததை இன்னும் புதுப்பிக்காமல் வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அவர் எந்த அணிக்காக களமிறங்குவார் என நீங்க நினைக்கிறீங்க?
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திண்டுக்கல், தேனி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிமுக தலைவர்கள் அடுத்தடுத்து பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருவது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை என அதிமுக தரப்பில் மறுத்தாலும், ஆமாம் பேசி வருகிறோம் என அமித்ஷா தடாலடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில், 2ஆம் கட்டத் தலைவர்களான C.V.சண்முகம் அமித்ஷாவையும், தம்பிதுரை நிர்மலா சீதாராமனையும் சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, மதுரை, விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதலே கனமழை வெளுத்து வாங்குகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, மழை காரணமாக வெளியே செல்ல முடியாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கேட்டு சோஷியல் மீடியாவில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது வரை எந்த மாவட்டத்திற்கும் லீவு விடப்படவில்லை.
கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, சேலம், தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.3) முதல் வரும் 5-ஆம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருங்காலத்தில் இந்தியாவின் பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குஜராத், ஹிமாச்சல், J&K பகுதிகளில் ரிக்டர் அளவு 9 என்ற வகையில் நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறுகின்றனர். டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிராவில் ரிக்டர் அளவு 8, ராஜஸ்தானில் ரிக்டர் அளவு 7 மற்றும் கர்நாடகா, தெலங்கானா, ஒடிஷா, ஆந்திரா, ம.பியில் 7க்கும் குறைவான ரிக்டர் அளவில் பதிவாகும் எனவும் கணித்துள்ளனர்.
இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 26% வரியை டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு வேளாண், கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, இந்த கூடுதல் வரிவிதிப்பால் இந்தியாவிற்கு ₹26,000 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்படும் என அவர்கள் கணித்துள்ளனர். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1% ஆகும்.
காலை செய்யும் சில நடவடிக்கைகளை நம்மை நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இருக்க உதவிடும் * காலை கடனை செய்யுங்கள், உடல் புத்துணர்ச்சி பெரும் * ஒரு கிளாஸ் தண்ணீர் பருகுங்கள், செரிமான பிரச்சனையை சரிப்படுத்தும் * சோம்பேறித்தனமாக அமர்ந்திருக்காமல், எழுந்ததுமே சில வேலைகளை செய்யுங்கள், அது ஒரு உத்வேகத்தை கொடுக்கும் * காலையில் ஊட்டச்சத்து மிக்க உணவை சாப்பிடுங்கள். அதனை பழக்கப்படுத்துங்கள்.
Sorry, no posts matched your criteria.