India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொடர்ந்து ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருப்பதும் ஒருவித போதைக்கு அடிமையான நிலை தான் என மனநல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக, brain rot (மனநல குறைபாடு) மற்றும் கண் நோய்கள் அதிகரிக்கிறதாம். குழந்தைகளில் சுறுசுறுப்பு தன்மை குறைந்து, dry eye syndrome பாதிப்பு அதிகரிக்கிறதாம். மேலும், பெரியவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை பிரச்னைகள் உண்டாகிறதாம். SHARE IT.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.3) சவரனுக்கு ₹400 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,560க்கும், சவரன் ₹68,480க்கும் விற்பனையாகிறது. நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று மீண்டும் ஏறுமுகத்தைக் கண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கம் விலை உயர்வு குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..
IPL தொடரில், சாய் சுதர்ஷன் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர், தனது கடைசி 7 IPL இன்னிங்சில் 65(39), 84*(49), 6(14), 103(51), 74(41), 63(41) & 49(36) என ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளார். GT அணிக்கு முக்கிய பங்காற்றி வரும் சாய் சுதர்ஷன், அந்த அணியின் சூப்பர்ஸ்டார் வீரராகவே மாறியுள்ளார். சுதர்ஷனை போன்ற வீரர் CSKல் இருந்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் கருப்பு பட்டை அணிந்தவாறு சட்டப்பேரவைக்கு வருகை புரிந்துள்ளனர். இந்த மசோதா நேற்று இரவு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
‘CSKவை அதன் கோட்டையிலேயே அடிச்சாச்சு.. ஈ சாலா கப் நமதே’ என RCB ஃபேன்ஸின் கொண்டாட்டம், நேற்று தலைகீழாக மாறியது. சொந்த கிரவுண்டிலேயே RCB, GTயிடம் தோல்வியடைந்தது. உடனே மற்ற டீம் ஃபேன்ஸ், இதுதான் சரியான டைம் என ‘Vintage RCB’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கலாய்க்க தொடங்கிவிட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், கிண்டலடிப்பவர்களின் டீம் இன்னும் பாய்ண்ட்ஸ் டேபிளில் RCB அணிக்கு கீழ் தான் இருக்கிறது..!
உ.பி.யில் 12 வயது சிறுவன் பக்கத்து வீட்டிற்கு விளையாட சென்றபோது, மற்ற குழந்தைகள் அவனை விரட்டி அடித்துள்ளனர். இதனால், கோபமடைந்த சிறுவன், அவ்வீட்டில் தனியாக இருந்த 6 வயது குழந்தையின் ஆணுறுப்பை கண்மூடித்தனமாக கடித்துள்ளான். ஹாஸ்பிடலில் சிகிச்சை பலனின்றி, குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளிடமும் கோபம் எல்லை மீறுகிறதே?
இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) துணை கவர்னராக பூனம் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை நியமனக்குழு அங்கீகரித்துள்ளது. இந்த பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார். தற்போது, தேசிய பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரலாக உள்ள இவர், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளிலும் அவர் இருந்து வருகிறார்.
நேற்று, GTயிடம் RCB தோல்வியடைந்து, மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது, ஒரே கிரவுண்டில் அதிக போட்டிகளை இழந்த டெல்லி அணியின் சாதனையை RCB சமன் செய்துள்ளனர். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இதுவரை RCB விளையாடிய 92 போட்டிகளில் 44ல் தோற்றுள்ளது. டெல்லி அணி, டெல்லியில் விளையாடிய 82 போட்டிகளில் 44ல் தோற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவின் மார்க்கெட்டில், விவசாயி ஒருவர் வாங்கிய கடனுக்காக கிட்னியை விற்க தயார் நூதன கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கடனுக்காக மனைவியின், இரு மகன்களின் கிட்னியையும் விற்கவும் தயார் என்றும் அவர் கூறுகிறார். இல்லையென்றால், தற்கொலை ஒன்றே தீர்வு என்றும் சொல்கிறார். தேர்தலுக்கு முன் அரசு சொன்ன விவசாய கடன் ரத்து என்பதை நம்பி தான் ஏமாந்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறையக் கூடும் என அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பங்குச் சந்தை நிபுணரான ஜான் மில்ஸ் கணித்துள்ளார். தற்போது உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று 38% வீழ்ச்சி அடையும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் $3,080க்கு விற்கப்படும் நிலையில், விரைவில் $1,820ஆகக் குறையும் என அவர் கணித்துள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.