India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏப்.6ம் தேதி PM மோடியை, EPS, OPS சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருவரும் தனித்தனியாக அவரை சந்தித்தாலும், பிரிந்து கிடக்கும் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து அதிமுக சக்திகளையும் ஒன்றிணைப்பது, அதனால் ஏற்படும் சாதகம் & பாதகம், கட்சி அதிகாரம், கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மோடி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஜெ., மறைவிற்கு பின், பிரிந்து கிடந்த OPS- EPS-ஐ மோடி தான் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான மனோஜ்குமார்(87) வயதில் காலமானார். 1992இல் பத்மஸ்ரீ, 2015ல் தாதாசாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ள அவர் தனது தேசபக்தி படங்களுக்காக ‘பாரத் குமார்’ என்ற அடைமொழியையும் பெற்றார். பாலிவுட்டில் 1960, 70களில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வந்த அவரின் மறைவிற்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
SRH அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று KKR அணியிடம் தோல்வியடைந்தது. இதன் மூலம், IPL தொடரில் தனது மிகப்பெரிய தோல்வியை அந்த அணி பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர், SRH CSK அணியிடம் கடந்த ஆண்டு 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததே ரெக்கார்டாக இருந்தது. 300 ரன்கள் விளாசப்போகும் முதல் IPL அணி என ரசிகர்கள் கருதும் அணி, தொடர்ந்து தடுமாறி வருவதற்கு என்ன காரணம் என நினைக்கிறீங்க?
மத்தியில் புதிய அரசு அமையும் போது, வக்ஃபு திருத்த மசோதா ரத்து செய்யப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாட்டைப் பிரிப்பதற்காக இந்த மசோதாவை பாஜக நிறைவேற்றியுள்ளதாகவும், புதிய அரசு அமையும் போது, மசோதாவை ரத்து செய்ய தேவையான திருத்தங்களை செய்வோம் எனவும் அவர் உறுதிபட கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மக்களவை, மாநிலங்களையில் வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியுள்ளது.
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் 20 காசுகள் விலை குறைந்து ₹4.45ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று திடீரென விலை குறைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பிற பகுதிகளில் சில்லறை விலையில் 1 முட்டை ₹5 முதல் ₹5.50 வரை விற்பனையாகிறது. உற்பத்தி அதிகரிப்பு, அதேநேரத்தில் நுகர்வு குறைவு காரணமாக இந்த விலை குறைப்பு என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவும் சூழலில் சைதை துரைசாமியின் திடீர் அறிக்கை அவருக்கே எதிராக திரும்பியுள்ளது. அதிமுக மீண்டும் ஒன்றிணைவது தொடர்பாக அவரது கருத்து கட்சியில் சிலருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் வெளிப்பாடே ‘கெஸ்ட் ரோல்’ அரசியல்வாதி என ADMK IT விங் சாடியிருந்தது. இந்நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இபிஎஸ்ஸுக்கு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
SRH அணியில் நேற்று 2வது அதிகபட்ச ஸ்கோர் அடித்த கமிண்டு மெண்டிஸ் இந்த போட்டிக்காக தனது ஹனிமூனையே ரத்து செய்துள்ளார். ஆம், அவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்று முடிந்தது. இருப்பினும், கடமை அழைத்ததால் மேட்சுக்கு வந்துவிட்டார். ஸ்பின் ஆல்ரவுண்டரான மெண்டிஸ் 20 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி 27 ரன்களை எடுத்தார். அதே போல, ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். ‘வாட் ஏ டெடிகேஷன்’
மாதம் 50,000 பேருக்கு பட்டா என்ற அளவில், வரும் டிசம்பருக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். தற்காலிகமாக நிறுத்தப்பட்ட முதியோர் ஓய்வூதியத் திட்டம், தற்போது மீண்டும் செயல்பாட்டில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரசின் திட்டங்கள் மக்களை விரைவாக சென்றடைய 50 புதிய வருவாய் குறுவட்டங்களும், 25 புதிய வருவாய் கிராமங்களும் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கிராமப்புற மக்கள் தொலைதூர பயணங்களுக்கு முன்பதிவு செய்ய வசதியாக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இ-சேவை மையங்களில் புக்கிங் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்பதிவு செய்த டிக்கெட்களை கேன்சல் செய்யவும் இ-சேவை மையங்களை அணுகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஆன்லைன் மூலமாகவும், அங்கீகரிக்கப்பட்ட செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து மக்கள் பயணித்து வருகின்றனர்.
PPF கணக்கில் வாரிசுதாரரை சேர்க்கவும், புதுப்பிக்கவும் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்துள்ளார். நிதி நிறுவனங்கள் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து தனக்கு தெரியவந்ததாகவும், எனவே, விதிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் பிரிவை நீக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இது கடந்த 2ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.